இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசிக்க / இந்த பக்கம் கணினியில் திறக்க தாமதமானால்: இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த சுட்டியை பயன்படுத்தலாம்
இத்தளத்தில் தேட :நீங்கள் வாசிக்க விரும்பும் தகவல்களை தேடி பெறலாம். கீழ்க்கண்ட பெட்டியில் உள்ளிடவும்

கிராமங்களுக்கு அரை டாக்டர் திட்டம் குறித்து மருத்துவர் அன்புமணியின் கருத்துக்கள்

24.02.2010 அன்று நான் என் வலைப்பதிவில் எழுதியிருந்ததை படித்திருப்பீர்கள்
இன்று இந்து நாளிதழில் முன்னாள் மத்திய சுகாதார துறை அமைச்சர் மருத்துவர் அன்புமணி அவர்கள் இது குறித்து எழுதியுள்ளார்
ஒரு மத்திய அமைச்சரை போலவே நானும் சிந்தித்துள்ளேன், அதுவும் நான்கு நாட்களுக்கு முன்னதாகவே என்பது மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் சிறிது நம்பிக்கையையும் அளிக்கிறது !!!

Rural MBBS என்னும் பித்தலாட்டம்

பொறியியல் துறையில் ஒருவர் வேலை பார்க்க ஐ.டி.ஐ யிலோ பாலிடெக்னிக்கிலோ படிக்கலாம் அல்லது பொறியியல் கல்லூரியில் பொறியியல் இளங்கலை (BE / B Tech) படிக்கலாம். அதே போல் மருத்துவத்துறையிலும் பல படிப்புகள் உள்ளன

மருத்துவத்துறையில் வேலை பார்க்க என்ன படிப்புகள் உள்ளன ?
  • MNA / FNA : ஆன் செவிலிய உதவியாளர் / பெண் செவிலிய உதவியாளர் : 9 மாதம் முதல் ஒரு வருடம்
  • ANM / VHN : துனை செவிலிய மாது / கிராம சுகாதார செவிலியர் : 18 மாதம்
  • GNM : செவிலியர் (பட்டயம்) : 3 1/2 வருடம் ஆதாரம் : http://www.indiannursingcouncil.org/types-nursing-programs.asp
  • B.Sc Nursing : செவிலியர் (பட்டம்) : 4 வருடம் ஆதாரம் : http://www.indiannursingcouncil.org/types-nursing-programs.asp
  • B.Pharm : மருந்தாளுனர்  : 4 வருடம்
  • MBBS : மருத்துவ இளங்கலை : 5 1/2 முதல் ஆறு வருடம் (ஆடுமாடுகளுக்கு வைத்தியம் பார்க்கும் மருத்துவர் படிப்பு ஐந்து வருடம்)
கிராமங்களில் காலியிடங்கள் உள்ளனவா ?

ஆமாம் இந்த செய்திக்குறிப்பில் உள்ளபடி
  • 8 சதவீத ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் இல்லை.
  • அதே நேரம் 39 % ஆரம்ப சுகாதாரம் நிலையங்கள் ஆய்வக உதவியாளர் இல்லை.
  • மேலும் 17.7 சதவித நிலையங்களில் மருந்தாளுனர் இல்லை.
  • இது தவிர சிறப்பு மருத்துவர்களின் பற்றாக்குறை மேலும் அதிகமாக உள்ளது  59.4% அறுவை சிகிச்சை நிபுணர்களின் பணியிடம் காலியாக உள்லது. 45% மகப்பேறு நிபுணர்களின் பணியிடங்கள், 61.1 % பொது மருத்துவ நிபுணர்களின் பணியிடங்கள், 53.8 % குழந்தை மருத்துவர்களின் பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • மொத்தத்தில் சிறப்பு மருத்துவர்களின் மொத்த பணியிடங்களில் 70.2% சதம் காலியாக உள்ளது
காலியிடம் எங்கு அதிகம் உள்ளது
  • சிறப்பு மருத்துவர் பணியிடங்களில் தான் அதிகம் காலியிடம் உள்ளது
இதை எப்படி சரிசெய்வது
  • சிறப்பு மருத்துவ படிப்பிற்கான இடங்களை அதிகப்படுத்துவன் மூலம்
மருத்துவர் பணியிடங்களில் 8 சதம் காலியாக உள்ளதே. அதை எப்படி சரி செய்ய முடியும்
  • தேர்வாணையங்கள் மூலம் தேர்வு நடத்தினால், அந்த இடங்களுக்கு ஆட்களை நிரப்பலாம்.
மருத்துவர்கள் கிராமப்புறங்களில் வேலை செய்ய மறுக்கிறார்கள் என்று குற்றம் சாட்டப்படுகிறதே
  • ஆதாரமில்லாத பொய் குற்றச்சாட்டு. தேர்வாணையத்தின் காத்திருப்பு பட்டியலில் இருப்பவர்களுக்கு வேலை அளித்தால் அவர்கள் வேலையில் சேர தயாராகவே உள்ளனர்
கிராமப்புறங்களில் பணியாற்ற 3 வருடம் மட்டுமே படித்த மருத்துவர் போதுமா
  • நகர மக்களுக்கு வைத்தியம் பார்க்க ஆறு வருடம் படிக்க வேண்டும்
  • ஆடு மாடுகளுக்கு வைத்தியம் பார்க்க ஐந்து வருடம்
  • கிராம மக்களுக்கு என்றால் மூன்று வருடம் போதுமா
என்ன கொடுமை சார் இது (சந்திரமுகி பிரபு மாடுலேஷனில் வாசித்துக்கொள்ளவும்)

நகரத்தில் செவிலியர் வேலைக்கும் தேவைப்படும் நான்கு வருட படிப்பை விட கிராமத்தில் டாக்டர் வேலைக்கு குறைந்த படிப்பு போதுமென்று கூறுவது எவ்வளவு பெரிய அக்கிரமம்

கிராமங்களில் காலியிடங்கள் உள்ளனவே ? அதை நீங்கள் மறுக்கிறீர்களா

காலியிடங்களின் எண்ணிக்கையை மறுபடியும் பார்த்தீர்களா !! கிராமங்களில் மருத்துவர் காலியிடங்களை விட மருந்தாளுனர் மற்றும் ஆய்வக உதவியாளர் காலியிடங்கள் அதிகம் உள்ளனவே. மருத்துவத்துறை மட்டுமல்ல, எந்த துறை என்றாலும், அது பள்ளிக்கூடமாகட்டும், வருவாய்த்துறையாகட்டும், தொலைபேசி துறை, அஞ்சல் துறை, வங்கிகள் என்று எந்த துறை என்றாலும் எந்த பணியிடம் என்றாலும், நகரங்களை விட கிராமங்களில் காலியிடங்கள் அதிகமாகவே உள்ளன.

இந்த ஒரு காரணத்தை (காலியிடம்) வைத்து
  • நகர டாக்டர் : கிராம டாக்டர்
  • நகர பொறியாளர் : கிராம பொறியாளர்
  • நகர வங்கி ஊழியர் : கிராம வங்கி ஊழியர்
என்று அனைத்திலும் கிராம மக்களை இரண்டாம் தர குடிமக்களாக ஆக்க முடியுமா ?? கிராம மக்களை இதை விட கேவலப்படுத்த முடியுமா

மருத்துவர்கள் படித்து முடித்து விட்டு வெளிநாடு செல்வதாக குற்றச்சாட்டு உள்ளதே

மருத்துவர்களில் சிலர் வெளிநாடு செல்வது உண்மைதான். ஆனால் படித்து முடிப்பவர்களில் வெளிநாடு செல்பவர்களில் சதவிதம் மிக மிக குறைவு. சொல்லப்போனால் வெளிநாடு செல்லும் செவிலியர்களின் சதவீதத்தை விட வெளிநாடு செல்லும் மருத்துவர்களின் சதவீதம் குறைவுதான். சந்தேகம் இருந்தால் சம்மந்தப்பட்ட துறையில் இருந்து தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் நீங்களே கேட்டு தெளிவு பெறலாம்.

சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிய மருத்துவர்கள் உள்ளனர். செவிலியர்கள் இல்லை . ஆதாரம் : http://www.hindu.com/2010/02/22/stories/2010022255590700.htm

அடிப்படை சுகாதாரம், குடும்ப நலன், சிறுநோய் வைத்தியம் ஆகியவற்றை செய்ய மருத்துவ இளங்கலை MBBS படித்த மருத்துவர் தேவையில்லை என்பதால் தான் இந்த கிராமப்புற மருத்துவர் திட்டம் என்கிறார்களே

அடிப்படை சுகாதாரம், குடும்ப நலன், சிறுநோய் வைத்தியம் ஆகியவற்றை செய்ய மருத்துவ இளங்கலை MBBS படித்த மருத்துவர் தேவையில்லை என்பது சரியான கருத்து தான். அதற்கு கிராம சுகாதார செவிலியர்கள் / செவிலியர்களே போதுமானது.

அதாவது ஏற்கனவே பணியில் இருக்கும் கிராம சுகாதார செவிலியர்களே போதுமானது. அப்படி இருக்க ஏன் புதிதாக ஒரு படிப்பு என்பது தான் இங்கு பிரச்சனையே

இங்கு 9 மாதம் முதல் ஒரு வருடம் வரை படித்த செவிலிய உதவியாளர்கள் பலர் இருக்கிறார்கள். 18 மாதம் படித்த துனை செவிலிய மாதுகள், 18 மாதம் படித்த கிராம சுகாதார செவிலியர்கள் உள்ளனர். நான்கு வருடம் BSc Nursing படித்த ஏகப்பட்ட nurseகள் இருக்கிறார்கள். அவர்களை பணியில் அமர்த்தலாமே

ஏன் புது படிப்பு என்ற கேள்விக்கு யாரிடமாவது விடை உள்ளதா

நகர மக்களுக்கு முழு டாக்டர் கிராம மக்களுக்கு அரை டாக்டர் என்ற மாற்றந்தாய் திட்டத்தை வரவேற்பவர்களுக்கு கிராம மக்கள் மேல் என்ன விரோதம் என்று தெரியவில்லை

கிராம மக்களை இதை விட கேவலப்படுத்த முடியாது
  • இது புதிய படிப்பு மட்டும் அல்ல
  • இது பாதி படிப்பு
கிராமப்புறங்கள் சாலை போடுவதற்கு ஒருவருடம் படித்த பொறியாளர் போதும் என்று யாராவது சொன்னால் உங்கள் கருத்து என்ன

கிராமப்புறங்களில் மின் விநியோகத்தை செயல்படுத்த ஒரு வருடம் படித்த பொறியாளர் போது என்றால் உங்கள் கருத்து என்ன

இன்றைய தேதியில் கிராமங்களில் போதிய மருத்துவர்கள் இல்லை. அங்கு மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்
  • அதிகம் மருத்துவக்கல்லூரிகளை உருவாக்க வேண்டும்
  • இருக்கும் மருத்துவக்கல்லூரிகளில் அதிகம் MBBS இடங்களை உருவாக்க வேண்டும்
அப்படி செய்ய அதிகம் பணம் செலவாகும் என்கிறார்களே. உள்கட்டமைப்பு வசதிகள் அதிகப்படுத்த பணம் தேவையாமே

புதிதாக அரைவேற்காடு மருத்துவர்களை உருவாக்க ஆகும் பணம் தானே இங்கும் ஆகும். சொல்லப்போனால் அதை விட குறைவாகத்தான் ஆகும். அல்லது ஏற்கனவே இருக்கும் படிப்புகளான செவிலிய உதவியாளர், துனை செவிலிய மாது, கிராம சுகாதார செவிலியர், செவிலியர் ஆகிய படிப்புகளின் இடங்களை அதிகரிக்கலாம்.

நீங்கள் ஒரு தொழிற்சாலையில் தினமும் 100 வண்ன தொலைக்காட்சியும் 100 வானொலிகளும் செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதை 200 வண்ண தொலைகாட்சிகளுடன் 100 வானொலிகள் செய்யும் தொழிற்சாலையாக மாற்ற ஆகும் செலவு (100 வண்ண தொலைகாட்சிகளுடன் 200 வானொலிகள் செய்யும் தொழிற்சாலையாக மாற்ற ஆகும் செலவு) அதிகமா, அல்லது 100 தொலைகாட்சிகள் மற்றும் 100 வானொலிகளுடன் மேலும் 100 கருப்பு வெள்ளை தொலைகாட்சிகள் செய்யும் தொழிற்சாலையாக மாற்ற உள்கட்டமைப்பு வசதிகள அமைக்க ஆகும் செலவு அதிகமா

அது தான் பொறியியல் துறையில் ஐ.டி.ஐ, பாலிடெக்னிக் எல்லாம் உள்ளனவே. பிறகு மருத்துவத்துறையில் மட்டும் மூன்று வருடம் என்றால் ஏன் எதிர்ப்பு

நல்ல கேள்வி ? ?

நீங்களே நன்றாக பாருங்கள். ஐடிஐயில் படிப்பவர்கள் பெறும் பட்டம் என்ன. கிராமப்புற பொறியாளர் Bachelor of Rural Engineering என்றா பட்டம் அளித்து நகரங்களுக்கு 4 வருடம் படித்த பொறியாளர், கிராமங்களுக்கு பொறியாளர் என்றால் இரண்டு வருடம் போதும் ஏன்றா சொல்கிறார்கள். இது வரை சொல்லவில்லை

ஆனால் இந்த Bachelor of Rural Medicine and Surgery அனுமதிக்கப்பட்டால், அனைத்து துறைகளிலும் (காலியிடங்கள் இருக்கும் அந்த சப்பை காரணத்தை காட்டி) இரு தரங்கள் உருவாகிவிடும் வாய்ப்பு உள்ளது. அனைத்திலும் கிராம மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவதை தடுக்க முடியாது

இன்று படித்து விட்டு வேலையில்லாமல் இருக்கும் செவிலியர்கள் மருந்தாளுனர்கள், சித்த மருத்துவர்கள், யுனானி மருத்துவர்கள் என்று ஏகப்பட்டவர்களை நியமிக்காமல் ஒரு புது படிப்பு - அதிலும் இவர்களை விட தகுதி குறைவான ஒரு புது படிப்பு - தேவையா

சீனாவில் வெறுங்கால் மருத்துவர்கள் என்ற முறை உள்ளதாமே ??
சீனாவில் Barefoot doctors (chìjiǎo yīshēng) என்ற திட்டம் 1968ல் நடைமுறைப்படுத்தப்பட்டது உண்மை தான். ஆனால் அந்த திட்டம் 1981 நிறுத்தப்பட்டது !!

