இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசிக்க / இந்த பக்கம் கணினியில் திறக்க தாமதமானால்: இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த சுட்டியை பயன்படுத்தலாம்

Tuesday, August 26, 2008

புள்ளியியல், குட்டை பாவாடை, ஏ.ஐ.ஐ.எம்.எஸில் 49 குழந்தைகளின் மரணம் – ஊடகங்களில் சொல்லப்படாத உண்மை என்ன

ஊடகங்களில் கடந்த சில நாட்களாக வெளிவரும் செய்திகள் பெறும்பாலும் கீழ்க்கண்டவாறே உள்ளன
The death of 49 babies in clinical trials at the All India Institute of Medical Sciences in New Delhi may have opened a Pandora's box as two of the trial drugs have never been tried on patients below 18 years, an expert said.

The dead babies were part of a pool of 4142 infants used in 42 clinical trials - one of the final stages of drug development - at AIIMS since January 2006, many for Western companies. Of the children used in the trials, 2728 were under a year old.

The AIIMS paediatrics department conducted 42 sets of trials on 4,142 babies—2,728 of them below the age of one—since January 1, 2006.
இதில் சொல்லப்படும் விஷயம் 4142 குழந்தைகளும் சோதனையில் பங்கு பெற்றார்கள். ஆனால் சொல்லப்படாத முக்கிய விஷயம் அவர்கள் அனைவருக்கும் புது மருந்துகள் அளிக்கப்படவில்லை.

சோதனையில் பங்கு பெறுவதற்கும் சோதிக்கப்படுவதற்கும் உள்ள வேறுபாடு என்ன ??
  • சோதனையில் பங்கு பெறுவது – Those who take part in Clinical Trial
  • சோதிக்கப்படுவது – Test Group
சோதனையில் பங்கு பெறுபவர்கள் (Those who take Part in Clinical Trial) = சோதிக்கப்படுபவர்கள் (Test Group ) + சோதனை செய்யப்படாதவர்கள் (Control Group )


4142 குழந்தைகள் = மருந்து அளிக்கப்பட்ட குழந்தைகள் + மருந்து அளிக்கப்படாத குழந்தைகள்

மருந்து அளிக்கப்படுபவர்களை - case என்றும் மருந்து அளிக்கப்படாதவர்களை control என்றும் அழைப்பார்கள்

அதே போல்


மரணமடைந்த 49 குழந்தைகளில் மருந்து அளிக்கப்பட்ட குழந்தைகளுடன் மருந்து அளிக்கப்படாத குழந்தைகளும் உள்ளனர் என்ற தகவலை எந்த ஊடகமும் தெரிவிக்க வில்லை

முக்கிய குறிப்பு - மருந்து அளிக்காமல் / அளிக்கப்படாமல் எப்படி ஒரு குழந்தை மரனமடையும்  என்று பகிரங்க கடிதம் எழுதி கேட்கலாம் என்று நினைப்பவர்களுக்காக - இந்த குழந்தைகள் அனைவரும் நோய்வாய்ப்பட்டவர்கள். அவர்கள் அந்த நோயினால் மரணமடையலாம்.

அதே போல் சோதனை என்றால் கண்டிப்பாக Caseசுடன் Control இருக்க வேண்டும் என்பது அடிப்படை விதி. (வெகு சில விதி விலக்குகள் உள்ளன)

இப்பொழுது உதாரணத்திற்காக ஒரு சோதனை எடுத்துக்கொள்ளுங்கள்

சோதனை : இரத்த சோகை நோய்க்கு இரும்பு சத்து மாத்திரை வழங்குதல்

சோதனையில் பங்கு பெற்றவர்கள் – 100 (இவர்கள் அனைவரும் இரத்த சோகை நோய் உள்ளவர்கள்)
  • மருந்து இரும்பு சத்து மாத்திரை அளிக்கப்பட்டவர்கள் – 50
  • மருந்து இரும்பு சத்து மாத்திரை அளிக்கப்படாதவர்கள் - 50
இந்த சோதனையின் முடிவுகள் எப்படி வேண்டுமென்றாலும் இருக்கலாம்.இதில் (சோதனை 1ல்) பங்கு பெற்ற 10 குழந்தைகள் மரணம் அடைகிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள், அது எப்படி வேண்டுமென்றாலும் இருக்கலாம்.நான் உதாரணத்திற்கு மூன்று முடிவுகளை மட்டும் தருகிறேன்

முடிவு 1






மருந்து பெற்ற குழந்தைகள்


மருந்து பெறாத குழந்தைகள்


மொத்தம்


குணமடைந்தவர்கள்


40


50


90


மரணமடைந்தவர்கள்


10


00


10


எண்ணிக்கை


50


50


100


முடிவு 2






மருந்து பெற்ற குழந்தைகள்


மருந்து பெறாத குழந்தைகள்


மொத்தம்


குணமடைந்தவர்கள்


45


45


90


மரணமடைந்தவர்கள்


05


05


10


எண்ணிக்கை


50


50


100


முடிவு 3






மருந்து பெற்ற குழந்தைகள்


ருந்து பெறாத குழந்தைகள்


மொத்தம்


குணமடைந்தவர்கள்


50


40


90


மரணமடைந்தவர்கள்


00


10


10


எண்ணிக்கை


50


50


100

இந்த மூன்று முடிவுகளிலுமே

சோதனைகளில் பங்கு பெற்ற 100 குழந்தைகளில் 10 பேர் மரணம் என்று தான் பத்திரிகைகளில் எழுதுவார்கள்.

ஆனால் மூன்றும் ஒன்றா ??
  • முதல் முடிவின் படி அந்த மருந்து சாப்பிடுபவர்களுக்கு மரணம்
  • இரண்டாம் முடிவின் படி மரணத்திற்கும் அந்த மருந்திற்கும் தொடர்பில்லை
  • மூன்றாவது முடிவின் படி அந்த மருந்து உயிர்காக்கும் மருந்து
உயிர் காக்கும் மருந்தேயானாலும் அந்த சோதனையில் பங்கு பெறும் குழந்தைகளில் 10 குழந்தைகள் (அவர்கள் மருந்து பெறாததால்தான் இறந்தார்கள் என்பது வேறு விஷயம்) இறந்து விட்டனர் என்ற செய்தி சரிதான்


தற்பொழுது எய்ம்சின் பரிசோதனைகளுக்கு வருவோம்

மொத்தமாக 4142 குழந்தைகள் 42 சோதனைகளில் பங்கு பெற்றிருக்கிறார்கள். இதில் ஒரு வயதிற்கு கீழ் உள்ளவர்கள் 2728. (சில செய்திகளின் படி இது 1768). இதில் 49 குழந்தைகள் மரணம் என்ற செய்தி மட்டும் தான் தெரிகிறது. இதில் சில விஷயங்களை மனதில் வைக்க வேண்டும்
  1. பங்கு பெற்றவர்கள் – 4142
  2. மரணம் – 49
  3. ஒரு வயதிற்கு கீழ் – 2728 அல்லது 1768
  4. ஒரு வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளில் மரணம் அடைந்தது – தகவல் இல்லை
நாம் குறைந்தபட்ச எண்ணிக்கையான 1768யை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்வோம். (4142 குழந்தைகளில் 49 குழந்தைகள் மரணம் என்பதை விட 1768 குழந்தைகளில் 49 குழந்தைகள் மரணம் என்பது முக்கியம் என்பதால்).

இந்த சோதனையின் முடிவுகள் எப்படி வேண்டுமென்றாலும் இருக்கலாம். நான் உதாரணத்திற்கு மூன்று முடிவுகளை மட்டும் தருகிறேன்

முடிவு 1



மருந்து பெற்ற குழந்தைகள்


மருந்து பெறாத குழந்தைகள்


மொத்தம்


சோதனையில் பங்கு பெற்றவர்களில் குணமடைந்தவர்கள்


835


884


1719


சோதனையில் பங்கு பெற்றவர்களில் மரணம்


49


0


49


எண்ணிக்கை


884


884


1768
முடிவு 2


மருந்து பெற்ற குழந்தைகள்


மருந்து பெறாத குழந்தைகள்


மொத்தம்


சோதனையில் பங்கு பெற்றவர்களில் குணமடைந்தவர்கள்


859


860


1719


சோதனையில் பங்கு பெற்றவர்களில் மரணம்


25


24


49


எண்ணிக்கை


884


884


1768
முடிவு 3


மருந்து பெற்ற குழந்தைகள்


மருந்து பெறாத குழந்தைகள்


மொத்தம்


சோதனையில் பங்கு பெற்றவர்களில் குணமடைந்தவர்கள்


884


835


1719


சோதனையில் பங்கு பெற்றவர்களில் மரணம்


0


49


49


எண்ணிக்கை


884


884


1768

  • முடிவு 1 என்றால் (புது மருந்து அளிக்கப்பட்டவர்கள் மரணம்) அது கவலைப்பட வேண்டிய விஷயம்
  • முடிவு 2 என்றால் (மருந்து அளித்தாலும் அளிக்காவிட்டாலும் ஒரே பலன் தான்) மேலும் ஆராயலாம்
  • முடிவு 3 என்றால் அது நல்ல விஷயம். ஆனால் மூன்றாம் முடிவானாலும் கூட சோதனையில் பங்கு பெற்ற குழந்தைகளில் 49 குழந்தைகள் மரணம் என்று தான் கூறப்படும். 

