விவிலியம் என்ன சொல்கிறது என்று பார்ப்போமா.
Genesis 2:9 And out of the ground made the LORD God to grow every tree that is pleasant to the sight, and good for food; the tree of life also in the midst of the garden, and the tree of the knowledge of good and evil.அது என்ன “நன்மை மற்றும் தீமை குறித்த அறிவின் மரம்”... இதை விட ஞானப்பழம் என்ற பெயர் பொருத்தமாக உள்ளதா
Genesis 2:17 but of the tree of the knowledge of good and evil, thou shalt not eat of it; for in the day that thou eatest thereof thou shalt surely die.'
எத்தியோபியர்கள் படிக்கும் ஈனோகின் புத்தகத்தில் (31:4) இந்த மரம் குறித்து விளக்கப்பட்டிருக்கிறது. “ அது புளிய மரம் போலிருந்தது. அதன் பழங்கள் மெல்லிய திராட்சைபழங்களை போலிருந்தன, அதன் வாசனை பரவியிருந்தது”
யூதர்களின் தல்முத் என்ற புத்தகம், அந்த பழம் திராட்சை என்கிறது. மற்றொரு தல்முத கதை ஏவாள் அந்த பழத்திலிருந்து வைன் அருந்தினாள் என்கிறது. அதை அத்திப்பழம் என்றும், கோதுமை என்றும் கூட கருதுகிறார்கள்
மேல்நாட்டு ஓவியர்கள் மட்டுமே அந்த பழத்தை ஆப்பிள் ஆக்கினார்கள். (அவர்களுக்கு தெரிந்த பழம் அதுதான்). அதனால் தான் மேல் நாட்டு (ஐரோப்பிய) ஓவியங்களில் அந்த மரம் ஆப்பிள் மரமாகவும் அந்த பழம் ஆப்பிளாகவும் காட்டப்படுகின்றன. அவர்கள் (ஐரோப்பிய ஓவியர்கள்) என்ன செய்வார்கள். அவர்களுக்கு தெரிந்த பழத்தை ஓவியத்தில் வரைந்து விட்டார்கள். ஒரு வேளை ரவி வர்மா, இந்த காட்சியை வரைந்திருந்தால் தேங்காய் வரைந்திருக்கலாம்
சிலர் அந்த பழம் மாதுளை என்று கூட சொல்கிறார்கள்.
மேலும் விபரங்களுக்கு விக்கிபிடியா கட்டுரையின் சுட்டி இது தான்



23 மறுமொழிகள்:
இதே மாதிரிதானேங்க சார், கிருஸ்துமஸ் மரத்துக்கு பைன் மரத்தை உபயோகப்படுத்தும் முறையும் ஆரம்பிச்சிது. பொதுவாக ஐரோப்பாவில், அதுவும் இந்த பைன் மரத்தை அழகுப்படுத்துவதை பெரியளவில் அறிமுகப்படுத்திய ஜெர்மனியில்(அங்குள்ள மிகப் பெரிய பைன் மரக் காடுகளினால்) குளிர்காலங்களில் முக்கால்வாசி மரங்களில் இலயில்லாதக் காரணத்தால், பைன் மரங்களை அலங்கரிக்கின்றனர். ஆனால், இந்தியா போன்ற நாடுகளில் ஜாஸ்தி இலையுதிர்கால பாதிப்பு இல்லாதபோதும், ஐரோப்பியர்கள் செய்வதையே சிரமப்பட்டாவது, செய்கின்றனர். இது என்னோட தனிப்பட்ட ஒரு கருத்து. இதற்கு வேறொரு வரலாறு இருந்தால் தவறுக்கு மன்னிக்கவும்.
//ஒரு வேளை ரவி வர்மா, இந்த காட்சியை வரைந்திருந்தால் தேங்காய் வரைந்திருக்கலாம்
//
ஏன் நேந்திரம்பழம்கூட 'பல வகைகளில்' பொருந்துமே. :)
ராப் மேடம்,
பள்ளி காலத்தில் வைய்.எம்.சி.ஏவில் ஒரு நிகழ்ச்சியில் கிருஸ்துமஸ் மரத்திற்கு ஈச்ச மரம் தான் சரியான மரம் என்று பொருள் படும் வகையில் நாங்கள் நக்கலடித்திருக்கிறோம் :) :)
//ஏன் நேந்திரம்பழம்கூட 'பல வகைகளில்' பொருந்துமே. :)//
:) :) :) :)
யாருக்காவது இது புரியவில்லை என்றால் சிறிலிடம் மின்னஞ்சல் அனுப்பி கேட்டுக்கொள்ளவும் :) :)
புரூனோ சார்,
அது துரியன் பழமாகத்தான் இருக்கனும். மற்ற மற்ற சாமாச்சாரத்துக்கெல்லாம் துரியன் பழம் பலன் கொடுக்கிறது என்று தமிழ்நாட்டில் நம்புகிறார்கள். துரியன் பழத்துக்காக சிலர் 3 மாதம் வரை கூட காத்திருக்கிறார்களாமே ?
