-oOo-
இன்றைய இந்து நாளிதழில் வந்த தமிழ் வழிக்கல்விக்கு எதிரான கட்டுரை ஒன்று என்னை பயங்கரமாக் கடுப்பேற்றி விட்டது. தவறான தகவல்களுடன் கட்டுரைகளை எழுதுவது துப்பறியும் இதழ்கள் மட்டும் தான் என்ற நிலையிலிருந்து சமிப காலங்களில் தினசரிகள் கூடநினைத்தை எல்லாம் எழுதும் போக்கு அதிகரித்து வருகிறது. சமீபத்திய உதாரணம் வன்முறை தடுப்பு சட்டம் குறித்து நேற்று திணமனியின் வந்த தவறான தலையங்கம் அதை விட இன்றைய இந்து கட்டுரை வருத்தமளிக்கக்கூடியதாக உள்ளது.
கட்டுரையின் சில “அரிய” கருத்துக்களும், அதற்கு என் விளக்கம் / கருத்துகளும் கீழ் உள்ளது. முழு கட்டுரையையும் தமிழ் படுத்தாததாலும் எனது மொழி மாற்றததால் கருத்து மாற வாய்ப்பு உள்ளதாலும் ஆங்கில வரிகளையும் சேர்த்து அளித்திருக்கிறேன்
பள்ளி படிப்பு சவாலாகும் இந்த கால கட்டத்தில் மாணவர்களுக்கு மேலும் ஒரு சவால் - மொழி (At a time when school education has become quite demanding, students with Tamil as the medium of instruction seem to be having an additional challenge – that of language.)தமிழ் கற்பது பாரமாம். ம்ம்ம்ம்ம்
பேச்சு தமிழும் எழுத்து தமிழும் வேறு என்பதால் மாணவர்கள் புரிந்து கொள்ள கஷ்டப்படுகிறார்கள் என்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள் (Since spoken Tamil is considerably different from formal, written, Tamil, understanding concepts becomes difficult, say teachers.)அப்படியா. ஆசிரியர்கள் தானே கூறுகிறார்கள். யாராவது மாணவர்களிடம் கேட்க வேண்டியது தானே
புவி ஈர்ப்பு சக்தி போன்ற சொற்கள் பேச்சு தமிழில் உபயோகிக்கப்படுவது இல்லை. (“Words such as puvi eerpu sakthi (gravity) are hardly used in conversational Tamil. Scholars perhaps use it while delivering a formal speech. Otherwise, our spoken Tamil is largely different from what the child reads in textbooks,” says the teacher of a Corporation school. )இது குறித்து பதிவர் பத்ரி தனது பதிவில் ஒரு அருமையான கேள்வி கேட்டுள்ளார் “எதைச் சொல்லி அழ? (“புவி ஈர்ப்பு விசை”) இதில் எது கஷ்டம்? புவியா, ஈர்ப்பா, சக்தி அல்லது விசையா? அனைத்தும் தினசரிப்புழக்கத்தில் உள்ளவைதானே? புவியியல் என்பதுதானே பள்ளிக்கூடப் பாடத்தின் பெயர். “பூமி புட்ச்சு இழுக்கும் ஃபோர்ஸ்” என்று அதற்குப் பெயர் வைக்கவேண்டும் என்றா இந்த ஆசிரியர் விரும்புகிறார்?” அது சரி, கிராவிட்டி என்ற சொல் மட்டும் பேச்சு வழக்கில் உள்ளதா. புதிதாக எந்த சொல்லையும் கற்று தருவதற்கு பள்ளிகளுக்கு தடை எதுவும் உள்ளதா. பேச்சு வழக்கில் உள்ள சொற்களை மட்டும் போதிப்பதற்கு பள்ளி எதற்கு. ஆசிரியர்கள் எதற்கு என்ற கேள்வி எழாமல் இல்லை.