யார் இந்த வெறுங்கால் மருத்துவர்கள். இவர்கள் எத்தனை வருடம் படித்தார்கள் ?
அவர்கள் இதற்கென்று தனியாக எதுவும் கல்லூரி சென்று படிக்கவில்லை. விவசாசியகளுக்கு குறைந்த பட்ச மருத்துவ மற்றும் முதலுதவி குறித்த பயிற்சிகள் அளிக்கப்பட்டன. அவர்கள் அடிப்படை சுகாதாரம், மற்றும் குடும்ப நலன் மற்றும் சிறுநோய் சிகிச்சை மட்டுமே அளித்தார்கள்

இந்த திட்டத்தை இங்கு இந்தியாவில் நடைமுறைப்படுத்த ஏன் எதிர்க்கிறீர்கள்
இந்த திட்டம் - இதை விட நல்ல திட்டம் - ஏற்கனவே இந்தியாவில் நடைமுறையில் இருக்கிறது !! யாரும் எதிர்க்க வில்லை

கிராமங்களில் இருக்கும் அங்கன்வாடி ஆசிரியர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் இதே பயிற்சி பெற்றவர்கள்தான். சொல்லப்போனால் கிராம சுகாதார செவிலியர்களின் பயிற்சி மற்றூம் பணியானது இந்த வெறுங்கால் மருத்துவர்களை விட் அதிகமானதே

தற்சமயம் நடைமுறைப்படுத்தப்படும் ஆஷா திட்டம் இந்த வெறுங்கால் மருத்துவர்கள் போன்றதே. மேலும் விபரங்களுக்கு இந்த சுட்டிகளை பார்கக்வும்
மருந்து அளிக்க (Prescribe செய்ய) மருத்துவர்கள் கட்டாயம் தேவையென்றும் செவிலியர்களுக்கு மருந்தை prescribe செய்ய உரிமையில்லை என்றும் அதனால் தான் இந்த புதிய அரைவேற்காடு படிப்பு ஆரம்பிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறதே

முழுப்பொய் !!

மருந்துக்களில் பல வகைகள் உள்ளன. அவற்றை ஒழுங்கு படுத்தி வெவ்வேறு பிரிவுகளாக வைத்துள்ளனர்.
  • இதில் சில மருந்துக்களை எந்த க்டையிலும் விற்கலாம். 
  • சில மருந்துக்களை மருந்து கடையில் மட்டுமே விற்க முடியும். 
  • மேலும் சில மருந்துபொருட்கள் மருத்துவரின் சீட்டு இருந்தால் மட்டுமே விற்க முடியும்.
சாதாரண மருந்துக்களை யார் வேண்டுமானாலும் அளிக்கலாம்.  எந்த வித படிப்பும் இல்லாத ஆஷாக்களே பல மருந்துக்களை நோயாளிகளுக்கு அளிக்க முடியும். 18 மாதம் படித்த கிராம சுகாதார செவிலியர்களே தடுப்பூசி போடுகிறார்கள்

BRMS படித்த ஒருவர் செய்யும் அனைத்து வேலைகளையும் தற்சமயம் ஏற்கனவே பணிபுரியும் கிராம சுகாதார செவிலியர்களும், செவிலியர்களும் செய்கிறார்கள் என்றால், பிறகு, தற்சமயம் செவிலியர்களின் படிப்பு காலமான 4 வருடத்தை விடு குறைவான காலத்திற்கு ஒரு புதிய படிப்பு திட்டத்தை ஆரம்பிக்கும் நோக்கம் தான் என்ன

அது தான் திரும்ப திரும்ப கூறிவிட்டோமே. நகரத்தில் இருப்பவர்களுக்கு செவிலியராக இருக்க படிக்கும் அளவை விட குறைவாக படித்தாலே கிராமத்தில் இருப்பவர்களுக்கு டாக்டர் ஆகி விடலாம் என்று கிராம மக்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்த தான்.

இந்த படிப்பு தமிழகத்தில் தேவையில்லை என்று தமிழக அரசு அறிவித்தது ஏன் ?

  • தமிழக கிராம மக்களுக்கு, நகர மக்களுக்கு கிடைக்கும் அதே தர மருத்துவ கவனிப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக
  • தமிழக கிராம மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படக்கூடாது என்பதற்காக

ஒரு சதவிதம் மதிப்பெண் எடுத்தாலே பொது பிரிவில் ஐ.ஐ.டியில் சேரலாம்

டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் செய்தியில் கூறியுள்ளபடி 2007ஆம் ஆண்டுக்கான ‘க்ட்-ஆஃப்' மதிப்பெண்கள்

கணிதம் : 1 சதவிதம்
பௌதிகம் : 4 சதவிதம்
வேதியியல் : 3 சதவிதம்

அதாவது
பொது வகுப்பில் தேர்ந்தெடுக்கபபட்ட மாணவர்களில், கணக்கில் குறைந்த மதிப்பெண் எடுத்தவர் எடுத்த மதிப்பெண் 1 சதவீதம்

பொது வகுப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களில், பௌதிகத்தில் குறைந்த மதிப்பெண் எடுத்தவர் எடுத்த மதிப்பெண் 4 சதவீதம்

பொது வகுப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களில், வேதியியல் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்தவர் எடுத்த மதிப்பெண் 3 சதவீதம்

ஆனால் கணக்கில் 35, பௌதிகத்தில் 40, வேதியியலில் 50 மதிப்பெண்கள் எடுத்தாலும் நீங்கள் தேர்வாவதற்கு உத்திரவாதம் கிடையாது :) :) :) :)

மேலும் விபரங்களுக்கு
பி.கு. :

  • “மெரிட்” , அதாவது இட ஒதுக்கீட்டினால் பாதிக்கப்படுவதாக ஏ.ஐ.ஐ.எம்.எஸ்., மற்றும் ஐ.ஐ.டி மாணவர்களால் கூறப்படும் மெரிட் பற்றி கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
  • இடப்பங்கீட்டை கடைபிடிக்காமல் அந்த இடங்களை முற்பட்ட வகுப்பினருக்கும் அளிக்க என்ன செய்யப்படுகிறது என்பதை அறிய இந்த மறுமொழியை பார்க்கவும் 
  • தகவல் அறியும் சட்டம் வந்தபின்னர் ஐ.ஐ.டியில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த அறிய இந்த இடுகை மற்றும் மறுமொழிகளை பார்க்கவும்

வழித்தடங்கள் 04 பிப்ரவரி 2010 : தமிழ்மணம் விருதுகள் 2009. நன்றி மற்றும் சில கருத்துக்கள் தெரிவித்தல்

தமிழ்மணம் 2009 போட்டியில் போட்டியிட்ட இரு பிரிவுகளிலும் வெற்றி பெற வைத்த சக பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் போட்டியை நடத்திய தமிழ்மண நிர்வாகத்திற்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்

பிரிவு: விளையாட்டு, உடல் ஆரோக்கியம், உடல்நலம் மற்றும் சமையல் தொடர்பான கட்டுரைகள் :
இடுகை : தாய்ப்பாலின் சிறப்புகள் தெரியுமா உங்களுக்கு : சிசேரியனும் தாய்ப்பாலும் - மூடநம்பிக்கையும் உண்மை நிலவரமும்
பரிசு : முதல் பரிசு




பிரிவு : அறிவியல், விவசாயம், சுற்றுச்சூழல், மருத்துவம், தொழில்நுட்பக் கட்டுரைகள் :
இடுகை : தடுப்பூசி தகவல்கள் : தடுப்பூசிகள் ஆபத்தானவையா!!
பரிசு : இரண்டாம் பரிசு


வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

-oOo-

போட்டியில் வெற்றி பெற்ற கோவி.கண்னன் கூறியதை போல் புதியவர்களுக்கு மேலும் வழிவிட அடுத்த (இந்த) ஆண்டு போட்டி நடைபெற்றால் அதில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன்.

