ஆறாவது ஊதிய குழு பரிந்துரைகள் - 5 - பயணப்படி மற்றும் தினப்படி
பல விஷயங்களில் ஆறாவது ஊதியக்குழுவின் மேல் வருத்தம் இருந்தாலும், ஆறாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளில் மிக முக்கியமானதும், ஊழியர்களுக்கு மிகுந்த பலனை தரக்கூடியதும் என்னவென்றால் பயணப்படி, தினப்படி குறித்த பரிந்துரைகள்
இது குறித்து வெகுசன ஊடகங்கள் கண்டு கொள்ளவில்லை. விடுமுறைகளை குறைத்ததை கண்டித்து பேட்டி அளிப்பவர்கள் கூட இது குறித்து ஒன்றும் சொல்ல வில்லை
காரணம் என்னவென்றால் இதனால் பலன் பெறுபவர்கள் மிக மிக சிலரே !!!
சராசரியாக 0.5 % விதத்திற்கும் குறைவான அரசு ஊழியர்களே அடிக்கடி பணி நிறுத்தம் வெளி ஊர் செல்பவர்கள். அதாவது தமிழகத்தில் மொத்தம் ஐயாயிரத்திற்கும் குறைவானவர்களே. எனவே ”நமக்கு லாபம் இல்லாத ஒன்றை பற்றி ஏன் வருத்தப் பட வேண்டும்” என்று நினைத்து இருக்கலாம். மேலும் சென்னையில் (அதுவும் தலைமை செயலகத்தில்) வேலை செய்பவர்கள் இதை ஒரு பொருட்டாகவே மதிப்பது கிடையாது
என்ன பரிந்துரை என்று பார்ப்பதற்கு முன்னர் தற்பொழுதைய நிலை என்னவென்பதை பார்ப்போம். ஒரு அரசு ஊழியர் வேறொரு ஊருக்கு அலுவலக ரீதியாக சென்றால் அவருக்கு
- பயணப்படியும்
- தினப்படியும்
அளிக்கப்படும்
ஒரு அரசு ஊழியர் எதற்காக வெளியூர் செல்வார்
- பயிற்சி, கருத்தரங்கு
- ஆய்விற்காக
- சில திட்டங்களில் வேலை செய்யும் அலுவலர்கள் தகவல் மற்றும் களநிலவரம் குறித்து அறிய செல்வது
- தபால் அளிக்க, விண்ணப்ப படிவங்கள் வாங்க, மாதிரிகள் அளிக்க (கடைநிலை ஊழியர்களே பெரும்பாலும் இப்பணிக்கு அனுப்பப்படுவார்கள்)
பயிற்சி, கருத்தரங்கு போன்ற நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது பயணப்படி, தினப்படி ஆகியவை அங்கேயே தரப்படும். மேலும் தங்குமிடம் மற்றும் உணவும் பயிற்சி நடக்கும் இடத்திலேயே தரப்படும். அப்படி தரப்படாமல் கூட சில பயிற்சிகள் நடக்கும். ஆனால் பெரும்பாலும் பயிற்சிகளில் தங்குமிடம் மற்றும் உணவு ஒரு பிரச்சனையாக இருக்காது
எனவே இந்த சிக்கலில் அதிகம் பாதிக்கப்படுவது களநிலவரம் குறித்து அறிய செல்லும் அலுவலகர்களும், கடைநிலை ஊழியர்களும்தான்.
கிளை அலுவலகத்திலிருந்து முதன்மை அலுவலகத்திற்கு வரும் கடைநிலை ஊழியர்களின் பாடு மிகவும் பரிதாபத்திற்குரியது. உதாரணமாக விண்ணப்பங்கள், மாதிரிகள், பணிக்கொடை படிவங்கள் போல் என்னவென்றாலும் இவர்கள் சென்னை வந்து அதை எடுத்து போக வேண்டும்
அதாவது மதுரையிலிருக்கும் மாவட்ட கல்வி அலுவலர் / முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு தேவையான விண்ணப்பங்களை தபாலிலோ அல்லது பிற வகைகளிலோ அனுப்பலாம். ஆனால் எதையும் கடைசி நேரத்திலேயே செய்து பழக்கப்பட்ட நம் மக்கள் கடைசி நேரத்தில் ஒரு ஊழியரை கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரச்சொல்லி படிவங்களை எடுத்து வரச்சொல்வார்கள்.
உதாரணமாக ஒரு படிவத்தை ஏப்ரல் 20ஆம் தேதிமுதல் விநியோகம் செய்ய வேண்டும் என்றால், அதை ஏப்ரல் 10ஆம் தேதி அச்சிட்டு தபாலில் அனுப்பலாம். ஆனால் ஏப்ரல் 18ஆம் தேதி அச்சிட்டு தபாலில் அனுப்பினால் 20ஆம் தேதி அந்த படிவத்தை கேட்டு வருபவரிடம் எப்படி அளிப்பது. அதனால் 17ஆம் தேதி தொலைபேசி மூலம் “உங்கள் அலுவலகத்திலிருந்து கடிதத்துடன் ஒருவரை அனுப்புங்கள்” என்று எளிதாக கூறிவிடுவார்கள்.