ஆசிரியர்கள் கூட புரிந்து கொள்ள சிரமப்படுகிறார்கள் (“Sometimes, even teachers find it difficult to understand,” she says, on condition of anonymity.)மாணவர்கள் புரிந்து கொள்ள சிரமப்படுகிறார்களா ??
ஆங்கிலம் போன்ற மொழிகளில், பேச்சு வழக்கும் எழுத்து வழக்கும் ஒன்றாக இருந்தாலும் அவற்றை தனியாக பார்க்கிறார்கள். (Even for a language such as English, where the written and spoken forms are the same, there is a practice of looking at the two independently. )ஆங்கிலத்தில் வேறு ஒரு பிரச்சனை உண்டு என்பதை இவர்கள் ஏன் மறந்தார்கள். ஆங்கிலத்தில் எழுத்துகளுக்கும் உச்சரிப்பிற்கும் சம்மந்தம் கிடையாதே
ஒரே எழுத்துக்கள் / ஒரே வார்த்தை பல முறைக்ளில் உச்சரிக்கப்பட வேண்டும். (the aeroplance என்பதில் உள்ள theயும் the blog என்பதில் உள்ள theவும் ஒரே போலாகவா உச்சரிக்கப்படவேண்டும். read என்பது ரெட், ரீட் என்று இரு உச்சரிப்பு உள்ளதா இல்லையா) பல வார்த்தைகள் ஒரே போல் உச்சரிக்கப்படும் (red, read இரண்டும் ரெட் தான்) சிக்கலான மொழி தானே ஆங்கிலம். அப்படிபட்ட மொழியா எளிது ?? ஆனால் எழுத்தும் உச்சரிப்பும் ஒரே போல் உள்ள மொழியா தமிழ் கடினமா ?? என்ன கொடுமை சார் இது
ஆனால் தமிழில், இதற்கு வழி கண்டுபிடிக்க வேண்டும் (“But in Tamil, which is more complex, we are yet to find a solution to bridge the gap,” says the headmaster of a government higher secondary school. “Some students assign a colloquial equivalent to the difficult words in order to understand. But the process is cumbersome,” he adds.)மாணவர்களுக்கு பிரச்சனையா அல்லது ஆசிரியர்களுக்கு பிரச்சனையா என்று தான் தெரியவில்லை :) :(
இந்த பிரச்சனை உயர் வகுப்புகளில் பெரிதாகிறது (And the problem, teachers say, gets compounded as the child goes to higher classes. )அடப்பாவி :(
அறிவியல் போன்ற பாடங்களை படிக்க மட்டும் சிரமம் இல்லை. தமிழில் கூட அவர்கள் சிக்கலான பதங்களை கற்ற வேண்டும். வேறு வழியில்லாததால் அவர்கள் மனப்பாடம் செய்கிறார்கள். (“Children find it hard not only while learning subjects such as science. Even in Tamil itself, they have to constantly learn very complex terms. Without any choice, they resort to memorising without any understanding,” says a class VI teacher of a government-aided school in Central Chennai.)இவர்கள் என்ன கூற வருகிறார்கள் என்று புரியவில்லை. திருக்குறளுக்கு தமிழில் அளிக்காமல் ஆங்கிலத்தில் விளக்கம் அளிக்க வேண்டுமா, அல்லது பாட புத்தகத்திலிருந்து அம்மா என்ற சொல்லை நீக்கி விட்டு மம்மி என்று எழுத வேண்டுமா
பேச்சு மற்றும் எழுத்து மொழிகளுக்கு இடையில் உள்ள வித்தியாசம் கற்பதை கடினப்படுத்துகிறது. (The disparity between the spoken and written forms of Tamil could make the learning process more tedious, experts in linguistics agree. Languages with this inequality are categorised as diglossic. The classic form is often used in writing and sometimes, in public speaking. The spoken language, however, is simpler and far more informal. )இருபேச்சு (டைக்கிலாசிகு) மொழிகள் என்று பார்த்தால் அதில் தமிழ் போல் பல மொழிகள் உள்ளன. செந்தமிழ் (எழுத மற்றும் மேடை பேச்சுகளில் உபயோகிப்பது) மற்றும் இயற்தமிழ் (பேச்சு வழக்கு) என்று இரு வகைகள் இருப்பது ஒன்றும் புதிதல்ல.