எனவே 49 குழந்தைகள் மரணம் என்ற ஒரு செய்தியை மட்டும் வைத்து எந்த முடிவையும் எடுக்க முடியாது

அடுத்த முக்கிய விஷயம்

மருந்து பெற்றவர்களோ, மருந்து பெறாதவர்களோ அவர்கள் ஒன்று கண்டிப்பாக குணமடைந்திருக்க வேண்டும் அல்லது மரணமடைந்திருக்க வேண்டும் என்று இல்லை. சிலர் அப்படியே கூட இருக்கலாம் எனவே நமது அட்டவனையில் சிறிது மாற்றம் செய்தால் உண்மையில் இது இப்படி கூட இருக்கலாம்



மருந்து பெற்ற குழந்தைகள்


மருந்து பெறாத குழந்தைகள்


மொத்தம்


சோதனையில் பங்கு பெற்றவர்களில் நலம்


??


??


??


சோதனையில் பங்கு பெற்றவர்களில் அப்படியே உள்ளவர்கள்


??


??


??


சோதனையில் பங்கு பெற்றவர்களில் மரணம்


??


??


49


எண்ணிக்கை


884


884


1768

எனவே முழு தகவல்கள் இல்லை என்றாலும் கூட

  1. மருந்து பெற்றவர்களில் மரணமடைந்தவர்களின் சதவிதம்
  2. மருந்து பெறாதவர்களில் மரணமடைந்தவர்களின் சதவிதம்
என்ற இரு தகவல்களையும் ஒப்பிட்டு பார்த்தே முடிவிற்கு வர வேண்டும்

அதே போல் குணமடைந்தவர்களில்
  • மருந்து பெற்றவர்களில் குணமடைந்தவர் சதவிதம்
  • மருந்து பெறாதவர்களில் குணமடைந்தவர் சதவிதம்
இரண்டையும் ஒப்பிட்டே மருந்து வேலை செய்கிறதா என்று முடிவு செய்ய வேண்டும். பல சித்த மருத்துவர்கள் தங்களின் மருந்துக்களை இந்த சோதனைக்கு சம்மதிப்பதில்லை. ஏனென்றால் மருந்து பெறுபவர்களில் எத்தனை சதவீதம் குணமடைகிறார்களோ அதே அளவு மருந்து பெறாதவர்களும் குணமடைவது தெரிந்தால் அதன் பின் கடை விரிக்க முடியாது என்பதால் :) :)

எனவே 49 குழந்தைகள் மரணம் என்ற ஒரு செய்தியை மட்டும் வைத்து எந்த முடிவையும் எடுக்க முடியாது. ஆனாலும் ஏறத்தாழ அனைவரும் அந்த நிறுவனத்தை தாளித்து விட்டனர். ஏன் ?? ஏய்ம்ஸ் மேல் ஏன் இவ்வளவு காண்டு ?? என்பதை புரிந்து கொள்வது வெகு எளிது. ஏய்ம்ஸ் மேல் இந்த “கொலைவெறி” எதற்கென்றால்  ஏய்ம்சின் மேல் கடுப்புடன் இருப்பவர்களின் பட்டியல் மிகப்பெரிது

  1. மருத்துவர்கள்: ஏய்ம்சில் படிக்கும் / வேலை பார்க்கும் மருத்துவர்களை தவிர பிறர் அனைவருக்கும் (நான் உட்பட :) :) ) ஏய்ம்ஸ் மீது பலத்த கடுப்பு உண்டு. இதற்கான காரணங்களை விளக்க தனி இடுகை எழுத வேண்டும். அந்த அளவு அங்கு பிரச்சனை இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் பல காரணங்கள். உதாரணமாக எனக்கு ஏய்ம்ஸ் மீது காட்டம் இருப்பதற்கு சில காரணங்கள்
    • நடத்தப்படும் நுழைவு தேர்வின் மதிப்பெண் வெளியிடப்படுவது கிடையாது. தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல் மட்டும் தான் வெளியிடப்படும்
    • அங்குள்ள பேராசிரியர்களின் குழந்தைகள் கட்டாயம் அந்த நுழைவுத்தேர்வில் வெற்றி பெறுவது
  2. மரு.வேணுகோபாலை (மற்றும் அவரது அல்லக்கைகளை) பிடிக்காதவர்கள் மற்றும் அவர்களின் ஊடகங்கள். இவர்களுக்கு வேணுகோபால் மற்றும் அவர் போன்றவர்களை போட்டு தாக்க வேண்டும்
  3. மத்திய சுகாதார அமைச்சரை (மற்றும் அவரது சாதியை) பிடிக்காதவர்கள்  மற்றும் அவர்களின் ஊடகங்கள் – அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று கூப்பாடு போடுவதற்கு இது நல்ல சாக்கு
இப்படியாக அனைவரும் கிடைத்தது சாக்கு என்று ஏய்ம்சை துவைத்து எடுத்து விட்டனர். (இந்தியாவில் 99% சதவித மக்கள் 2 அல்லது 3ல் அடங்கி விடுவார்கள் – நான் 2 !!) நானும் கூட மிதிவண்டி இடைவெளியில் மூவுருளி ஓட்டியதை”  எனது ஆங்கில பதிவில் காணலாம் :) ;)
  1. பின் குறிப்பு 1 : தலைப்பு விளக்கம் - புள்ளியியல் குறித்து குட்டை பாவாடையை வைத்து ஒரு ஆங்கில பழமொழி உள்ளது. முழு தகவலையும் அளிக்காமல் வெறும் எண்களை (புள்ளி விபரங்களை) மட்டும் வைத்து எதிர்மறை எண்ணங்களை கூட ஏற்படுத்தலாம் என்பதற்கு இந்த 49 குழந்தைகள் மரணம் என்ற செய்தியே உதாரணம். இது போல் பல உதாரணங்கள் உள்ளன
  2. பின் குறிப்பு 2 : இந்த பதிவு ஏய்ம்சிற்கு வக்காலத்து வாங்குவதற்காக அல்ல. இந்த சோதனைகள் குறித்த எனது ஆங்கில பதிவில் என் கருத்தை காணலாம்  இது போன்ற சமயங்களில் (முக்கியமாக வருங்காலங்களில்) ஊடகங்களில் வரும் எண்களை வைத்து நீங்கள் தவறாக புரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காகத்தான் இந்த இடுகை
  3. பின் குறிப்பு 3 : ஏய்ம்சின் பொறுப்பற்ற தன்மை குறித்த என் ஆங்கில இடுகை இங்குள்ளது 
  4. பின் குறிப்பு 4: குட்டைபாவாடை, புள்ளியல் குறித்த மற்றொரு இடுகை


    "குஜ்ஜார் இட ஒதுக்கீட்டுப் போராட்டம்" -- பத்ரி சாரின் பதிவுக்கு ஒரு கருத்து

  5. பின் குறிப்பு 5 : சந்தேகங்களை கேட்கலாம்

Sunday, August 24, 2008

நாலும் (Google Knol) விக்கிபீடியாவும் (Wikipedia) – சில கருத்துக்கள்

விக்கிபிடியா பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். நால் என்பது அது போல் ஒரு முயற்சிதான். ஆனால் விக்கிபீடியாவிற்கும் நாலுக்கும் இடையில் நிறைய வேறுபாடுகள் உள்ளன. வித்தியாசங்களை பின்னர் பார்ப்போம். அதற்கு முன்னர் விக்கிபிடியா பற்றி ஒரு சிறு அறிமுகம்

விக்கிபிடியா என்பது ஆர்வமுடையவர்களால் தொகுக்கப்பட்டு கட்டுப்பாடுகள் ஏதும் இன்றி இலவசமாகப் பயன்படுத்தக்கூடிய ஒரு பன்மொழிக் கலைக் களஞ்சியத் திட்டமாகும். அங்கு நீங்களும் உங்களுக்கு விருப்பமான தலைப்புகளில் புதிதாகக் கட்டுரைகள் எழுதலாம்; ஏற்கனவே உள்ள பக்கங்களை மேலும் விரிவாக்கலாம்.

