இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசிக்க / இந்த பக்கம் கணினியில் திறக்க தாமதமானால்: இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த சுட்டியை பயன்படுத்தலாம்

Thursday, July 31, 2008

வன்முறை தடுப்பு சட்டம் குறித்த திணமனியின் தவறான தலையங்கத்திற்கு என்ன அவசரம்

இன்றைய (29 சூலை 2008) திணமனி இதழில் முற்றிலும் தவறான கருத்துக்களோடு ஒரு தலையங்கம் வந்துள்ளது. அதற்கு வரிக்கு வரி பதில்கள்
//சட்டத்திற்கு என்ன அவசரம்?//
பொருள் இழப்பு மற்றும் உயிர் இழப்பை காக்க இது அவசரமே. இது குறித்து நான் விபரமாகவே எனது இடுகைகளில் எழுதியுள்ளேன்
//ஊயிர் காக்கும் மருத்துவப் பணியில் உடுபட்டிருப்பவர்கள் சிறிய தவறுகளுக்குக்கூட தாக்கப்படுவதும், கடுமையான சட்டவிதிகளின் பேரில் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்படுவதும் நியாயமில்லைதான். //
அப்பாடா உண்மையை சொல்லீட்டீங்க
//ஆதேநேரத்தில், ஆவர்கள் ஏந்தவிதக் கட்டுப்பாடுக்கும் ஆப்பாற்பட்டவர்களாகவும், ஏத்தகைய தவறுகள் ஈழைத்தாலும் சட்டத்திற்கு ஊள்படாதவர்களாகவும் ஈருப்பது ஏன்பது ஐற்புடையதல்ல.//
தவறான தகவல். இந்த சட்டம் என்பது மருத்துவர்களோ மருத்துவமனையோ தாக்கப்படுவதற்கு எதிரானது தானே தவிர, (அதாவது அவர்களுக்கு எதிரான சட்டவிரோத நடவடிக்கைக்கு எதிரானது) அவர்களுக்கு எதிராக எடுக்கப்படும் சட்டபூர்வ நடவடிக்கைக்கு எதிரானது அல்ல
//ஆந்திர மாநிலத்தைத் தொடர்ந்து, சமீபத்தில் தமிழகத்திலும் ஆரசு ஃர் ஆவசரச் சட்டத்தின் மூலம் மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், செவி-யர்கள், செவி-ய மாணவர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்களுக்குப் பாதுகாப்பு ஆளிக்க முற்பட்டிருக்கிறது. மருத்துவ சேவையின் தரத்துக்கும், முறையான சிகிச்சைக்கும் நோயாளிகளுக்கு ஊத்தரவாதம் ஆளிக்கப்படாமல், மருத்துவர்களுக்குப் பாதுகாப்பு ஏன்பது மக்கள் விரோத நடவடிக்கையாக ஆல்லவா தெரிகிறது.//
உத்திரவாதத்திற்கு போதிய சட்டங்கள் இருக்கின்றன. மருத்துவமனைகள் வன்முறை கும்பலால் தாக்கப்படுவதை தடுக்கத்தான் இந்த சட்டம்.
//சமீபகாலமாகத் தனியார் மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள், செவி-யர் கல்லூரிகள் ஏன்று புற்றீசல்கள்போலப் பெருகிவிட்ட நிலைமை. ஆதிக மருத்துவர்களும், மருத்துவமனைகளும், பரவலாக்கப்பட்ட மருத்துவ சேவையும் ஆடிப்படைத் தேவை ஏன்பதை மறுப்பதற்கில்லை. ஆதேநேரத்தில், தரமான மருத்துவச் சேவையும், முறையான வைத்தியமும் தரப்படுவதும் முக்கியமல்லவா?//
தரமான மருத்துவச்சேவையையும், முறையான வைத்தியத்தையும் இந்த சட்டம் தடுக்க வில்லை
//மருத்துவர்களுக்கு முன்பிருந்த சேவை ஊணர்வு முற்றிலுமாக மறைந்து, ஆதை ஓரு தொழிலாக நினைத்துச் செயல்படுபவர்கள்தான் ஆதிகம். ஈந்த நிலையில் ஆவர்களைப் பாதுகாக்க ஈப்படி ஓரு சட்டம் தேவைதானா ஏன்பதுதான் கேள்வி.//
கண்டிப்பாக. உங்களுக்கு ஒரு சேவையின் மீது குறைபாடு இருந்தால் அது குறித்து விவாதியுங்கள். தவறு என்று தோன்றினால் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடருங்கள். அல்லது காவல் துறையிடம் புகார் அளியுங்கள். அதை விடுத்து மருத்துவமனையை நொறுக்குவதற்கும், பணியாளர்களை தாக்குவதற்கும் அனுமதி வேண்டும் என்று கேட்பது சரியா. அதைத்தான் இந்த சட்டம் தடுக்கிறது.
//ஆரசின் ஆவசரச் சட்டத்தின்படி, மருத்துவத் துறையைச் சேர்ந்த பதிவு செய்துள்ள டாக்டர்கள், செவி-யர்கள், மருத்துவ மற்றும் செவி-ய மாணவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்களைத் தவறான சிகிச்சை, சிகிச்சை சம்பந்தமான கருத்து வேறுபாடு மற்றும் கட்டணத்தின்மீது ஆதிருப்தி போன்றவைக்காக யாராவது தாக்க முற்பட்டால், ஆவர்கள் ஈனி ஆபராதத்துடன் மூன்று முதல் பத்து இண்டுகள் சிறைத்தண்டனை ஆனுபவிக்க வேண்டி வரும்.//
அவர்கள் ”தாக்க” முற்பட்டால் தான் தண்டனையே தவிர, அவர்கள் மருத்துவ கவுண்சிலிலோ, காவல்துறையிலோ, நுகர்வோர் நீதிமன்றத்திலோ புகார் அளிக்க எந்த தடையும் கிடையாது