அந்த கால திரைப்பட வசனங்கள் கூட செந்தமிழ் தான். கல்கியின் எழுத்துக்கள் இயற்தமிழாக (ஆனால் அதே நேரம் இலக்கண சுத்தமாக) இருந்த்தது தான் இன்று கூட பொன்னியின் செல்வனையோ அவரின் (அமரர் கல்கியின் ) பிற எழுத்துக்களையோ படித்தாலும் சலிப்பதில்லை. நமக்கு அவை நேற்று எழுதப்பட்டது போல் தெளிவாக புரிகிறது.
செந்தமிழுக்கும் இயற்தமிழுக்கும் உள்ள வேறு பாடு அனைவரும் அறிந்ததே. செந்தமிழ் என்பது தமிழகம் முழுவதும் ஒன்று தான். பேச்சு தமிழ் என்பது கோவையில் வேறு, சென்னையில் வேறு, மதுரையில் வேறு, நெல்லையில் வேறு, நாகர்கோவிலில் வேறு.
இதில் இது போல் இரண்டு வகை இருப்பதால் மாணவர்கள் கற்க சிரமப்படுகிறார்கள் என்று கூறுவது உச்ச கட்ட நகைச்சுவை. இங்கிலாந்தில் பேசப்படும் ஆங்கிலம் வேறு. அமெரிக்க ஆங்கிலம் வேறு. ஏன் அமெரிக்காவிலேயே கிழக்கில் உள்ள உச்சரிப்பு வேறு. மேற்கில் உள்ள உச்சரிப்பு வேறு. அதனால் அமெரிக்கர்கள் ஆங்கிலத்தை தவிர்த்து விட்டு உலகம் முழுவதும் ஒரே போல் உச்சரிக்கப்படும் , பேசுவதைப்போலவே எழுதப்படும் லத்தீனை மட்டுமே பள்ளிகளில் போதிக்க வேண்டும் என்று ஏதாவது அமெரிக்க ஊடகங்கள் எழுதுகின்றனவா ??.
ஆங்கிலம் போன்ற மொழிகளில் இந்த பிரச்சனை இல்லை. (But for languages such as English, this difference hardly exists.)ஆங்கிலத்தில் உள்ள பிரச்சனை இதை விட பெரிது. அதை நாம் ஏற்கனவே பார்த்து விட்டோம். தமிழில் உள்ள பாடங்களை மனப்பாடம் செய்யும் (வீட்டில் மற்றும் தெருவில் தமிழ் பேசும் சிறார்கள்) ஆங்கிலத்தில் உள்ள பாடங்களை புரிந்து படிப்பார்களா ???
(“While it is very effective when children study through their mother tongue, we should also see how close the written form is to the way a language is spoken,” says N. Deivasundaram, Professor and Director of the Linguistic Studies unit, Department of Tamil Language, University of Madras. This difference is true of most classical languages, he says.)இந்த இந்து கட்டுரையின் முக்கிய குறைபாடுகள்
(“And in Tamil, there are so many regional dialects in spoken form. We have almost arrived at a common spoken form (as is used in films or mainstream). But written Tamil is simple only in mainstream Tamil newspapers and magazines. We need to focus on school textbooks to make learning easier,” he points out.)
(The Tamil Nadu Textbook Corporation is the authorised agency for the printing and supply of textbooks. The content is under the purview of the Directorate of School Education.