-oOo-

இந்த நேரத்தில் தமிழ்மணம் நிர்வாகத்தினருக்கு சில ஆலோசனைகள் :

1. நான் முதலில் எதிர்ப்பார்த்தபடியே ஒருவர் இரு பிரிவுகளில் மட்டுமே போட்டியிட வேண்டும் என்ற விதியினால் எந்த பலனும் இருப்பதாக தெரியவில்லை.
எனவே அந்த விதியை நீக்கிவிட்டு ஒருவர் எத்தனை பிரிவுகளில் வேண்டுமென்றாலும் போட்டியிடலாம் என்று மாற்றம் செய்ய வேண்டும்
அதே நேரம்

2. ஒரு முறை வெற்றி பெற்ற ஒருவரை மீண்டும் போட்டியிடவிடாமல் தடை செய்வது என்பது சரியா என்பது விவாதத்திற்குரிய கேள்வியே

ஆனால் அவர் அந்த பிரிவில் போட்டியிடக்கூடாது என்று சட்டம் கொண்டு வருவது தவறில்லை என்றே நினைக்கிறேன்
ஒரு முறை ஒரு பிரிவில் முதல் பரிசு பெற்றவர், அதன் பிறகு அந்த பிரிவில் போட்டியிடுவதற்கு தமிழ்மணம் தடை விதிக்க வேண்டும் 
மீதியிருக்கும் பிரிவுகளில் போட்டியிடலாம்

இதன் மூலம் சில பிரிவுகளில் சிலர் மட்டுமே ஆதிக்கம் செலுத்துவதை தடுக்க முடியும் என்று நினைக்கிறேன்

3. டிசம்பர் மாதம் எழுதப்படும் இடுகைகளை போட்டியில் இணைக்க முடியவதில்லை. ஏன் அந்த மாதம் மேல் ஓரவஞ்சனை :) :)
அடுத்த வருட போட்டிக்கு டிசம்பர் 1, 2009 முதல் நவம்பர் 30, 2010 வரை உள்ள இடுகைகள் தகுதி பெறும் என்று அறிவித்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்
-oOo-

தென்னைமரங்களிலும் பனைமரங்களிலும் குலை தள்ளும் போது அதைச்சுற்றி வலைமாதிரி தென்படுவதை கிராமப்புறங்களில் பன்னாடை என்றழைக்கிறார்கள். 

இந்த பன்னாடையை இயற்கை படைத்த நோக்கம் வேறு. ஆனால் நம் மக்கள் அதை வடிகட்டியாகவே (பில்டர்) பயன் படுத்தி வந்தார்கள். (முக்கியமான கள் இறக்கும் போது, அதை வடிகட்ட இது பயன் பட்டது
  • ஆக வடிகட்டிமுடித்த பின்னர் அழுக்குகள், கசடுகள் பன்னாடையில் தங்கி விடும். அதாவது தேவையானவற்றை விட்டு விட்டு தேவையில்லாதவற்றை தக்க வைப்பதே பன்னாடையின் குணம்
  • ஆனால் முறம் இதற்கு நேர் எதிர். அது தேவையில்லாதவற்றை விட்டு விட்டு தேவையானதை தக்க வைத்துக்கொள்ளும்
-oOo-

2009 வரை மாத வருமானம் 1999 வரை உள்ளவர்களுக்கு மட்டுமே தமிழக அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மாதவருமானம் 2000 ரூபாய் மற்றும் அதற்கு மேல் உள்ளவர்கள், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற பணம் செலுத்த வேண்டும்.

இதனால் நீரிழிவு நோய்க்கு வழங்கப்படும் இன்சுலின் ஊசி பெற வேண்டுமென்றால் வருவாய் துறையினரிடம் சென்று சான்றிதழ் பெற வேண்டும் என்று சில மருத்துவமனைகளில் கூறியதாக தெரிகிறது. அதை விட கொடுமை, யாரையாவது நாய் கடித்து விட்டால் அவரிடம் கூட வருமான சான்றிதழ் பெற்றுக்கொண்டே ஊசி போடுவேன் என்று சில இடங்களில் வலியுறுத்தியுள்ளார்கள்

இந்த விதி மாற்றப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகி விட்டது.  சந்தேகமிருந்தால் மேலும் விபரங்களுக்கு http://www.tn.gov.in/tamiltngov/policynotes/announcements/health_t.pdf கோப்பினை பார்க்கவும்
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மாத வருமானம் ரூ.1999-க்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. நடப்பாண்டு முதல் வருமான வரம்பின்றி அரசு மருத்துவமனைகளில் அனைவருக்கும் இலவச சிகிச்சை அளிக்கப்படும்.
தமிழின் முக்கிய வெகுஜன ஊடகத்தில் பணிபுரியும் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த போது தான், ஊடகத்துறையில் இருக்கும் பலருக்கே இந்த மாற்றம் குறித்து தெரியவில்லை என்பதை அறிந்து கொண்டேன் !! 

மருத்துவமனைக்கு பின்னால் குப்பை கொட்டி கிடக்கிறது போன்ற புகார்களை பூதகரமாக எழுதுபவர்கள் இது போன்ற நல்ல விஷயங்களுக்கும் சிறு இடம் ஒதுக்கினால் கூட அனைவரும் பயன் பெறுவார்கள்

ஆனால் அப்படி செய்வதில்லை ! தவறுகளை மட்டுமே சுட்டிக்காட்டி பெரிதாக்கி அரசின் நல்ல திட்டங்களை, மக்களுக்கு பயன் பெறும் விஷயங்களை இருட்டடிப்பு செய்கிறார்கள் ! ஏன் ?

ஊடக்த்துறையிலும், வலைப்பதிவிலும் முறங்கள் குறைவாகவும், பன்னாடைகள் அதிகமாகவும் உள்ளதே காரணம்.

நீங்கள் முறமா, பன்னாடையா ?

புத்தகம் வருமானம், ஆதாய உரிமை, ராயல்டி பாகம் 5 - சந்தேகங்களுக்கு விடைகள்

இந்த இடுகைத்தொடரின் முதல் இடுகை
இந்த இடுகைத்தொடரின் இரண்டாவது இடுகை
இந்த இடுகைத்தொடரின் மூன்றாவது இடுகை
இந்த இடுகைத்தொடரின் நான்காவது இடுகை
முதல் நான்கு இடுகைகளையும் வாசித்து விட்டு அதன் பிறகு இந்த இடுகையை தொடர்ந்து வாசித்தால் புரிந்து கொள்வது எளிதாக இருக்கும்

இந்த இடுகைக்கு செல்லும் முன் ஒரு சிறிய மன்னிப்பு மற்றும் விளக்கம்

சென்ற இடுகையின் தலைப்பில் காப்புரிமை என்ற பதத்தை பயன் படுத்தியிருந்தேன். பதிவர் வழக்கறிஞர் சுந்தரராஜன் அவர்கள் அது தவறு என்று தெரியபடுத்தியுள்ளார்
அது காப்புரிமை இல்லை டாக்டர்!
எழுத்துக்களுக்கானது "பதிப்புரிமை".
காப்புரிமை என்பது பொருள்களுக்கானது. நாம் பயன்படுத்தும் மருந்து, மருத்துவ உபகரணங்கள் போன்ற "பொருள்"களுக்குத்தான் காப்புரிமை பதிவு செய்ய முடியும். 
எனவே காப்புரிமை - பேட்டண்ட், பதிப்புரிமை - காப்பிரைட், ஆதாய உரிமை - ராயல்டி

தவறுக்கு வருந்துகிறேன். மன்னித்து விட்டு தொடர்ந்து வாசியுங்கள்

நீங்கள் ஆதாய உரிமை பதிப்பகங்கள் தரும் என்கிறீர்கள். ஆனால் சில “பதிப்பகங்கள்” ஆசிரியர்களிடம் பணம் பெற்று புத்தகங்களை அச்சிடுகிறார்களே !! அது என்ன கணக்கு ? 