"நீங்கள்" உட்பட எவரும், ஒவ்வொரு விக்கிப்பீடியா கட்டுரைப் பக்கத்திலும் காணப்படும் "தொகு" இணைப்பைச் சொடுக்குவதன் மூலம், எப்பொழுதும் எந்தக் கட்டுரையையும் தொகுக்க முடியும். இதில் பல நிலைகள் உள்ளன
  1. புகுபதிகை செய்யாத பயனர் (நம்ம வலைப்பதிவு மொழியில் சொல்வதானால் அனானி)
  2. புகுபதிகை செய்த பயனர்
  3. நிர்வாகிகள்
  4. அதிகாரிகள்
சரி, இப்பொழுது வித்தியாசங்களை பார்ப்போம்




விக்கிபிடியா


நால்


குறிப்பு
அப்படியென்றால் என்ன விக்கிபிடியா என்பது பலராலும் தொகுக்கப்படும் ஒரு கலைக்களஞ்சியம் நால் என்பது பலராலும்தொகுக்கப்படும் கட்டுரைகள் அடங்கிய ஒரு இணைய முயற்சி இதில் நாலின் வீச்சு அதிகம்
எதை எழுதுவது இங்கு நீங்கள் கலைகளஞ்சியத்தில் இணைக்க கூடிய கட்டுரைகளை மட்டுமே எழுத முடியும். உதாரணம் கிரிக்கெட் என்ன வேண்டுமென்றாலும் எழுதலாம். உதாரணம். கடற்கரை கிரிக்கெட், “ஒன் பவுன்ஸ் கிரிக்கெட்”, “ஒன் சை கிரிக்கெட்”, காலுறையை சுருட்டி பந்து செய்வது எப்படி, புத்தக கிரிக்கெட், போன்ற தலைப்புகளில் விக்கிபிடியாவில் எழுதினால் Not notable என்று அழித்து விடுவார்கள் நால் அதிக கட்டுரைகள் கொண்ட தளமாக மாறலாம்
தனிப்பட்ட கருத்துக்கள் உங்கள் தனிப்பட்ட கருத்தை எழுத முடியாது. அவர்கள் neutrality என்று வைத்திருப்பார்கள். அதற்குள் தான் எழுதவேண்டும் தனிப்பட்ட கருத்தை எழுதலாம். அது மாற்றுக்கருத்தாக கூட இருக்கலாம் இது தான் நாலின் மிகப்பெரிய பலம்
குறிப்புகள் குறிப்புகள (உதாரணம் உருளைக்கிழங்கு கூட்டு செய்வது எப்படி) போன்றவை எழுத முடியாது குறிப்புகளை (உதாரணம் திரையரங்குகளில் நாக்கை மடித்து இரு விரலை வைத்து விசில் அடிப்பது எப்படி) என்று எழுதலாம்
உங்கள் நிறுவனம் உங்கள் நிறுவனத்தை விளம்பரபடுத்த முடியாது உங்கள் நிறுவனத்தை பற்றியோ அல்லது உங்கள் பொருட்களை பற்றியோ எழுதலாம் இதனால் நால் கட்டுரைகளின் நம்பகத்தன்மை குறைகிறது என்பது விக்கிபிடியர்களின் வாதம்
உங்கள் பொருட்கள் / சேவைகள் உங்கள் பொருட்கள் / சேவைகளை விளம்பரபடுத்த முடியாது உங்கள் பொருட்கள் / சேவைகளை பற்றியோ எழுதலாம் --அதே--
நீங்கள் யார் உங்களை பற்றி எழுத முடியாது உங்களைப்பற்றி எழுதலாம் --அதே--
மாற்று சிந்தனை இங்கு கருத்தொற்றுமை முக்கியம் / அவசியம் அனைத்து கருத்துக்களும் ஏற்றுக்கொள்ளப்படும் --அதே--
ஒரு தலைப்பில் எத்தனை கட்டுரை ஒரே தலைப்பில் ஒரே கட்டுரை தான் ஒரே தலைப்பில் எத்தனை கட்டுரைகள் வேண்டுமென்றாலும் எழுதலாம். யார் வேண்டுமென்றாலும் எழுதலாம் இது தான் முக்கியம். உதாரணமாக ஒரு தலைவரை பற்றி மாற்றுக்கருத்துக்களை விக்கிபிடியாவில் எழுத முடியாது. சில தலைவர்களைப்பற்றி புகழ்ந்தும் சிலரை இகழ்ந்தும் விக்கி கட்டுரைகள் உள்ளன
மற்றவர் எழுதியதும் நீங்களும் அடுத்தவரின் கட்டுரைகளை தொகுக்கலாம் அடுத்தவரின் கட்டுரைகளை அவர் அனுமதித்தால் தொகுக்கலாம்
நீங்கள் எழுதியதும் மற்றவர்களும் உங்களின் கட்டுரையை அடுத்தவர் உங்களின் அனுமதி பெறாமலேயே தொகுக்கலாம் உங்களின் கட்டுரையை அடுத்தவர் உங்களின் அனுமதி பெற்றே தொகுக்க முடியும்
மாற்ற / அழிக்க நீங்கள் எழுதியதை யார் வேண்டுமென்றாலும் மாற்றலாம் நீங்கள் எழுதியதை மாற்ற உங்கள் அனுமதி தேவை
மாற்ற / அழிக்க உதாரணமாக நீங்கள் மிளகு ரசம் செய்வது என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதில் நீங்கள் 15 நிமிடம் கொதிக்க வைக்க கூறுகிறீர்கள். நான் அதை 10 நிமிடம் என்று மாற்றலாம். அல்லது அந்த கட்டுரையை முழுவதும் அழிக்கலாம் நான் 10 நிமிடம் என்றுமாற்றுவதை நீங்கள் அனுமதிக்க வேண்டும். நீங்கள் அனுமதிக்க வில்லை என்றால் நான் மிளகு ரசம் பற்றி வேறொரு கட்டுரை எழுதி அதில் 10 நிமிடம் என்று எழுதலாம்
ஆசிரியர் கட்டுரை யார் எழுதியது என்று பெரும்பாலும் தெரியாது கட்டுரை எழுதியவர் பெயர் தெரியும், தற்சமயம் அமெரிக்க ஆசிரியர்கள் தங்களை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்
விவாதம் அனைத்து கட்டுரைகளுக்கும் ஒரு பேச்சு பக்கம் உண்டு கட்டுரையின் ஆசிரியருக்கு உங்களின் கருத்துக்களை எழுதலாம். அல்லது அது குறித்த உங்கள் மறுமொழிகளை எழுதலாம்
எழுதுபவருக்கு பணம் எழுதுவதால் பணம் கிடைக்காது உங்கள் பக்கத்தில் வரும் அட்சென்சு விளம்பரங்கள் மூலம் பணம் கிடைக்கும் இது நால் பக்கம் அனைவரையும் வரவழைக்கும். உதாரணமாக சமையல் குறிப்புகள், சுய முன்னேற்றம் குறித்த கட்டுரைகள் எழுதுபவர்களுக்கு நால் ஒரு வரப்பிரசாதம்,
உரிமை GNU Free Documentation License கீழ் பதிப்பிற்கப்படுகின்றன. யார் வேண்டுமென்றாலும் அதை பிரதியெடுக்கலாம், மாற்றலாம் நீங்கள் அனைத்து உரிமைகளையும் வைத்துக்கொள்ளலாம் அல்லது Creative Commons Attribution 3.0 License அல்லது Creative Commons Attribution-Noncommercial 3.0 License கீழ் பதியலாம்
தரக்கட்டுப்பாடு விவாதங்கள், பேச்சுப்பக்கங்கள், அங்குள்ள மூத்த உறுப்பினர்களின் (admin, bureaucrat என்று பலர் உள்ளனர்) முடிவு ஆசிரியர்களை அடையாளப்படுத்துதல், தரமில்லாத மற்றும் பொருந்தாத கட்டுரைகளை குறித்தல், ஆய்வு, மறுஆய்வு, தரவரிசை மற்றும் சுட்டிகள் இது தான் விக்கிபிடியாவை முன்னேற விடாமல் செய்கிறது.
முதன் முதலில் விக்கிபிடியாவை உபயோகித்தவர்கள் வைத்தது தான் சட்டம்.
அவர்களின் கருத்திற்கு மாற்று கருத்து எழுதினால் அது உடனடியாக அழிக்கப்படும்
கட்டுரை மேற்கோள் இக்கட்டுரைகளை மேற்கோள் காட்டலாம் இக்கட்டுரைகளை மேற்கோள் காட்டலாம்
ஆசிரியர் மேற்கோள் ஆசிரியர் யார் என்று தெளிவாக தெரியாது ஆசிரியர் மற்றும் இனையாசிரியர்களை தெளிவாக அறியலாம்


இனி மீண்டும் விக்கிபிடியாவிற்கு வருவோம்

விக்கிபிடியா ஒரு கலைக்களஞ்சியத்தின் ஒழுங்குடன் பல சட்ட திட்டங்களை வைத்திருக்கிறது. அந்த சட்டங்கள் தான் விக்கிக்கு வரும் புதிய பயனர்களை விரட்டி ஏற்கனவே அங்குள்ளவர்களின் ஒரு தலைப்பட்ச கருத்தை பிரதிபலிக்க உதவுகிறது.