// ஆதுமட்டுமல்ல, இத்திரத்தில் மருத்துவமனைக்கோ, ஆங்கிருக்கும் கருவிகளுக்கோ சேதம் ஐற்படுத்தினால் நீதிமன்றத்தின் ஊத்தரவுப்படி சேதப்படுத்தியவர் நஷ்ட உடும் கொடுக்க வேண்டும்.//
இதில் என்ன தவறு. என்ன சொல்ல வருகிறார்கள். யார் மேலாவது கோபம் வந்தால் அவர் வீட்டையோ அலுவலகத்தையோ அடித்து நொறுக்க சட்டப்படி அனுமதி கேட்கிறாரா
//முன்னாள் ஊச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி லக்கோதி ஓரு வழக்கில் வழங்கி ஈருக்கும் தீர்ப்புப்படி, ஏந்தவொரு மருத்துவரைக் கைது செய்வதற்கோ, ஆவர்மீது நடவடிக்கை ஏடுப்பதற்கோ, ஈன்னொரு தகுதி வாய்ந்த மருத்துவர், சம்பந்தப்பட்ட மருத்துவரின் சிகிச்சையில் தவறு நடந்திருக்கிறது ஏன்று எர்ஜிதம் செய்ய வேண்டும் ஏன்று கூறப்பட்டிருக்கிறது.//
இதில் என்ன தவறு
// ஆதுமட்டுமல்ல, தகுந்த காரணங்கள் ஈருந்தாலொழிய ஆவர்களை ஜாமீனில் விடுதலையாக முடியாத பிரிவுகளில் கைது செய்யக்கூடாது ஏன்றும் முந்தைய தீர்ப்புகள் பல ஈருக்கின்றன.//
இதுவும் சரிதானே
//தவறான ஆல்லது சந்தேகப்படும்படியான சூழ்நிலையில் ஓரு நோயாளி ஈறந்தால், சம்பந்தப்பட்ட மருத்துவரையோ, மருத்துவம் சார்ந்த எழியரையோ ஜாமீன் பெறக்கூடிய பிரிவுகளில்தான் கைது செய்ய வேண்டும் ஏன்கிற மருத்துவர்கள் சங்கக் கோரிக்கையில் வேண்டுமானால் நியாயம் ஈருக்கிறது. //
சரி
//இனால் தாங்கள் கைது செய்யப்படவே கூடாது, தங்களது தவறுகள் தட்டிக் கேட்கப்படக் கூடாது ஏன்று மருத்துவர்களோ, மருத்துவப் பணியாளர்களோ கோருவதை ஏப்படி ஐற்றுக் கொள்வது? //
அதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களும் அப்படி கேட்கவில்லை. தாங்கள் வன்முறை கும்பல்களால் தாக்கப்படக்கூடாது என்பதே கோரிக்கை
//ஆதை ஆரசு ஐன் ஐற்றுக் கொண்டது?//
அதை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. அரசு வன்முறைத்தாக்குதலுக்கு எதிராகத்தான் பாதுகாப்பு அளிக்கிறதே தவிர, சட்டப்படி எடுக்கப்படும் நடவடிக்கைக்கு எதிராக எந்த தடையும் கிடையாது.
//நன்கொடைகள் கொடுத்து மருத்துவப் பட்டங்கள் பெறும் மருத்துவர்களில் பலர், முறையாக மருத்துவம் கற்றவர்களா ஏன்கிற இராய்ச்சியில் நாம் ஈறங்க வேண்டாம். இனால், ஆவர்கள் ஏந்தவிதத் தவறும் செய்ய மாட்டார்கள் ஏன்பதற்கு யார் ஊத்தரவாதம் ஆளிக்க முடியும்? //
நுகர்வோர் நீதிமன்றம்
காவல்துறை
நீதிமன்றம் ஆகியவை மூலம் நடக்கும் சட்டபூர்வமான நடவடிக்கைகளில் இந்த சட்டம் தலையிடாது
//ஈன்டர்நெட்டில் படித்துத் தங்களது மருத்துவ ஆறிவை வளர்த்துக் கொண்டுள்ள நோயாளிகளின் காலம் ஈது. ஏத்தனை மருத்துவர்கள் தங்களது மருத்துவ ஆறிவை மேலும் வளர்த்துக் கொள்கிறார்கள் ஏன்பதும் கேள்விக்குரிய விஷயமாக ஈருக்கிறது./
இதற்கும் இந்த சட்டத்திற்கும் என்ன சம்மந்தம் !! அப்படி அறிவை வளர்த்துக்கொள்ளும் நோயாளிகள் செய்யும் அரைகுறை வைத்தியத்தால் நிகழும் கூத்துக்களே பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்
//ஈந்தப் பிரச்னையை முறையான பொதுச் சர்ச்சைக்கு ஊட்படுத்தி, சட்டமன்றத்தில் விவாதித்து நிறைவேற்றாமல், ஆவசரச் சட்டத்தின் மூலம் மக்கள் நல்வாழ்வுத் துறை ஆமைச்சர் நிறைவேற்றி ஈருப்பது ஐன்? //
பல மருத்துவமனைகள் தாக்கப்படுவதால். மருத்துவமனை பாதுகாப்பு சட்டம் தேவைப்பட்டது பகடிவதை (ragging) தடுப்பு, பெண்பகடி (eve teasing) தடுப்பு ஆகியவை கூட அவசரச்சட்டங்கள்தானே
//தவறான சிகிச்சைகள் ஆதிகரித்து வரும் வேளையில், வரிந்து கட்டிக்கொண்டு தமிழக ஆரசு மருத்துவர்களைக் காப்பாற்ற முனைந்திருப்பது ஐன்?//
மருத்துவமனைகளை சட்டப்படியான நடவடிக்கைகளிலிருந்து இந்த சட்டம் காப்பாற்றவில்லை. சட்ட விரோத நடவடிக்கைகளிலிருந்தே காக்கிறது
//மணப்பாறையில் பள்ளியில் படிக்கும் தனது மகனை வைத்து நோயாளிகளுக்கு ஆறுவை சிகிச்சை நடத்திய டாக்டர் தம்பதியினர் ஈந்த ஆவசரச் சட்டம் பிறப்பிக்கப்படுவதுவரை பொறுத்திருந்திருக்கலாம்.
ஆவசரப்பட்டுவிட்டார்கள்.//
அவர்கள் மீது எடுக்கப்படும் சட்டபூர்வமான நடவடிக்கைகளுக்கும் இந்த சட்டத்திற்கும் சம்பந்தம் இல்லை.