When contacted, Director of School Education P. Perumalsamy said the textbook committees were consciously trying to make the content more accessible. “We are trying to use simple language wherever possible. Only the technical terms cannot be simplified in subjects such as science,” he says. )
- மாணவர்களிடம் கேட்காமல் ஆசிரியர்களிடமும், சில “மொழியியல் அறிஞர்களிடமும்” மட்டுமே கருத்து கேட்டு அதை வைத்து முடிவு கட்டுவது
- தமிழின் “இருபேச்சு” பிரச்ச்னையை மட்டும் பிடித்து கொண்டு தொங்கி ஆங்கிலத்தில் உள்ள இதை விட பெரிய பிரச்சனைகளை மறந்தது அல்ல மறைத்தது
- அரசு (மாநகராட்சி) பள்ளிகள், மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை மட்டும் குறிவைத்து எழுதியுள்ளது (இதை உங்களில் எத்தனை பேர் கவனித்தீர்கள் என்று தெரியவில்லை)
பாடம் புரியாததற்கு முக்கிய காரணம் அது நடத்தப்படும் மொழி அல்ல. அதற்கான காரணங்கள்
- காலத்திற்கு ஒப்பாத பாடத்திட்டம்
- மோசமான பாடநூல்
- நடத்த தெரியாத / முடியாத ஆசிரியர்கள்
- கேவலமான தேர்வு முறை
- காலத்திற்கு ஏற்ற பாடத்திட்டம் - 1000 வருடங்களுக்கு முன்னர் நமது இலக்கியங்கள், இதிகாசங்கள் அனைத்தும் த்லைமுறை தலைமுறையாக மன்ப்பாடம் செய்யப்பட்டே காப்பாற்றப்பட்டு வந்தன. எழுதியதை பிரதி எடுப்பதில் (காகிதம் கண்டுபிடிப்பதற்கு முன்) உள்ள நடைமுறை சிரமங்களால் வேதங்கள் முதல் இதிகாசங்கள் வரை அனைத்தும் மனப்பாடம் செய்யப்பட்டே அடுத்த தலைமுறைக்கு வழங்கப்பட்டன. எனவே மனப்பாடம் செய்வது தான் படிப்பதில் முக்கிய விசயம் என்றாகியது. இதனால் தான் மனப்பாடம் செய்யும் திறனுக்கு அதிக முக்கியம் வழங்கப்பட்டு பிற திறன்கள் பின்னுக்கு தள்ளப்பட்டன. இன்று வரை அதே எண்ணதில் கல்வி முறை அமைந்திருப்பது கொடுமை
- சுவாரசியமான தரமான பாடநூல்கள் - பாடநூல்களை சரியாக மட்டும் எழுதினால் போதாது. சுவாரசியமாகவும் எழுத வேண்டும்
- ஆசிரியர்களுக்கு தொடர் பயிற்சி. ஒவ்வொரு வருடமும் குறைந்தது 10 நாட்களாவது ஆசிரியர்களுக்கு மாற்றப்பட்ட பாடத்திட்டம் மற்றும் பிற மாற்றங்கள் குறித்த பயிற்சி கண்டிப்பாக தேவை
- தேர்வு முறை மாற்றம் : மனப்பாடம் செய்யும் திறனை மட்டுமே சோதிக்கும் தேர்வு முறை மாற்றப்பட வேண்டும். அனைத்து திறன்களையும் சோதிக்க வேண்டும்
இன்று பள்ளி கல்வி முடித்து கல்லூரியில் சேரும் மாணவர்களில் 75 சதவிததினருக்கு ஒரு விடுப்பு விண்ணப்பம் கூட முறையாக எழுத தெரியவில்லை என்பது வேதனை தானே (ஆங்கிலத்திலும் எழுத தெரியவில்லை, தமிழிலும் எழுத தெரியவில்லை என்பது கூடுதல் வேதனை)
இதை சரிசெய்வதற்கு ஆயிரம் வழிகள் இருக்க “சில காரனங்களுக்காக” , “சில விளைவுகளை எதிர்நோக்கி” ஊடகங்கள்
எழுதுவது வேதனையளிக்கும் விடயம்.
கல்வி குறித்த எனது முந்தைய இடுகைகள்