முக்கியமான சில சட்டங்கள்
  1. ஒரு தலைப்பில் ஒரு கட்டுரை. உதாரணமாக ரஜினிகாந்த் என்று எடுத்துக்கொள்ளுங்கள். ஒருவர் அந்த கட்டுரையில் பெறும் பகுதியில் குசேலன் பற்றி எழுத விரும்புவார். மற்றொருவர் குசேலன் என்பது ரஜினிகாந்த் நடித்த படங்களின் பட்டியலில் கூட வர வேண்டாம் என்று நினைப்பார் J ஆனால் விக்கிபிடியாவில் அது முடியாது. ஒரு தலைப்பில் ஒரு கட்டுரை தான்
  2. சரி, ஒரே கட்டுரை எழுதுவோம். அதில் என்ன எழுதுவது என்று முடிவு செய்ய “consensus” என்று ஒன்றை வைத்துள்ளார்கள். அதாவது அந்த கட்டுரையில் என்ன எழுதுவது என்பது “பெறும்பாண்மையான: விக்கிபீடியர்களின் கருத்தை பொறுத்தே எழுதப்படும்
விக்கிபிடியாவில் நடுநிலை கொள்கை என்று ஒன்று உள்ளது. அது நடைமுறையில் என்னவென்றால் விக்கிபிடியா பயனர்களின் கொள்கைதானே தவிர உலகின் நடுநிலை கொள்கையோ அல்லது ஏற்கொள்ளப்பட்ட புத்தகங்களின் கொள்கையோ அல்ல

உதாரணம் வேண்டுமென்றால் ஆங்கில விக்கிபிடியாவின் கீழ்க்கண்ட பக்கங்களை பாருங்கள் – கலைஞர், ஜெயலலிதா, காவிரி, இடப்பங்கீடு, பெரியார்,

ஏற்கனவே அங்கு உள்ளவர்கள் தற்பொழுது அங்கு இருக்கும் ஒரு சார்பு (தவறான) கருத்துக்களே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். புதிதாக வருபவர்கள் தங்களின் கருத்திற்கு மாற்றுக்கருத்து கொண்டவர்களாக இருந்தால் (ஆங்கில விக்கிபிடியாவிற்கு புதிதாக) வருபவர்களின் எழுத்தை முதலிலேயே விஞ்ஞான வார்த்தைகள் கூறி பயமுறுத்தி அவர்களை விக்கியை விட்டே துரத்தி விடுகிறார்கள்.அவர்களின் கருத்திற்கு ஏற்ற கருத்தை கொண்டவர்கள் என்றால் வரவேற்பு தான்.

இதனால் தான் ஆங்கில விக்கிபிடியா ஒரு தேக்க நிலையை அடைந்து விட்டது. அதே நேரத்தில் தமிழ் மற்றும் மலையாள விக்கிபிடியாக்கள் வளர்ச்சி அடைந்து வருகின்றன என்பதையும் குறிப்பிட வேண்டும்.
--
இன்று சென்னையில் விக்கிபிடியா குறித்து ஒரு கருத்தரங்கில் பேசும் போது சில வருடங்களில் (3 முதல் 4 வருடங்களுக்குள்) நால் விக்கிபிடியாவை ஓரம் கட்டிவிடும் என்று கூறியபோது நான் எதிர்பார்த்த படியே பலத்த எதிர்ப்பு இருந்தது. நான் அதற்கான காரணங்களை மற்றும் என கருத்திற்கு வலு சேர்க்கும் ஆதாரங்களை எடுத்து கூறினேன். “இல்லை விக்கிபிடியா தான் முதலில் இருக்கும்” என்று கூறியவர்களில் யாருமே காரணம் கூறவில்லை. எங்களுக்கு விக்கி தான் பிடிக்கும், நாங்கள் முதலில் அதில் தான் பார்ப்போம் என்று கூறினார்கள். இது தான் ஆதார பிரச்சனை - காரணம் எதுவும் கூறாமல “இது தான் , இப்படித்தான்” என்பது தான் ஆங்கில விக்கிபிடியாவின் சில மூத்த பயனர்களின் மனநிலை.
--
  • முதலில் விக்கிபிடியா பிரபலமாகியதற்கு சில காரணங்கள் உள்ளன. அவைகளில் பெறும்பாண்மையான காரணங்கள் நாலிலும் உள்ளன
  • விக்கிபிடியாவின் உள்ள நல்ல அம்சங்களில் வெகு சில மட்டுமே நாலில் இல்லை
  • விக்கிபிடியாவில் இல்லாத பல நல்ல அம்சங்கள் நாலில் உள்ளன
  • விக்கிபிடியாவில் பல குறைகள் உள்ளன. அவைகளில் பெறும்பாண்மையான குறைகள் நாலில் இல்லை
  1. பயனர்களின் பங்களிப்பு – இதே காரணம் நாலிலும் உள்ளது
  2. பல நேரங்களில் கூகிள் தேடல் பக்கங்களில் முதல் பக்கத்திலேயே விக்கி கட்டுரைகள் முதலில் வந்தன. இதற்கு கட்டுரைகளின் தரம் ஒரு காரணம் என்றாலும், கூகிளின் ”மென்பார்வை” (அல்லது சரியான சொல் - மென்முனையா) மற்றொரு காரணம்.
  3. கூகிளின் மென்பார்வைக்கு மைரோசாப்டின் என்கார்டா பிரபலமடைந்து கொண்டிருந்தது என்பது ஒரு காரணம் – விக்கிபிடியா இலவசம் என்பது மற்றொரு காரணம். பயர்பாக்ஸ் மீதான கூகிளின் கரிசனத்தை புரிந்து கொள்பவர்களால் விக்கிபிடியா மீதான கூகிளின் கரிசனத்தை புரிந்து கொள்ள முடியும். நால் ஆரம்பித்த பின்னரும் அதே கரிசனம் தொடர்கிறது. ஆனால் நாலில் 10,000 கட்டுரைகள் வந்த பின்னரும் அந்த கரிசனம் தொடராது.
  4. தற்சமயம் நாலில் கட்டுரைகள் ஒரு ஒழுங்கான அமைப்பில் இல்லை. ஆனால் விரைவில் ஒழுங்கு படுத்துவார்கள் என்று எதிர்ப்பார்கலாம். அப்படி ஒழுங்கு படுத்தியபின்னர் நாலை மேய்வது எளிது
  5. ஒரு தலைப்பில் நல்ல கருத்துடன் கட்டுரைகள் இருந்தால் தேடல் பக்கங்களில் நாலின் கட்டுரைகளளில் சில  (ஒன்றிற்கு மேட்பட்டவை) முதலில் / முதல் பக்கத்தில் வரும் வாய்ப்புகள் அதிகம்.
  6. மற்றொரு முக்கிய விஷயம் – வில்லியம் ஜெப்பர்சன் கிளிண்டன் (உதாரணம்) என்று விக்கிபிடியாவில் ஒரு பக்கம் மட்டும் தான் இருக்கும் .ஆனால் நாலில் பல பக்கங்கள் இருக்கலாம். எனவே தேடலின் முதல் பக்கம் முழுவதும் இந்த பக்கங்கள் வர வாய்ப்புள்ளது.
  7. நாலில் மாற்று கருத்துள்ள கட்டுரைகளுக்கும் இடமுண்டு (விக்கியில் கிடையாது) என்று செய்தி பரவலாக அறியப்பட்டால் அதன் பின்னர் பலரும் நாலை நாட துவங்குவார்கள் என்பது என் கணிப்பு
  8. அது போல் வலைப்பதிவை விட “சீரியஸான” கட்டுரைகள் கைவசம் வைத்து ஆனால் ஒரு தளம் அமைக்கும் அளவிற்கு பொறுமையோ, தொழிற்நுட்ப அறிவோ, பணமோ, நேரமோ இல்லாத பலர் இருக்கிறார்கள். இவர்களின் தேவைக்கு ஒரு வெற்றிடம் இருந்து வந்தது. அவர்களின் கட்டுரையை விக்கிபிடியாவில் எழுதி ஒரு வாரம் கழித்து பார்த்தால் அது அழிக்கப்பட்டிருக்கும், அல்லது பல மாற்றங்கள் செய்யப்பட்டு முதலில் எழுதியவருக்கு அது அவரின் கட்டுரை என்பதே தெரியாத வண்ணம் இருக்கும். இவர்களின் தேவையின் வெற்றிடத்தை மிக சரியாக நால் குழுவினர் கணித்து உள்ளனர். 
  9. மேலும் அட்சென்சு மூலம் வருவாய் என்பது கரும்பு தின்ன கூலி தான் :)
  10. அடுத்த கேள்வி – விக்கிபிடியாவின் 2,524,738 கட்டுரைகளை நாலால் 2 வருடங்களில் எட்ட முடியுமா. என் பதில் - முடியாது (அல்லது வாய்ப்பு 1 % மட்டுமே)
  11. அப்படியென்றால் எப்படி நாலால் விக்கிபிடியாவை முந்த முடியும் – விக்கிபிடியாவை முந்த 20 லட்சம் கட்டுரைகள் தேவையில்லை. 10,000 தரமான கட்டுரைகளே போதுமானது !!! தேடுபொறி மூலம் விபரங்களை தேடுபவர்களில் 90 சதம் பேருக்கு தேவையான விபரங்கள் 10,000 தரமான கட்டுரைகளிலேயே உள்ளன என்பது என் கருத்து. ஆங்கிலத்தில் 2,00,000 வார்த்தைகள் இருந்தாலும் நாம் உபயோகிக்கும் 90 சத வார்த்தைகள் 10,000 வார்த்தைகளுக்கு உள்ளேயே அடங்கி விடுகிறதல்லவா.
  12. எனவே, என் கணிப்பு சரியாக இருந்தால் கூகிள் 20,00,000 கட்டுரைகள் என்றோ 2,00,000 கட்டுரைகள் என்றோ செல்ல வேண்டாம். 10,000 தலைப்புகளில் தரமான கட்டுரைகள் (ஒவ்வொரு தலைப்பிலும் தோராயமாக 3 கட்டுரைகள் என்று வைத்துக்கொண்டால்) 30,000 கட்டுரைகளை அடையும் போதே நால் விக்கிபிடியாவிற்கு கடும் போட்டியை ஏற்படுத்தக்கூடும்
  13. அதே நேரம் பல விஷயங்களில் (சமையல் குறிப்பு, ஆராய்ச்சி கட்டுரைகள் போன்றவைகளில்) நால் வெகு வேகமாக முன்னேறும். இந்த தலைப்புகளில் விக்கிபிடியாவால் (அவர்களின் கொள்கை தடுப்பதால்) ஒன்றும் செய்ய முடியாது. உதாரணமாக பெரியார் கட்டுரைகளை விக்கிபிடியாவில் வெளியிட முடியாது. நாலில் வெளியிடலாம் இது போன்ற தலைப்புகளில் (பிட்சா சமைப்பது எப்படி, துணி துவைக்கும் பொறி பழுது நீக்குவது எப்படி, குசேலனும் தசாவதாரமும் ஒப்பீடு, பங்கு சந்தை குறித்த கட்டுரைகள், ஷகிலா வாழ்க்கை வரலாறு) நாலின் வளர்ச்சி அபாரமாக இருக்கும்.
  14. தீவிர சிகிச்சையின் பலன்களையும் பாதகங்களை அலசும் ஒரு அருமையான ஆங்கில கட்டுரை நாலில் உள்ளது. இது போன்ற கட்டுரைகளை விக்கியில் காண முடியாது என்பது தான் சோகம். இது போன்ற கட்டுரைகள்தான் நாலை அடுத்த இரண்டு வருடங்களில் முதல் இடத்திற்கு கொண்டு வரும் என்று நம்புகிறேன்