:)
ஆஹா வித்தியாசமான பார்வையா இருக்கே
முரளி கண்ணன், வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
//அது துரியன் பழமாகத்தான் இருக்கனும். மற்ற மற்ற சாமாச்சாரத்துக்கெல்லாம் துரியன் பழம் பலன் கொடுக்கிறது என்று தமிழ்நாட்டில் நம்புகிறார்கள். துரியன் பழத்துக்காக சிலர் 3 மாதம் வரை கூட காத்திருக்கிறார்களாமே ?
:)//
:) :) :)
Palaa pazhamaa irukkumooo ?
mani
Palaa pazhamaa irukkumooo ?
mani
எனக்கு தெரிஞ்சு போச்சு டாக்டர்.. எனக்கு தெரிஞ்சு போச்சு..
தினம் ஒரு ஆப்பிளை சாப்பிட்டா டாக்டர்கிட்ட போகவேணாம்னு ஒரு சொலவடை இல்லன்னா மெதுவடை இருக்கறதால நீங்க அத கட்டுடைக்க பார்க்கறீங்க. அதுக்காக இந்த பதிவை நீங்க சபை ஏத்தி ஆப்பிளை சபிக்கப்பட்ட பழமா மாத்த மாட்டேங்குறீங்க :))
அச்சச்சோ.. ஆப்பிளை வச்சு அதிகமா கதை எழுதி வச்சிருக்கேனே.. அதெல்லாம் இப்ப ஞானப்பழமா மாத்துறதுக்குள்ளே நொந்து அழுகிடுமே.. :(
தல அடிக்கடி ங்... கொய்யா...ல...ம்பாரே..
ஒருவேளை அந்த பழம் கொய்யாவா இருக்குமோ :))
//Palaa pazhamaa irukkumooo ?
mani//
இருக்கலாம் :) :)
//அச்சச்சோ.. ஆப்பிளை வச்சு அதிகமா கதை எழுதி வச்சிருக்கேனே.. அதெல்லாம் இப்ப ஞானப்பழமா மாத்துறதுக்குள்ளே நொந்து அழுகிடுமே.//
:) :) :)
//ஒருவேளை அந்த பழம் கொய்யாவா இருக்குமோ :))//
:) :) :)
எல்லா பழத்தையும் பார்ததுட்டேன், பக்தி பழத்தை தவிர. ஆகையினால் அது "பக்தி பழமாக" இருக்க வாய்ப்பிருக்கிறது.....
உங்களுக்கு பக்தி பலமா இருந்தாலோ...
நீங்களே ஒரு பக்தி பழமா இருந்தாலோ...
இந்த மாதிரி ஒரு பழத்தை கொண்டு வந்து நாரதர் வேலை பார்க்க மாட்டீங்க.
//இந்த மாதிரி ஒரு பழத்தை கொண்டு வந்து நாரதர் வேலை பார்க்க மாட்டீங்க.//
இதில் நாரதர் வேலை என்ன உள்ளது.
மேல்நாட்டு ஓவியர்கள் மட்டுமே அந்த பழத்தை ஆப்பிள் ஆக்கினார்கள்
ஏன் கிறிஸ்துவையும் ஐரோப்பியர் ஆக்கி விட்டனரே
//ஏன் கிறிஸ்துவையும் ஐரோப்பியர் ஆக்கி விட்டனரே//
ஆமாம்ல
இந்த பழம் கேள்வியை அனைவுரும் அவர்களுக்குள் கேட்டுக்கொண்டால். விரைவில் தெளிவு பிறக்கும்.
டாக்டர் ரவீந்திரநாத் என்ன சொல்றார் இந்த பழம் பற்றி?
குடுகுடுப்பை
டாக்டர் ரவீந்திரநாத்திற்கும் இந்த இடுகைக்கும் என்ன சம்மந்தம்.
கொஞ்சம் புரியும் படி கூறுங்கள்
இப்போ எதுக்காக இந்த ஆராய்ச்சி. ஏதோ ஒரு பழம் விடுங்க
persimmon பழம்தான் அந்த 'ஞானப்பழம்'ன்னு ரெண்டு மூணுவாரமுன்பு ஒரு செய்தி தினமலரில் படிச்சேனே.
எந்தெந்த ஊர்லே எந்தப் பழம் அதிகமா விளையுதோ அதது அவுங்களுக்கு ஞானப்பழம்.
சிறிலுக்கு: ஐரோப்பாவில் வாழை அதிகம் இல்லை:-))))
எங்க ஊருக்குக்குன்னு தனியா கிறிஸ்மஸ் மரம் இருக்கு.
pohutukawa or New Zealand Christmas Tree
கயல்விழி மற்றும் துளசி கோபால் மேடம்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
Post a Comment