உடனடியாக மதுரையிலிருக்கும் அலுவலக கடைநிலை ஊழியர் ஒருவரை சென்னை வரச்சொல்வார்கள். அதற்கு அவருக்கு அளிக்கப்படுவது ரயிலில் இரண்டாம் வகுப்பு கட்டணமும் ஒரு நாளைக்கு 75 ரூபாயும் மட்டுமே. இந்த 75 ரூபாயில்தான் அவர்
- 3 வேளையும் சாப்பிட வேண்டும்
- நகர் பேருந்து அல்லது ஆட்டோவில் செல்ல வேண்டும்
- தங்குமிடம் பார்க்க வேண்டும்
அதே போல் ஆய்விற்கு செல்லும் அதிகாரிகளுக்கும் சாப்பாடு மற்றும் தங்குமிடத்திற்கு 100 ரூபாய்தான். (”எனக்கு தெரியுமே, ஆய்விற்கு வருபவர்களுக்கு நாங்கள் தான் ஹோட்டலில் ரூம் போடுவோம்” அப்படி நினைப்பவர்ளுக்கு .... அதுவெல்லாம் விதிவிலக்கு - விதி வேறு)
அதே போல் பிற அலுவலகர்களும். விடுதியில் தங்குவது கட்டுப்படி ஆகாது என்பதால் ஏதாவது சொந்தக்காரர் வீட்டில் தங்க வேண்டும், அல்லது நண்பர்கள் வீட்டில் இடம் பார்க்க வேண்டும்
மருத்துவர்களை பொறுத்த வரை மருத்துவ கல்லூரிகள் இருக்கும் ஊர்கள் என்றால் பிரச்சனையே கிடையாது. கண்டிப்பாக நமது வகுப்பு தோழர், மூத்தவர் (சீனியர்), இளையவர் (ஜூனியர்) யாரவது இருப்பார்கள். நேராக கல்லூரி விடுதிக்கு சென்று விடுவோம். விடுதியில் தங்காதவர் அந்த விடுதியில் குளித்தால் இ.பி.கோ (அல்லது இ.த.ச இந்திய தண்டனை சட்டம்) விதிகளின் படி குற்றமா என்று தெரியவில்லை :) :)
நாம் செல்ல வேண்டிய அலுவலகமும் நம் உறவினர் வீடும் அருகில் இல்லையென்றாலோ, நாம் செல்லும் ஊரில் நம் உறவினர் / நண்பர் வீடு எதுவும் இல்லை என்றாலோ இரயில்நிலையங்களிலோ, பேரூந்து நிலையங்களிலோ அல்லது நாம் செல்லும் அலுவலகத்திலோ குளிக்க வேண்டியது தான்.
தொடர்வண்டி நிலையங்களில் உள்ள அறைகள் நன்றாக பராமரிக்கப்படுவதால் நான் பெரும்பாலும் அவைகளை தான் தேர்ந்தெடுப்பேன். (என் பரிந்துரை : ஒரு / இருநாள் பயணமாக வெளியூர் செல்லும் போது தொடர்வண்டியில் சென்றால் இந்த அறைகளை பயன்படுத்துங்கள். அறை பராமரிப்பு நன்றாக இருந்தால் அந்த நிலைய மேலாளரிடம் இருக்கும் புத்தகத்தில் பாராட்டி எழுதுங்கள். அறை பராமரிப்பு நன்றாக இல்லை என்றாலும் கண்டிப்பாக அதையும் எழுதுங்கள்)
அல்லது அன்று மாலையே திரும்ப வேண்டிய ஒரு நாள் பயணம் மட்டும் என்றால் செல்லவேண்டிய அலுவலகத்திற்கு 9 மணிக்கு முன்னர் சென்று அடையாள அட்டையை காட்டி அங்கிருக்கும் குளியலறையை பயன்படுத்தி குளித்து விடுவேன்.
சில கில்லாடிகள் ரயிலிலேயே (அலம்புக் கிண்ணத்தில் வரும் தண்ணீரை ஒரு கோப்பையில் பிடித்து ) குளித்து விடுவார்கள். இந்த முறையை நான் இது வரை இதை முயன்று பார்த்தது கிடையாது !!
இப்படி பட்டவர்களுக்கு ஆறாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் மிகப்பெரிய நிவாரணம்
| Pay Range சம்பளம் | Travel entitlements பயண முறை |
| For posts in the grade pay of Rs.9000 and above 9000க்கு மேல் தரச்சம்பளம் |
|
| For posts carrying grade pay from Rs.6600 to Rs.8400 6600 முதல் 8400 வரை தரச்சம்பளம் |
|
| For posts carrying grade pay from Rs.5400 to Rs.6500 5400 முதல் 6500 வரை தரச்சம்பளம் |
|
| For posts carrying grade pay from Rs.4200 to Rs.4800 4200 முதல் 4800 வரை தரச்சம்பளம் |
|
| For posts carrying grade pay of less than Rs.4200 4200க்கு கீழ் தரச்சம்பளம் |
|
இது ஒரு மிகப்பெரிய மாறுதல்
இதை விட பெரிய நிம்மதி - தினப்படி பரிந்துரைகள்
| Pay Range சம்பளம் | Daily Allowance தினப்படிகள் |
| For posts in the grade pay of Rs.9000 and above 9000க்கு மேல் தரச்சம்பளம் |
|
| For posts carrying grade pay from Rs.6600 to Rs.8400 6600 முதல் 8400 வரை தரச்சம்பளம் |
|
| For posts carrying grade pay from Rs.5400 to Rs.6500 5400 முதல் 6500 வரை தரச்சம்பளம் |
|
| For posts carrying grade pay from Rs.4200 to Rs.4800 4200 முதல் 4800 வரை தரச்சம்பளம் |
|
| For posts carrying grade pay of less than Rs.4200 4200க்கு கீழ் தரச்சம்பளம் |
|
இவ்வளவு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பரிந்துரை பற்றி யாரும் பேசாதது ஏன் என்று தெரியவில்லை ???