இந்த இடுகையை நாளும் (Google Knol) விக்கிபீடியாவும் (Wikipedia) – சில கருத்துக்கள் வாசிக்கவும்

நாலும் (Google Knol) விக்கிபீடியாவும் (Wikipedia) – சில கருத்துக்கள்

விக்கிபிடியா பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். நால் என்பது அது போல் ஒரு முயற்சிதான். ஆனால் விக்கிபீடியாவிற்கும் நாலுக்கும் இடையில் நிறைய வேறுபாடுகள் உள்ளன. வித்தியாசங்களை பின்னர் பார்ப்போம். அதற்கு முன்னர் விக்கிபிடியா பற்றி ஒரு சிறு அறிமுகம்

விக்கிபிடியா என்பது ஆர்வமுடையவர்களால் தொகுக்கப்பட்டு கட்டுப்பாடுகள் ஏதும் இன்றி இலவசமாகப் பயன்படுத்தக்கூடிய ஒரு பன்மொழிக் கலைக் களஞ்சியத் திட்டமாகும். அங்கு நீங்களும் உங்களுக்கு விருப்பமான தலைப்புகளில் புதிதாகக் கட்டுரைகள் எழுதலாம்; ஏற்கனவே உள்ள பக்கங்களை மேலும் விரிவாக்கலாம்.

"நீங்கள்" உட்பட எவரும், ஒவ்வொரு விக்கிப்பீடியா கட்டுரைப் பக்கத்திலும் காணப்படும் "தொகு" இணைப்பைச் சொடுக்குவதன் மூலம், எப்பொழுதும் எந்தக் கட்டுரையையும் தொகுக்க முடியும். இதில் பல நிலைகள் உள்ளன
  1. புகுபதிகை செய்யாத பயனர் (நம்ம வலைப்பதிவு மொழியில் சொல்வதானால் அனானி)
  2. புகுபதிகை செய்த பயனர்
  3. நிர்வாகிகள்
  4. அதிகாரிகள்
சரி, இப்பொழுது வித்தியாசங்களை பார்ப்போம்