அவர்களின் மருத்துவமனை வன்முறையால் தாக்கப்படுவதை தான் இந்த சட்டம் தடுக்கலாமே தவிர சட்ட நடவடிக்கைகளை அல்ல.

சட்டத்தை படித்து பார்த்து தலையங்கள் எழுதியிருக்கலாம்
அவசரப்பட்டுவிட்டார்கள் !!!

4 மறுமொழிகள்:

venkatramanan said...

Seems you have TYPED the Dinamani Editorial to give it in Unicode.
Try http://www.jaffnalibrary.de/tools/tamilconverter.htm (Choose the Dinamani font to convert to Unicode)

Regards
Venkatramanan

புருனோ Bruno said...

வெங்கட்ரமணனன்

வருகைக்கும் தகவலுக்கும் நன்றி

அந்த எழுத்துரு மாற்றியின் பழைய பக்கத்தை உபயோகித்துள்ளேன். ஆனால் முகவரி மாறியது தெரியாது

மிக்க நன்றி

அவனும் அவளும் said...

சட்டத்த படிக்காம கூட இத விட betterá எழுதி இருக்கலாம்.

புருனோ Bruno said...

அவனும் அவளும்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

இத்தளத்தில் தேட :நீங்கள் வாசிக்க விரும்பும் தகவல்களை தேடி பெறலாம். கீழ்க்கண்ட பெட்டியில் உள்ளிடவும்

தொடர்புடைய தளங்களின் தேட

Loading...