சிலர் தங்களின் எழுத்தை அச்சில் பார்க்க வேண்டும் என்று ஆவலுடன் இருப்பார்கள். ஆனால் அந்த நூல் விற்குமா விற்காதோ என்று சந்தேகம் காரணமாக பதிப்பகங்கள் அதை அச்சிட தயங்குவார்கள் எனவே ஆசிரியரிடம் பணம் பெற்றுக்கொண்டு, பதிப்பகங்கள் அந்த நூலை அச்சிடுகின்றன. ஆசிரியருக்கு பணம் அளிப்பதற்கு பதில் குறிப்பிட்ட பிரதிகளை அளித்து விடுவார்கள். அதை விற்று பணம் பெற வேண்டியது ஆசிரியரின் திறமை.

இப்போதெல்லாம் முக்கால்வாசி இப்படித்தான் நடப்பதாக உண்மைத்தமிழனின் பதிப்புலக நண்பர் ஒருவர் பற்ற வைக்கிறாரே இல்லை இது காலம் காலமாக நடைபெறுவது தான் !! எனக்கு தெரிந்து கடந்த பல வருடங்களாகவே இந்த நடைமுறை உள்ளது மனைவி தாலியை விற்று புத்தகம் போட்டேன். தா_____ விசிட்டிங் கார்டு போல் ஓசி வாங்கிட்டு போறான் என்ற புலம்பல் பலரும் கேட்டது தானே எனவே இது போன்ற சில நிகழ்வுகள் நடப்பது உண்மைதானென்றாலும் முக்கால்வாசி என்பது கண்டிப்பாக கிடையாது. பதிப்பிற்கும் அளவு எழுத தரமோ, முயற்சியோ இல்லாத வயிற்றெரிச்சல் நபர்களின் புலம்பல்கள் அவை என்று நினைக்கிறேன்

சில நேரங்களில் எந்த பதிப்பகமும் ஒரு நூலை பதிப்பிக்க தயங்கினால் நூலாசிரியர் ஆதாய உரிமை கூட வேண்டாம் என்று கூட இறங்கி வர வேண்டியிருக்கும்

பிரிண்ட் ஆன் டிமாண்ட் என்றால் என்ன 
இது குறித்து மேலும் விபரங்கள் அறிய
  • http://en.wikipedia.org/wiki/Print_on_demand
  • http://www.printondemand.com/
  • http://www.lulu.com/
பதிப்பகத்திலிருந்து புத்தகங்களை வாங்கி விற்கும் கடைகள் (ரிடேய்லர்), விற்காமல் போகும் புத்தகத்திற்கு அவர்கள்தான் நஷ்டத்தை ஏற்றுகொள்கிறார்களா? இல்லை, பதிப்பகத்திற்கு விற்காமல் போகும் புத்தகத்தை மறுபடியும் திருப்பிகொடுக்கப்படுகிறதா?

பொதுவாக பதிப்பகத்திலிருந்து புத்தகங்களை வாங்கி விற்பவர்கள் (கடைக்காரர்கள்) முதலிலேயே காசு தருவதில்லை. புத்தகம் விற்றபின்னர் தான் தருகிறார்கள்

எனவே அவர்களுக்கு நஷ்டம் என்று எதுவும் கிடையாது

பொதுவாக இவர்கள் பணம் செலுத்தாமல் வாங்கி இருப்பதால் திருப்பி அனுப்புவதில்லை

சில நேரங்களில் ஒரு கடையில் விற்று தீர்ந்து விட்டது. மற்றொரு ஊரில் விற்க வில்லை என்றால் பதிப்பகம் அதை மாற்றி விடுவதுண்டு

ஒரு புத்தகம் எத்தனை பிரதிகள் விற்றிருக்கின்றன என்பதை பதிப்பாளர், எழுத்தாளர் எப்படி உறுதிப்படுத்திக்கொள்கிறார்கள்?
  • கடைக்காரர் சொல்வதை வைத்து பதிப்பாளர் கணக்கிடுகிறார்
  • பதிப்பாளர் சொல்வதை ஆசிரியர் நம்புகிறார்
பதிப்பாளர் அந்த புள்ளிவிவரங்கள் அடிப்படையிலேதானே எழுத்தாளருக்கான பங்கைப் பிரித்துக்கொடுக்க முடியும்!
  • பல நேரம் அந்த புள்ளிவிபரங்களின் அடிப்படையில் தான்
  • ஆனால் சில பதிப்பாளர்கள் “சொந்த புள்ளி விபரங்களின்” அடிப்படையில் எழுத்தாளருக்கான பங்கை பிரிப்பது தான் பிரச்சனை !!
அதோடு, பதிப்பாளரிடமிருந்து வாங்கிய விற்பனையாளர்கள் எவ்வளவு நாட்களுக்கு ஒரு நூலை 'போணியாகிவிடும்' என்று நம்பி வைத்துக்கொண்டிருப்பார்? அல்லது ஒரு குறிப்பிட்ட புத்தகம் 'போணியாகவில்லையென்றால்' திருப்பி அனுப்பிவிடுவாரா? அப்படியென்றால் எத்தனை நாட்களுக்குள்?

பெரும்பாலான புத்தகங்களுக்கு நாள் கணக்கு கிடையாது

// அல்லது ஒரு குறிப்பிட்ட புத்தகம் 'போணியாகவில்லையென்றால்' திருப்பி அனுப்பிவிடுவாரா?//

சில புத்தகங்கள் மட்டுமே திரும்பி அனுப்பப்படும்
உதாரணம் பாடப்புத்தகங்கள்

// அப்படியென்றால் எத்தனை நாட்களுக்குள்?//

இது புத்தகத்திற்கு புத்தகம் மாறும். உதாரணமாக
  • குருபெயர்ச்சி புத்தகங்கள் அடுத்த குருபெயர்ச்சிக்கு பிறகு விற்காது (1 வருடம்) அடுத்த பெயர்ச்சிக்கான பலன் புத்தகம் வந்து விடுமே
  • சனி பெயர்ச்சி என்றால் இரண்டரை வருடம்
ஆசிரியர், விபரமில்லாமல் எவ்வளவு மொக்கையாக எழுதினாலும் அல்லது படு அறிவுப்பூர்வமாக சிந்தனையுடன் கடின உழைப்பில் நற்கருத்துச்செரிவுடன் எழுதினாலும் இதே பத்து சதம்தானாஜி?

ஆமாம் ஜி
  • ஆனால் மொக்கை ஆசிரியர் 1000 பிரதிகள் விற்கும்
  • நற்கருத்து செரிவுடன் எழுதினால் 10000 பிரதிகள் விற்கும்
அதைப்பொருத்து ஆசிரியருக்கு வரும் தொகை மாறும் அல்லவா

அடுத்து வரும் இடுகைகளில் நாம் கீழ்க்கண்ட கருத்துக்களை விவாதிப்போம்
  • இணையம் எந்த வகையில் பதிப்பகங்களை பாதித்துள்ளது
  • இணையத்தினால் பதிப்பகங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் யாவை
  • இணையத்தினால் பதிப்பகங்கள் பெற்ற பலன்கள் யாவை
  • ஒருவர் எந்த நோக்கத்திற்காக புத்தகம் எழுதுகிறார் 
அடுத்து வரும் இடுகைகளில் பதில் அளிக்கப்பட உள்ள வாசகர் கேள்விகள்
  • பதிவர் சந்திரமுகி : இந்த விகிதாசாரத்தின் அடிப்படையில் 100 ரூபா புத்தகத்தில் 70%, 80% வீதம் செலவுகள் என்பதைக் காட்டுக்கிறது. அதே செலவான புத்தகத்தை(மக்களின் தேவை அல்லது வரவேற்பு காரணம் அறிந்து) 200 ரூபாய்க்கு விற்றால் 120% இலாபம் கிடைக்குமே! அப்படி கிடைத்தால் அதன் இலாப அறுவடைக்காரர் பதிப்பகத்தாரா? அல்லது இருவருமா?
  • கிளியனூர் இஸ்மத் : நான் 3 புத்தகங்கள் எழுதி உள்ளேன்....அதை எந்த பதிப்பகத்தில் கொடுக்கலாம்.? அப்படி கொடுத்தால் 3 புத்தகங்களுக்கான சிலவும் நான் கொடுக்க வேண்டுமா?
    நான் சிலவு செய்து அடித்த புத்தகத்தை அந்த பதிப்பகத்தார்களே விற்பனை செய்து தருவார்களா?
    இதைப்பற்றிய விபரங்கள் சொல்லுங்களேன். 