விக்கிபிடியா


நால்


குறிப்பு
அப்படியென்றால் என்ன விக்கிபிடியா என்பது பலராலும் தொகுக்கப்படும் ஒரு கலைக்களஞ்சியம் நால் என்பது பலராலும்தொகுக்கப்படும் கட்டுரைகள் அடங்கிய ஒரு இணைய முயற்சி இதில் நாலின் வீச்சு அதிகம்
எதை எழுதுவது இங்கு நீங்கள் கலைகளஞ்சியத்தில் இணைக்க கூடிய கட்டுரைகளை மட்டுமே எழுத முடியும். உதாரணம் கிரிக்கெட் என்ன வேண்டுமென்றாலும் எழுதலாம். உதாரணம். கடற்கரை கிரிக்கெட், “ஒன் பவுன்ஸ் கிரிக்கெட்”, “ஒன் சை கிரிக்கெட்”, காலுறையை சுருட்டி பந்து செய்வது எப்படி, புத்தக கிரிக்கெட், போன்ற தலைப்புகளில் விக்கிபிடியாவில் எழுதினால் Not notable என்று அழித்து விடுவார்கள் நால் அதிக கட்டுரைகள் கொண்ட தளமாக மாறலாம்
தனிப்பட்ட கருத்துக்கள் உங்கள் தனிப்பட்ட கருத்தை எழுத முடியாது. அவர்கள் neutrality என்று வைத்திருப்பார்கள். அதற்குள் தான் எழுதவேண்டும் தனிப்பட்ட கருத்தை எழுதலாம். அது மாற்றுக்கருத்தாக கூட இருக்கலாம் இது தான் நாலின் மிகப்பெரிய பலம்
குறிப்புகள் குறிப்புகள (உதாரணம் உருளைக்கிழங்கு கூட்டு செய்வது எப்படி) போன்றவை எழுத முடியாது குறிப்புகளை (உதாரணம் திரையரங்குகளில் நாக்கை மடித்து இரு விரலை வைத்து விசில் அடிப்பது எப்படி) என்று எழுதலாம்
உங்கள் நிறுவனம் உங்கள் நிறுவனத்தை விளம்பரபடுத்த முடியாது உங்கள் நிறுவனத்தை பற்றியோ அல்லது உங்கள் பொருட்களை பற்றியோ எழுதலாம் இதனால் நால் கட்டுரைகளின் நம்பகத்தன்மை குறைகிறது என்பது விக்கிபிடியர்களின் வாதம்
உங்கள் பொருட்கள் / சேவைகள் உங்கள் பொருட்கள் / சேவைகளை விளம்பரபடுத்த முடியாது உங்கள் பொருட்கள் / சேவைகளை பற்றியோ எழுதலாம் --அதே--
நீங்கள் யார் உங்களை பற்றி எழுத முடியாது உங்களைப்பற்றி எழுதலாம் --அதே--
மாற்று சிந்தனை இங்கு கருத்தொற்றுமை முக்கியம் / அவசியம் அனைத்து கருத்துக்களும் ஏற்றுக்கொள்ளப்படும் --அதே--
ஒரு தலைப்பில் எத்தனை கட்டுரை ஒரே தலைப்பில் ஒரே கட்டுரை தான் ஒரே தலைப்பில் எத்தனை கட்டுரைகள் வேண்டுமென்றாலும் எழுதலாம். யார் வேண்டுமென்றாலும் எழுதலாம் இது தான் முக்கியம். உதாரணமாக ஒரு தலைவரை பற்றி மாற்றுக்கருத்துக்களை விக்கிபிடியாவில் எழுத முடியாது. சில தலைவர்களைப்பற்றி புகழ்ந்தும் சிலரை இகழ்ந்தும் விக்கி கட்டுரைகள் உள்ளன
மற்றவர் எழுதியதும் நீங்களும் அடுத்தவரின் கட்டுரைகளை தொகுக்கலாம் அடுத்தவரின் கட்டுரைகளை அவர் அனுமதித்தால் தொகுக்கலாம்
நீங்கள் எழுதியதும் மற்றவர்களும் உங்களின் கட்டுரையை அடுத்தவர் உங்களின் அனுமதி பெறாமலேயே தொகுக்கலாம் உங்களின் கட்டுரையை அடுத்தவர் உங்களின் அனுமதி பெற்றே தொகுக்க முடியும்
மாற்ற / அழிக்க நீங்கள் எழுதியதை யார் வேண்டுமென்றாலும் மாற்றலாம் நீங்கள் எழுதியதை மாற்ற உங்கள் அனுமதி தேவை
மாற்ற / அழிக்க உதாரணமாக நீங்கள் மிளகு ரசம் செய்வது என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதில் நீங்கள் 15 நிமிடம் கொதிக்க வைக்க கூறுகிறீர்கள். நான் அதை 10 நிமிடம் என்று மாற்றலாம். அல்லது அந்த கட்டுரையை முழுவதும் அழிக்கலாம் நான் 10 நிமிடம் என்றுமாற்றுவதை நீங்கள் அனுமதிக்க வேண்டும். நீங்கள் அனுமதிக்க வில்லை என்றால் நான் மிளகு ரசம் பற்றி வேறொரு கட்டுரை எழுதி அதில் 10 நிமிடம் என்று எழுதலாம்
ஆசிரியர் கட்டுரை யார் எழுதியது என்று பெரும்பாலும் தெரியாது கட்டுரை எழுதியவர் பெயர் தெரியும், தற்சமயம் அமெரிக்க ஆசிரியர்கள் தங்களை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்
விவாதம் அனைத்து கட்டுரைகளுக்கும் ஒரு பேச்சு பக்கம் உண்டு கட்டுரையின் ஆசிரியருக்கு உங்களின் கருத்துக்களை எழுதலாம். அல்லது அது குறித்த உங்கள் மறுமொழிகளை எழுதலாம்
எழுதுபவருக்கு பணம் எழுதுவதால் பணம் கிடைக்காது உங்கள் பக்கத்தில் வரும் அட்சென்சு விளம்பரங்கள் மூலம் பணம் கிடைக்கும் இது நால் பக்கம் அனைவரையும் வரவழைக்கும். உதாரணமாக சமையல் குறிப்புகள், சுய முன்னேற்றம் குறித்த கட்டுரைகள் எழுதுபவர்களுக்கு நால் ஒரு வரப்பிரசாதம்,
உரிமை GNU Free Documentation License கீழ் பதிப்பிற்கப்படுகின்றன. யார் வேண்டுமென்றாலும் அதை பிரதியெடுக்கலாம், மாற்றலாம் நீங்கள் அனைத்து உரிமைகளையும் வைத்துக்கொள்ளலாம் அல்லது Creative Commons Attribution 3.0 License அல்லது Creative Commons Attribution-Noncommercial 3.0 License கீழ் பதியலாம்
தரக்கட்டுப்பாடு விவாதங்கள், பேச்சுப்பக்கங்கள், அங்குள்ள மூத்த உறுப்பினர்களின் (admin, bureaucrat என்று பலர் உள்ளனர்) முடிவு ஆசிரியர்களை அடையாளப்படுத்துதல், தரமில்லாத மற்றும் பொருந்தாத கட்டுரைகளை குறித்தல், ஆய்வு, மறுஆய்வு, தரவரிசை மற்றும் சுட்டிகள் இது தான் விக்கிபிடியாவை முன்னேற விடாமல் செய்கிறது.
முதன் முதலில் விக்கிபிடியாவை உபயோகித்தவர்கள் வைத்தது தான் சட்டம்.
அவர்களின் கருத்திற்கு மாற்று கருத்து எழுதினால் அது உடனடியாக அழிக்கப்படும்
கட்டுரை மேற்கோள் இக்கட்டுரைகளை மேற்கோள் காட்டலாம் இக்கட்டுரைகளை மேற்கோள் காட்டலாம்
ஆசிரியர் மேற்கோள் ஆசிரியர் யார் என்று தெளிவாக தெரியாது ஆசிரியர் மற்றும் இனையாசிரியர்களை தெளிவாக அறியலாம்


இனி மீண்டும் விக்கிபிடியாவிற்கு வருவோம்

விக்கிபிடியா ஒரு கலைக்களஞ்சியத்தின் ஒழுங்குடன் பல சட்ட திட்டங்களை வைத்திருக்கிறது. அந்த சட்டங்கள் தான் விக்கிக்கு வரும் புதிய பயனர்களை விரட்டி ஏற்கனவே அங்குள்ளவர்களின் ஒரு தலைப்பட்ச கருத்தை பிரதிபலிக்க உதவுகிறது.

முக்கியமான சில சட்டங்கள்
  1. ஒரு தலைப்பில் ஒரு கட்டுரை. உதாரணமாக ரஜினிகாந்த் என்று எடுத்துக்கொள்ளுங்கள். ஒருவர் அந்த கட்டுரையில் பெறும் பகுதியில் குசேலன் பற்றி எழுத விரும்புவார். மற்றொருவர் குசேலன் என்பது ரஜினிகாந்த் நடித்த படங்களின் பட்டியலில் கூட வர வேண்டாம் என்று நினைப்பார் J ஆனால் விக்கிபிடியாவில் அது முடியாது. ஒரு தலைப்பில் ஒரு கட்டுரை தான்
  2. சரி, ஒரே கட்டுரை எழுதுவோம். அதில் என்ன எழுதுவது என்று முடிவு செய்ய “consensus” என்று ஒன்றை வைத்துள்ளார்கள். அதாவது அந்த கட்டுரையில் என்ன எழுதுவது என்பது “பெறும்பாண்மையான: விக்கிபீடியர்களின் கருத்தை பொறுத்தே எழுதப்படும்
விக்கிபிடியாவில் நடுநிலை கொள்கை என்று ஒன்று உள்ளது. அது நடைமுறையில் என்னவென்றால் விக்கிபிடியா பயனர்களின் கொள்கைதானே தவிர உலகின் நடுநிலை கொள்கையோ அல்லது ஏற்கொள்ளப்பட்ட புத்தகங்களின் கொள்கையோ அல்ல

உதாரணம் வேண்டுமென்றால் ஆங்கில விக்கிபிடியாவின் கீழ்க்கண்ட பக்கங்களை பாருங்கள் – கலைஞர், ஜெயலலிதா, காவிரி, இடப்பங்கீடு, பெரியார்,

ஏற்கனவே அங்கு உள்ளவர்கள் தற்பொழுது அங்கு இருக்கும் ஒரு சார்பு (தவறான) கருத்துக்களே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். புதிதாக வருபவர்கள் தங்களின் கருத்திற்கு மாற்றுக்கருத்து கொண்டவர்களாக இருந்தால் (ஆங்கில விக்கிபிடியாவிற்கு புதிதாக) வருபவர்களின் எழுத்தை முதலிலேயே விஞ்ஞான வார்த்தைகள் கூறி பயமுறுத்தி அவர்களை விக்கியை விட்டே துரத்தி விடுகிறார்கள்.அவர்களின் கருத்திற்கு ஏற்ற கருத்தை கொண்டவர்கள் என்றால் வரவேற்பு தான்.

