மணி கட்ட வசதியும் தகுதியும் அனுமதியும் உள்ளவர்களுக்கு மணி கட்டப்படாத பூனைதான் வசதி என்ற சூழ்நிலையில் பூனைக்கு யார் மணி கட்டுவது..........
பத்ரி, தனது பதிவில் (http://thoughtsintamil.blogspot.com/2006/10/blog-post_26.html) சில கருத்துக்களை சொல்லி இருந்தார்
//மாநிலத் தேர்தல் ஆணையரின் நியமனத்தில் சில மாறுதல்களைச் செய்யவேண்டும். //
ஆட்சியில் இருக்கும் யார் தான் தங்கள் அதிகாரத்தை குறைக்க முன் வருவார்கள். வருமான வரியும், 400 ருபாய் செல்பேசியில் பேசி விட்டு 48 ருபாய் சேவை வரியும் செலுத்தும் நான் மாறுதல்களைச் செய்யவேண்டும் என்று கூறுவேன். ஆனால் நானே முதல்வர் ஆன பின் இதை கூறுவேனா என்றால் கேள்விக்குறி.
பூனைக்கு யார் மணி கட்டுவது.... அதுவும் மணி கட்ட வசதியும் தகுதியும் அனுமதியும் உள்ளவர்களுக்கு மணி கட்டப்படாத பூனைதான் வசதி என்ற சூழ்நிலையில் பூனைக்கு யார் மணி கட்டுவது
இது ஒரு vicious cycle. http://en.wikipedia.org/wiki/Vicious_cycle