இதுவரை கூறப்பட்டதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் கேட்கவும்.
வேறு கேள்விகள், சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள்
  • அறிந்திருந்தால் பதில் சொல்கிறேன்
  • அறியவில்லை என்றால் தெரிந்து கொண்டு விடையளிக்க முயல்கிறேன்
--தொடரும்

தமிழ்மணம் விருதுகள் போட்டியின் முதல் கட்டம் முடிந்து தற்சமயம் இரண்டாம் கட்டம் நடந்து கொண்டிருக்கிறது. பயணங்கள் பதிவிலிருந்து போட்டியின் இரண்டாவது கட்டத்திற்கு தேர்வு செய்யப்பெற்ற கீழ்க்கண்ட இரு இடுகைகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளன
முதல் கட்டத்தில் வாக்களித்தது போலவே இம்முறையும் வாக்களிக்க வேண்டுகிறேன்

தமிழ்மணம் விருதுகள் நிகழ்வின் இறுதிக்கட்டமாக பதிவர்கள், வாசகர்கள் என அனைவரும் பங்கு பெறும் பொதுவாக்கெடுப்பு இப்பொழுது தொடங்கி உள்ளது. இந்த பொதுவாக்கெடுப்பு சனவரி 12ம் தேதி வரை நடைபெறும்

வாக்கெடுப்பு நடைமுறைகள்

1. இரண்டாம் கட்ட பொது வாக்கெடுப்பில் பங்கு பெற விரும்பும் பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் தமிழ்மணத்தில் ஒரு பயனர் பெயர் வேண்டும். இந்தச் சுட்டிக்கு சென்று ஒரு பயனர் பெயரை உருவாக்கி கொள்ள வேண்டும் - http://www.tamilmanam.net/login/register.php

2. பயனர் பெயரை உருவாக்கி, உங்கள் கணக்கை செயற்படுத்தியவுடன் (Account Activation) தமிழ்மணம் பயனர் கட்டுப்பாட்டகத்தில் (User Dashboard) நுழையலாம்

3.பயனர் கட்டுப்பாட்டகத்தில் தமிழ்மணம் 2009ம் ஆண்டுக்கான வாக்குச்சீட்டு இருக்கும். அதில் உங்கள் விருப்பமான இடுகைக்கு வாக்கினைச் செலுத்தலாம்

4.உங்கள் வாக்கு ரகசியமானதே. தமிழ்மணம் தனிப்பட்ட வாக்கு விவரங்களை
வெளியிடுவதில்லை என்று உறுதியளிக்கிறது.

5.கட்டுப்பாட்டகத்தில் உள்ள வாக்குச்சீட்டு மூலம் பிரிவுக்கு ஒன்றாக 16 பிரிவுகளிலும் வாக்களிக்க இயலும். சில பிரிவுகளில் மட்டுமே வாக்களிக்க விரும்புபவர்களும் எளிதாக தங்கள் வாக்கினை சமர்ப்பிக்கலாம்.

6.அளித்த வாக்கை மாற்ற நினைத்தால் உங்கள் வாக்குச்சீட்டினை சொடுக்கி காலக்கெடுவுக்குள் மீண்டும் வாக்களிக்கலாம். அப்போது முதலில் அளித்த வாக்குகள் முழுமையாக மாற்றமடையும்

முதல் பட்டதாரிகளின் தொழிற்கல்வி செலவை அரசே ஏற்கும் - சரித்திரம் படைக்கும் அறிவிப்பு

காட்சி 1 :

அப்பா, அம்மா இல்லாத திவ்யா தாத்தாவின் பொறுப்பில் வளர்ந்தார். செங்கல்பட்டுக்கு அருகில் ஒரு கிராமம். தாத்தாவுக்கு பென்ஷன் மட்டுமே வருமானம். உணவுக்கு கூட அக்கம்பக்கம் இருப்பவர்கள் உதவவேண்டிய நிலை. வாடகை வீடு. வீட்டு உரிமையாளர் மிக நல்லவர். இவர்களது நிலையறிந்து, குறைந்த வாடகை வாங்கினார்.

சூழல்தான் இப்படியே தவிர, திவ்யா படுப்பில் படுசுட்டி. அவர் படித்த மெட்ரிக்குலேஷன் பள்ளியின் நிர்வாகம், திவ்யாவுக்கு ஒரு சலுகை தர முன்வந்தது. மெட்ரிக்குலேஷனில் ஏதாவது ஒரு பாடத்தில் ’செண்டம்’ எடுத்தாலும் போதும். +1, +2 படிப்பை இலவசமாகவே வழங்குகிறோம் என்றது. திவ்யா மூன்று பாடத்தில் ‘செண்டம்’ எடுத்தார்.

+2வில் 1200க்கு 1142 மதிப்பெண். என்ஜினியரிங் படிக்க ஆசை. இவரது மதிப்பெண்ணுக்கு முன்னணிக் கல்லூரிகள் கூப்பிட்டு சீட்டு தர தயாராகவே இருந்தார்கள். ஆனால் திவ்யாவுக்கோ வயதான தாத்தாவை விட்டு, விட்டு தூரமாகச் சென்று படிக்க முடியாது. அவர் வசித்த பகுதிக்கு அருகிலேயே ஒரு தனியார் கல்லூரி இருந்தது. ஆனால் செலவு அதிகம். கையைப் பிசைந்துகொண்டு கலங்கினார் திவ்யா.

காட்சி 2 :

போடிநாயக்கனூர் கார்த்திக் கடுமையான ஏழ்மையிலும் செம்மையாக படித்தார். அவரது அப்பா சமோசா வியாபாரி. தள்ளு வண்டியில் தெரு தெருவாக சென்று சமோசா விற்பார். அப்பாவுக்கு உதவியாக கார்த்திக்கும் விடுமுறை நாட்களில் சமோசா விற்கச் செல்வதுண்டு.

+2வில் கார்த்திக்கின் மார்க் 1200க்கு 1080. இவருக்கும் என்ஜினியரிங் படிக்கவே ஆசை. சமோசா விற்று கிடைக்கும் வருமானம் வயிற்றுக்கும், வாய்க்குமே சரியாகப் போகிறது. எங்கிருந்து மகனை என்ஜினியரிங் படிக்கவைப்பது என்று யோசித்தார் அவரது அப்பா. பேசாமல் ஒரு வண்டி வாங்கி, நாமும் சமோசா வியாபாரத்தில் இறங்கி விடலாமா என்று மனதை கல்லாக்கிக் கொண்டு சிந்திக்க ஆரம்பித்தார் கார்த்திக்.

மேற்கண்ட இரு காட்சிகளிலும் சொல்லப்பட்டதைப் போல நம் நாடெங்கும் ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான திவ்யாக்களும், கார்த்திக்குகளும் இருக்கிறார்கள். காசில்லை என்பதற்காக கல்வியை கைவிடுவது எவ்வளவு கொடுமையானது?