இதனால் தான் ஆங்கில விக்கிபிடியா ஒரு தேக்க நிலையை அடைந்து விட்டது. அதே நேரத்தில் தமிழ் மற்றும் மலையாள விக்கிபிடியாக்கள் வளர்ச்சி அடைந்து வருகின்றன என்பதையும் குறிப்பிட வேண்டும்.
--
இன்று சென்னையில் விக்கிபிடியா குறித்து ஒரு கருத்தரங்கில் பேசும் போது சில வருடங்களில் (3 முதல் 4 வருடங்களுக்குள்) நால் விக்கிபிடியாவை ஓரம் கட்டிவிடும் என்று கூறியபோது நான் எதிர்பார்த்த படியே பலத்த எதிர்ப்பு இருந்தது. நான் அதற்கான காரணங்களை மற்றும் என கருத்திற்கு வலு சேர்க்கும் ஆதாரங்களை எடுத்து கூறினேன். “இல்லை விக்கிபிடியா தான் முதலில் இருக்கும்” என்று கூறியவர்களில் யாருமே காரணம் கூறவில்லை. எங்களுக்கு விக்கி தான் பிடிக்கும், நாங்கள் முதலில் அதில் தான் பார்ப்போம் என்று கூறினார்கள். இது தான் ஆதார பிரச்சனை - காரணம் எதுவும் கூறாமல “இது தான் , இப்படித்தான்” என்பது தான் ஆங்கில விக்கிபிடியாவின் சில மூத்த பயனர்களின் மனநிலை.
--
  • முதலில் விக்கிபிடியா பிரபலமாகியதற்கு சில காரணங்கள் உள்ளன. அவைகளில் பெறும்பாண்மையான காரணங்கள் நாலிலும் உள்ளன
  • விக்கிபிடியாவின் உள்ள நல்ல அம்சங்களில் வெகு சில மட்டுமே நாலில் இல்லை
  • விக்கிபிடியாவில் இல்லாத பல நல்ல அம்சங்கள் நாலில் உள்ளன
  • விக்கிபிடியாவில் பல குறைகள் உள்ளன. அவைகளில் பெறும்பாண்மையான குறைகள் நாலில் இல்லை
  1. பயனர்களின் பங்களிப்பு – இதே காரணம் நாலிலும் உள்ளது
  2. பல நேரங்களில் கூகிள் தேடல் பக்கங்களில் முதல் பக்கத்திலேயே விக்கி கட்டுரைகள் முதலில் வந்தன. இதற்கு கட்டுரைகளின் தரம் ஒரு காரணம் என்றாலும், கூகிளின் ”மென்பார்வை” (அல்லது சரியான சொல் - மென்முனையா) மற்றொரு காரணம்.
  3. கூகிளின் மென்பார்வைக்கு மைரோசாப்டின் என்கார்டா பிரபலமடைந்து கொண்டிருந்தது என்பது ஒரு காரணம் – விக்கிபிடியா இலவசம் என்பது மற்றொரு காரணம். பயர்பாக்ஸ் மீதான கூகிளின் கரிசனத்தை புரிந்து கொள்பவர்களால் விக்கிபிடியா மீதான கூகிளின் கரிசனத்தை புரிந்து கொள்ள முடியும். நால் ஆரம்பித்த பின்னரும் அதே கரிசனம் தொடர்கிறது. ஆனால் நாலில் 10,000 கட்டுரைகள் வந்த பின்னரும் அந்த கரிசனம் தொடராது.
  4. தற்சமயம் நாலில் கட்டுரைகள் ஒரு ஒழுங்கான அமைப்பில் இல்லை. ஆனால் விரைவில் ஒழுங்கு படுத்துவார்கள் என்று எதிர்ப்பார்கலாம். அப்படி ஒழுங்கு படுத்தியபின்னர் நாலை மேய்வது எளிது
  5. ஒரு தலைப்பில் நல்ல கருத்துடன் கட்டுரைகள் இருந்தால் தேடல் பக்கங்களில் நாலின் கட்டுரைகளளில் சில  (ஒன்றிற்கு மேட்பட்டவை) முதலில் / முதல் பக்கத்தில் வரும் வாய்ப்புகள் அதிகம்.
  6. மற்றொரு முக்கிய விஷயம் – வில்லியம் ஜெப்பர்சன் கிளிண்டன் (உதாரணம்) என்று விக்கிபிடியாவில் ஒரு பக்கம் மட்டும் தான் இருக்கும் .ஆனால் நாலில் பல பக்கங்கள் இருக்கலாம். எனவே தேடலின் முதல் பக்கம் முழுவதும் இந்த பக்கங்கள் வர வாய்ப்புள்ளது.
  7. நாலில் மாற்று கருத்துள்ள கட்டுரைகளுக்கும் இடமுண்டு (விக்கியில் கிடையாது) என்று செய்தி பரவலாக அறியப்பட்டால் அதன் பின்னர் பலரும் நாலை நாட துவங்குவார்கள் என்பது என் கணிப்பு
  8. அது போல் வலைப்பதிவை விட “சீரியஸான” கட்டுரைகள் கைவசம் வைத்து ஆனால் ஒரு தளம் அமைக்கும் அளவிற்கு பொறுமையோ, தொழிற்நுட்ப அறிவோ, பணமோ, நேரமோ இல்லாத பலர் இருக்கிறார்கள். இவர்களின் தேவைக்கு ஒரு வெற்றிடம் இருந்து வந்தது. அவர்களின் கட்டுரையை விக்கிபிடியாவில் எழுதி ஒரு வாரம் கழித்து பார்த்தால் அது அழிக்கப்பட்டிருக்கும், அல்லது பல மாற்றங்கள் செய்யப்பட்டு முதலில் எழுதியவருக்கு அது அவரின் கட்டுரை என்பதே தெரியாத வண்ணம் இருக்கும். இவர்களின் தேவையின் வெற்றிடத்தை மிக சரியாக நால் குழுவினர் கணித்து உள்ளனர். 
  9. மேலும் அட்சென்சு மூலம் வருவாய் என்பது கரும்பு தின்ன கூலி தான் :)
  10. அடுத்த கேள்வி – விக்கிபிடியாவின் 2,524,738 கட்டுரைகளை நாலால் 2 வருடங்களில் எட்ட முடியுமா. என் பதில் - முடியாது (அல்லது வாய்ப்பு 1 % மட்டுமே)
  11. அப்படியென்றால் எப்படி நாலால் விக்கிபிடியாவை முந்த முடியும் – விக்கிபிடியாவை முந்த 20 லட்சம் கட்டுரைகள் தேவையில்லை. 10,000 தரமான கட்டுரைகளே போதுமானது !!! தேடுபொறி மூலம் விபரங்களை தேடுபவர்களில் 90 சதம் பேருக்கு தேவையான விபரங்கள் 10,000 தரமான கட்டுரைகளிலேயே உள்ளன என்பது என் கருத்து. ஆங்கிலத்தில் 2,00,000 வார்த்தைகள் இருந்தாலும் நாம் உபயோகிக்கும் 90 சத வார்த்தைகள் 10,000 வார்த்தைகளுக்கு உள்ளேயே அடங்கி விடுகிறதல்லவா.
  12. எனவே, என் கணிப்பு சரியாக இருந்தால் கூகிள் 20,00,000 கட்டுரைகள் என்றோ 2,00,000 கட்டுரைகள் என்றோ செல்ல வேண்டாம். 10,000 தலைப்புகளில் தரமான கட்டுரைகள் (ஒவ்வொரு தலைப்பிலும் தோராயமாக 3 கட்டுரைகள் என்று வைத்துக்கொண்டால்) 30,000 கட்டுரைகளை அடையும் போதே நால் விக்கிபிடியாவிற்கு கடும் போட்டியை ஏற்படுத்தக்கூடும்
  13. அதே நேரம் பல விஷயங்களில் (சமையல் குறிப்பு, ஆராய்ச்சி கட்டுரைகள் போன்றவைகளில்) நால் வெகு வேகமாக முன்னேறும். இந்த தலைப்புகளில் விக்கிபிடியாவால் (அவர்களின் கொள்கை தடுப்பதால்) ஒன்றும் செய்ய முடியாது. உதாரணமாக பெரியார் கட்டுரைகளை விக்கிபிடியாவில் வெளியிட முடியாது. நாலில் வெளியிடலாம் இது போன்ற தலைப்புகளில் (பிட்சா சமைப்பது எப்படி, துணி துவைக்கும் பொறி பழுது நீக்குவது எப்படி, குசேலனும் தசாவதாரமும் ஒப்பீடு, பங்கு சந்தை குறித்த கட்டுரைகள், ஷகிலா வாழ்க்கை வரலாறு) நாலின் வளர்ச்சி அபாரமாக இருக்கும்.
  14. தீவிர சிகிச்சையின் பலன்களையும் பாதகங்களை அலசும் ஒரு அருமையான ஆங்கில கட்டுரை நாலில் உள்ளது. இது போன்ற கட்டுரைகளை விக்கியில் காண முடியாது என்பது தான் சோகம். இது போன்ற கட்டுரைகள்தான் நாலை அடுத்த இரண்டு வருடங்களில் முதல் இடத்திற்கு கொண்டு வரும் என்று நம்புகிறேன்

Saturday, August 23, 2008

ஆண்மைக்கும் பெண்மைக்கும் இடையில்...... பகுதி 3 : ஹைபோஸ்பேடியாசிஸ்

இந்த இடுகைத்தொடரின் முந்தைய இடுகைகள்
இந்த கட்டுரை புரியவில்லை என்றால் இரண்டாவது இடுகையையும் மூன்றாவது இடுகையையும்மீண்டும் ஒரு முறை வாசிக்கவும். அதன் பின்னரும் புரிவதில் சிரமமிருந்தால் உங்கள் வினாக்களை மறுமொழியில் கேட்கலாம்

இனி நான்காவது இடுகை :ஆண்மைக்கும் பெண்மைக்கும் இடையில்...... பகுதி 3 : ஹைபோஸ்பேடியாசிஸ் 

கிழ் உள்ள அட்டவனையில் 4 செங்குத்து வரிசைகள் உள்ளன.முதல் செங்குத்து வரிசையில் கூறுகளையும், இரண்டாவது செங்குத்து வரிசையில் ஒரு ஆணின் இயல்புகளையும், நான்காவது செங்குத்து வரிசையில் ஒரு பெண்ணின் இயல்புகளையும், அளித்துள்ளேன்

மூன்றாவது செங்குத்து வரிசையில், பெரினியல் ஹைபோஸ்பேடியாசிஸினால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு நபரின் இயல்புகள் எப்படி இருக்கும் என்று இருக்கிறது




ஆண்


????