காட்சி 1 மற்றும் காட்சி 2 இரண்டும் கற்பனையில்லை. இது நடந்து கொண்டிருப்பது தான். மேலும் விபரங்களுக்கு பதிவர் யுவகிருஷ்ணாவின் http://www.luckylookonline.com/2010/01/blog-post_02.html இடுகையை பார்க்கலாம்

ஆனால் தமிழகத்தில் இனி வரும் காலங்களில் இந்த நிலை இருக்காது. இந்த வருட ஆளுனர் உரையில் அறிவிக்கப்பட்ட பல அறிவிப்புகளில் சமூக வளர்ச்சிக்கு மிக மிக முக்கியமானதாக கருதப்பட வேண்டியது இது தான்

27. அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளிலும், மருத்துவக் கல்லூரிகளிலும், பல் மருத்துவக் கல்லூரிகளிலும், வேளாண்மைக் கல்லூரிகளிலும், கால்நடை மருத்துவக் கல்லூரிகளிலும், சட்டக் கல்லூரிகளிலும் ஒற்றைச் சாளர முறையில் சேர்க்கை பெறும் மாணவர்களில் – அவர்கள் குடும்பத்தில் இதுவரை யாரும் பட்டதாரிகளே இல்லையானால்; அந்த மாணவர்கள் தொழிற்கல்வி படிப்பதை ஊக்குவிப்பதற்காக, சாதிப்பாகுபாடின்றியும் வருமானத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமலும் வரும் கல்வியாண்டு முதல் அவர்கள் செலுத்த வேண்டிய கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்றுக்கொள்ளும்.

பாராட்டப்படவேண்டிய விஷயம்.

--


தமிழ்மணம் விருதுகள் போட்டியின் முதல் கட்டம் முடிந்து தற்சமயம் இரண்டாம் கட்டம் நடந்து கொண்டிருக்கிறது. பயணங்கள் பதிவிலிருந்து போட்டியின் இரண்டாவது கட்டத்திற்கு தேர்வு செய்யப்பெற்ற கீழ்க்கண்ட இரு இடுகைகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளன
முதல் கட்டத்தில் வாக்களித்தது போலவே இம்முறையும் வாக்களிக்க வேண்டுகிறேன்

தமிழ்மணம் விருதுகள் நிகழ்வின் இறுதிக்கட்டமாக பதிவர்கள், வாசகர்கள் என அனைவரும் பங்கு பெறும் பொதுவாக்கெடுப்பு இப்பொழுது தொடங்கி உள்ளது. இந்த பொதுவாக்கெடுப்பு சனவரி 12ம் தேதி வரை நடைபெறும்

வாக்கெடுப்பு நடைமுறைகள்

1. இரண்டாம் கட்ட பொது வாக்கெடுப்பில் பங்கு பெற விரும்பும் பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் தமிழ்மணத்தில் ஒரு பயனர் பெயர் வேண்டும். இந்தச் சுட்டிக்கு சென்று ஒரு பயனர் பெயரை உருவாக்கி கொள்ள வேண்டும் - http://www.tamilmanam.net/login/register.php

2. பயனர் பெயரை உருவாக்கி, உங்கள் கணக்கை செயற்படுத்தியவுடன் (Account Activation) தமிழ்மணம் பயனர் கட்டுப்பாட்டகத்தில் (User Dashboard) நுழையலாம்

3.பயனர் கட்டுப்பாட்டகத்தில் தமிழ்மணம் 2009ம் ஆண்டுக்கான வாக்குச்சீட்டு இருக்கும். அதில் உங்கள் விருப்பமான இடுகைக்கு வாக்கினைச் செலுத்தலாம்

4.உங்கள் வாக்கு ரகசியமானதே. தமிழ்மணம் தனிப்பட்ட வாக்கு விவரங்களை
வெளியிடுவதில்லை என்று உறுதியளிக்கிறது.

5.கட்டுப்பாட்டகத்தில் உள்ள வாக்குச்சீட்டு மூலம் பிரிவுக்கு ஒன்றாக 16 பிரிவுகளிலும் வாக்களிக்க இயலும். சில பிரிவுகளில் மட்டுமே வாக்களிக்க விரும்புபவர்களும் எளிதாக தங்கள் வாக்கினை சமர்ப்பிக்கலாம்.

6.அளித்த வாக்கை மாற்ற நினைத்தால் உங்கள் வாக்குச்சீட்டினை சொடுக்கி காலக்கெடுவுக்குள் மீண்டும் வாக்களிக்கலாம். அப்போது முதலில் அளித்த வாக்குகள் முழுமையாக மாற்றமடையும்

பதிப்புரிமை கிலோ என்ன விலை - சொந்த / நொந்த அனுபவம் - ஆசிரியர், புத்தகம், வருமானம் : பாகம் 4

இந்த இடுகைத்தொடரின் முதல் இடுகை
இந்த இடுகைத்தொடரின் இரண்டாவது இடுகை
இந்த இடுகைத்தொடரின் மூன்றாவது இடுகை
முதல் மூன்று இடுகைகளையும் வாசித்து விட்டு அதன் பிறகு இந்த இடுகையை தொடர்ந்து வாசித்தால் புரிந்து கொள்வது எளிதாக இருக்கும்

விடுமுறைக்கு ஊருக்கு சென்றிருந்த போது, தெரிந்தவர் ஒருவர் கூறினார். “புருனோ, சிசேரியன் குறித்த மூட நம்பிக்கைகள் பற்றி எழுதியிருந்தது நன்றாக இருந்தது. நான் கூட செராக்ஸ் எடுத்து தங்கச்சிக்கு அனுப்பியிருக்கேன்”

வலைத்தளத்தில் இருக்கும் கட்டுரைகளை மின்னஞ்சல் அனுப்புவது தானே வழக்கம் என்பதால் செராக்ஸ் என்றவுடன் முதலில் புரியவில்லை. அதன் பிறகு விசாரித்ததில் ஒரு வெகுசன இதழில் எனது கட்டுரை வந்துள்ளது என்ற விபரம் தெரிய வந்தது

சரிதான் என்று அந்த இதழை வாங்கி படித்தால் ஆச்சரியங்களுக்கு அளவே இல்லை. வலைப்பதிவில் எழுதிய தாய்ப்பாலின் சிறப்புகள் தெரியுமா உங்களுக்கு : சிசேரியனும் தாய்ப்பாலும் - மூடநம்பிக்கையும் உண்மை நிலவரமும் கட்டுரை வந்திருக்கிறது கட்டுரை மட்டுமல்ல, எனது பெயர் மற்றும் புகைப்படம் கூட உள்ளது. அது தவிர வாசகர் கடிதத்தில் ஒருவர் எனது மருத்துவத்தில் ரகசியங்கள் மற்றும் ரகசியங்களுக்கு விலக்குகள் குறித்த கட்டுரை நன்றாக இருந்ததாக பாராட்டியுள்ளார்.

ஆக அந்த ஒரு குறிப்பிட்ட வெளியீட்டில் மட்டுமல்ல, அதற்கு முன்னர் வந்த அந்த இதழின் வெளியீடுகளில் கூட என் கட்டுரைகள் பல வந்துள்ளன என்பதை அறிய முடிகிறது. எத்தனை என்று இது வரை நான் கணக்கெடுக்கவில்லை !!

எந்த ஒரு எழுத்தாளனுக்கும் (தமிழை பொருத்த வரை நான் எழுத்தாளனா, அல்லது வெறும் எழுதுபவன் மட்டும் தானா என்பது வேறு விஷயம்) தனது எழுத்தை அச்சில் பார்ப்பது மகிழ்ச்சிதான்

அதிலும் படைப்புகளை பல பத்திரிகைகளுக்கு அனுப்பி, அவை பிரசுரமாகுமா, ஆகாதா என்று எதிர்ப்பார்ப்புடன் தபால்காரரை எதிர்நோக்கும் சிரமம் இல்லாமல், நிராகரிப்பில்லாமல் படைப்புகள் பிரசுரமாவது கூடுதல் மகிழ்ச்சி தான்

நம் படைப்புகள் மணிகண்டன் என்றோ மணிவண்ணன் என்றோ இல்லாமல் நம் பெயரிலலேயே வெளிவருவது கண்டிப்பாக மனநிறைவு தான்

அதிலும் கூடுதலாக புகைப்படம் வேறு இடம்பெற்றிருப்பது சந்தோஷம் தான்

ஆனாலும்................
  • அனுமதி பெற்று அதன் பின்னர் வெளியிட்டிருந்தால் சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து. 
ஏனென்றால்

நான் ஒரு கட்டுரையை ஒரு பதிப்பகத்திற்கு அல்லது வெகுசன இதழுக்கு அளிக்கும் போது அந்த படைப்பு வேறு எங்கும் பிரசுரமாகவில்லை என்ற பண்புசார் ஒப்பந்தத்தின் (ஜெண்டில்மேன் அக்ரிமெண்ட்) அடிப்படையிலேயெ அவர்கள் அந்த படைப்பை பிரசுரிக்கிறார்கள். நானும் (வலைப்பதிவு தவிர) வேறு எங்கும் அந்த படைப்பை அனுப்பாததால் துணிந்து அனுப்புகிறேன்.

அப்படி இருக்கும் நிலையில் இது போல் அனுமதியோ குறைந்த பட்சம் தகவலோ கூட இல்லாமல் இப்படி வலைப்பதிவுகளில் இருந்து படைப்புகளை பிரசுரிப்பதால்
  • அந்த இதழின் ஆசிரியருக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்கலாம்
  • ஆனால் பதிவு எழுதுபவருக்கு பல பிரச்சனைகள் உள்ளன 
என்பதை வெகுசன இதழ்களின் ஆசிரியர்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனப்து எனது வேண்டுகோள் / விண்ணப்பம் !!

இதனால் தான் நான் ஏற்கனவே எனது வலைப்பதிவின் ஒவ்வொரு பக்கத்திலும் அடியில் தெளிவாக
இந்த தளத்திலுள்ள கட்டுரைகளை பத்திரிகைகளில், அல்லது இணைய இதழ்களில் மீள்பிரசுரம் செய்ய முன் அனுமதி பெறவேண்டும். அப்படி மீள்பிரசுரம் செய்தாலோ, மின்னஞ்சல் அனுப்பினாலோ தளத்தின் பெயரையும் (www.payanangal.in) ஆசிரியரின் பெயரையும் மரு.ஜா.மரியானோ அண்டோ புருனோ மஸ்கரணாஸ் (Dr.J.Mariano Anto Bruno Mascarenhas) தெளிவாக குறிப்பிடவும். மறுபதிப்பு செய்தபின் அந்த விபரத்தை அந்த குறிப்பிட்ட இடுகையின் மறுமொழியிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தெரிவிக்க வேண்டுகிறேன்.
என்று குறிப்பிட்டிருக்கிறேன்.

இந்த நிலையில் அந்த குறிப்பிட்ட வெகுசன இதழின் ஆசிரியரிடம் தொலைபேசி மூலம் பேசும் வாய்ப்பு வந்தது !! அப்பொழுது அவரிடம் படைப்புகள் வெளிவந்தால் எழுதுபவருக்கு அந்த குறிப்பிட்ட இதழ் அனுப்பப்படும் இதழியல் நடைமுறை இங்கு பரவலாக கடைபிடிக்கப்படுவது குறித்து நினைவுபடுத்தினேன். அவரும் அனுப்புவதாக கூறுனார். நான் பேசி பல வாரங்கள் ஆகிறது

இது வரை, இந்த இடுகை வெளியிடப்படுவது வரை, எனது வீட்டிற்கு இதழ்(கள்) வந்து சேரவில்லை. அடுத்த இதழ்கள் பணியில் ஈடுபட்டு உள்ளனர் என்று நினைக்கிறேன் :) :)

அது சரி, அந்த கட்டுரைக்கான ஆதாய உரிமை ??
மூச் !!

ஸ்பேசிமன் காப்பியே வரல, இதுல ராயல்டி, ராயல் காபி, ராயல் ஹார்லிக்ஸ் வேறயா ... போங்க பாஸ்

-- தொடரும்

இந்த இடுகைத்தொடரின் ஐந்தாவது இடுகை

தமிழ்மணம் விருதுகள் போட்டியின் முதல் கட்டம் முடிந்து தற்சமயம் இரண்டாம் கட்டம் நடந்து கொண்டிருக்கிறது. பயணங்கள் பதிவிலிருந்து போட்டியின் இரண்டாவது கட்டத்திற்கு தேர்வு செய்யப்பெற்ற கீழ்க்கண்ட இரு இடுகைகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளன
முதல் கட்டத்தில் வாக்களித்தது போலவே இம்முறையும் வாக்களிக்க வேண்டுகிறேன்

தமிழ்மணம் விருதுகள் நிகழ்வின் இறுதிக்கட்டமாக பதிவர்கள், வாசகர்கள் என அனைவரும் பங்கு பெறும் பொதுவாக்கெடுப்பு இப்பொழுது தொடங்கி உள்ளது. இந்த பொதுவாக்கெடுப்பு சனவரி 12ம் தேதி வரை நடைபெறும்

வாக்கெடுப்பு நடைமுறைகள்

1. இரண்டாம் கட்ட பொது வாக்கெடுப்பில் பங்கு பெற விரும்பும் பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் தமிழ்மணத்தில் ஒரு பயனர் பெயர் வேண்டும். இந்தச் சுட்டிக்கு சென்று ஒரு பயனர் பெயரை உருவாக்கி கொள்ள வேண்டும் - http://www.tamilmanam.net/login/register.php

2. பயனர் பெயரை உருவாக்கி, உங்கள் கணக்கை செயற்படுத்தியவுடன் (Account Activation) தமிழ்மணம் பயனர் கட்டுப்பாட்டகத்தில் (User Dashboard) நுழையலாம்

3.பயனர் கட்டுப்பாட்டகத்தில் தமிழ்மணம் 2009ம் ஆண்டுக்கான வாக்குச்சீட்டு இருக்கும். அதில் உங்கள் விருப்பமான இடுகைக்கு வாக்கினைச் செலுத்தலாம்

4.உங்கள் வாக்கு ரகசியமானதே. தமிழ்மணம் தனிப்பட்ட வாக்கு விவரங்களை
வெளியிடுவதில்லை என்று உறுதியளிக்கிறது.

5.கட்டுப்பாட்டகத்தில் உள்ள வாக்குச்சீட்டு மூலம் பிரிவுக்கு ஒன்றாக 16 பிரிவுகளிலும் வாக்களிக்க இயலும். சில பிரிவுகளில் மட்டுமே வாக்களிக்க விரும்புபவர்களும் எளிதாக தங்கள் வாக்கினை சமர்ப்பிக்கலாம்.

6.அளித்த வாக்கை மாற்ற நினைத்தால் உங்கள் வாக்குச்சீட்டினை சொடுக்கி காலக்கெடுவுக்குள் மீண்டும் வாக்களிக்கலாம். அப்போது முதலில் அளித்த வாக்குகள் முழுமையாக மாற்றமடையும்

தொடர்புடைய தளங்களின் தேட

Loading...