பெண்


1.                  மரபணு பால் (Genetic Sex)


அவரின் உயிரணுக்களில் (நிறமி) இருப்பது 22 இணை மரபணுச்சரங்கள் (அதாவது 44 மரபணுச்சரங்கள்) + ஒரு X மற்றும் ஒரு Y மரபணுச்சரம்


44 + XY


 அவரின் உயிரணுக்களில் (நிறமி) இருப்பது 22 இணை மரபணுச்சரங்கள் (அதாவது 44 மரபணுச்சரங்கள்) + இரு X மரபணுச்சரங்கள்


2.                  இனஉறுப்புகள்


விரைகள். இருக்கும். அதே போல் விந்து சிறுகுமிழ், சுக்கிலவகம், விந்துக்குழாய் போன்றவைகளும் இருக்கும். 


வயிற்றினுள் விரைகள், விந்து சிறுகுமிழ், சுக்கிலவகம், விந்துக்குழாய்


சினைப்பைகள். அதே போல் பிற  முட்டைப் பைக்குழாய், கர்ப்பப்பை, பெண் இனச்சேர்க்கை உறுப்பு போன்றவைகளும் இருக்கும்.


3.                  நாளமில்லாச் சுரப்பி சுரக்கும் இயக்குநீர்:


அதிக அளவில் டெஸ்டோஸ்டிரோன் மற்றும் சிறிய அளவில் ஈஸ்ட்ரஜன் இருக்கும்


அதிக அளவில் டெஸ்டோஸ்டிரோன் மற்றும் சிறிய அளவில் ஈஸ்ட்ரஜன் இருக்கும்


அதிக அளவில் ஈஸ்ட்ரஜன், ப்ரொஜஸ்ட்ரன் போன்றவை மற்றும் சிறிய அளவில் டெஸ்டோஸ்டிரோன்


4.                  உடல் வாகு / பிற உடல் மாற்றங்கள்


ஆண் என்றால் மீசை, தாடி. அது போல் குரலில் வேறுபாடு . இந்த வித்தியாசங்களுக்கு நாளமில்ல சுரப்பிகள் சுரக்கும் இயக்குநீரே முக்கிய காரணம் ஆகும். இது போல் ஆண் என்றால் பெண்களை விட அதிக (சக்தியுள்ள) எலும்புகள், தசைகள். சிறிய இடுப்பெலும்பு (ஒரு எலும்பை வைத்து அது ஆணா, பெண்ணா என்று கூறிவிடலாம் - சில விதிவிலக்குகள் உண்டு - அதைத்தானே பார்க்க போகிறோம் !!). அது போல் ஆணுக்கும் பெண்ணுக்கும் உடலில் முடி வளரும் இடங்கள், மற்றும் வளரும் விதம் வேறு. மார்பகங்கள் கிடையாது. தோலுக்கு அடியில் கொழுப்பு குறைவு, அதனால் வளைவுகள் இல்லை என்று சில “வெளிப்புற” வித்தியாசங்கள்.


பலமிக்க தசைகள், ஆண் மார்பு


பெண் என்றால் நீண்ட தலைமுடி. அது போல் குரலில் வேறுபாடு . தாடி, மீசை கிடையாது. இந்த வித்தியாசங்களுக்கு நாளமில்ல சுரப்பிகள் சுரக்கும் இயக்குநீரே முக்கிய காரணம் ஆகும். இது போல் பெண் என்றால் ஆண்களை விட மெல்லிய  (சக்தியுள்ள) எலும்புகள், தசைகள். பெண் என்றால் ஆணை விட பெரிய இடுப்பெலும்பு. (ஒரு எலும்பை வைத்து அது ஆணா, பெண்ணா என்று கூறிவிடலாம் - சில விதிவிலக்குகள் உண்டு - அதைத்தானே பார்க்க போகிறோம் !!). அது போல் ஆணுக்கும் பெண்ணுக்கும் உடலில் முடி வளரும் இடங்கள், மற்றும் வளரும் விதம் வேறு. இது தவிர பெண்ணிற்கு மார்பகங்கள், தோலுக்கு அடியில் அதிக கொழுப்பு, அதனால் வளைவுகள் என்று சில “வெளிப்புற” வித்தியாசங்கள்.


5.                  ஆண்குறி


ஆண் அளவு


கிடையாது


கிடையாது 


6.                  பெண்குறிமூலம்


கிடையாது


பெண் அளவு 


பெண் அளவு 


7.                  பெண் இனச்சேர்க்கை உறுப்பு


கிடையாது


பெண் அளவை விட சிறிது. ஆனால் வெளிப்புறத்தில் பெண் இனச்சேர்க்கை உறுப்பை போல் தான் இருக்கும்


பெண் அளவு


8.                  சிறுநீர் கழிப்பது


ஆண் போல்


பெண் போல்


பெண் போல்


9.                  மாதவிடாய்


கிடையாது


கிடையாது


மாதவிடாய் - உண்டு


10.              குழந்தை பாக்கியம்


உண்டு


இல்லை


உண்டு


11.              உளவியல்:


ஆணாக


பிறப்பின் படி ஆணாக.(பெண் மேல் நாட்டம் வரலாம்)


பெண்ணாக வளர்க்கப்பட்டால் குழப்பமடைய வாய்ப்புள்ளது


பெண்ணாக

முறையான மருத்துவ சோதனை இல்லையென்றால் இந்த குழந்தை ஒரு பெண்ணாக வளர்க்கப்படும்.

பெண்ணாக வளர்க்கப்படும் அந்த குழந்தைக்கு 20 வயதாகியும் மாதவிடாய் வர வில்லை என்று மருத்துவ ஆலோசனை பெற்றால், அப்பொழுது பரிசோதனை செய்தால் தான் அந்த நபர் பெண்ணல்ல, ஆண் என்று தெரியவரும்.

அல்லது ஏதாவது விளையாட்டு போட்டியில் மருத்துவ பரிசோதனை செய்தால் தெரியவரலாம் :(

அல்லது வேலைக்கு சேரும் பொழுது (உதாரணம் தொடர்வண்டி துறையில்) மருத்துவ பரிசோதனை செய்தால் தெரியவரலாம்.

பெண்ணாக வளர்க்கப்படும் நபர் அவருள் அதிக அளவில் இருக்கும் டெஸ்டோஸ்டிரோன் மற்றும் சிறிய அளவில் இருக்கும் ஈஸ்ட்ரஜன் விளைவால் மற்றொரு பெண்ணை காதலித்து, பெண்ணைத்தான் திருமணம் செய்வேன் என்று கூறலாம்

மருத்துவரை பொறுத்த வரை உங்கள் மகளுக்கு புற்றுநோய் என்ற செய்தியை கூறுவதை விட, உங்கள் மகள் ஆண் என்ற செய்தியை பெற்றோரிடம் கூறுவது கடினம்


இந்த இடுகைத்தொடரின் அடுத்த இடுகைகள்

Thursday, August 21, 2008

ஆண்மைக்கும் பெண்மைக்கும் இடையில்...... பகுதி 3 : ஹைபோஸ்பேடியாசிஸ்

இந்த இடுகை ஆண்மைக்கும் பெண்மைக்கும் இடையில்...... பகுதி 3 : ஹைபோஸ்பேடியாசிஸ் என்ற பக்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளது

ஆண்மைக்கும் பெண்மைக்கும் இடையில் : பகுதி 2 : யார் ஆண். யார் பெண்

இந்த இடுகைத்தொடரின் முந்தைய இடுகைகள்
இந்த கட்டுரை புரியவில்லை என்றால் இரண்டாவது இடுகையை ஒரு முறை வாசிக்கவும்

இனி மூன்றாவது இடுகை :ஆண்மைக்கும் பெண்மைக்கும் இடையில்...... பகுதி 2 : யார் ஆண். யார் பெண்

ஒரு நபர் ஆண்  என்று எப்படி கூறுகிறோம் என்றால்
  1. மரபணு பால் (Genetic Sex) - அவரின் உயிரணுக்களில் (நிறமி) இருப்பது 22 இணை மரபணுச்சரங்கள் (அதாவது 44 மரபணுச்சரங்கள்) + ஒரு X மற்றும் ஒரு Y மரபணுச்சரம்
  2. இனஉறுப்புகள் - விரைகள். இருக்கும். அதே போல் விந்து சிறுகுமிழ், சுக்கிலவகம், விந்துக்குழாய் போன்றவைகளும் இருக்கும். 
  3. நாளமில்லாச் சுரப்பி சுரக்கும் இயக்குநீர்: அதிக அளவில் டெஸ்டோஸ்டிரோன் மற்றும் சிறிய அளவில் ஈஸ்ட்ரஜன் இருக்கும்
  4. உடல் வாகு / பிற உடல் மாற்றங்கள் : ஆண் என்றால் மீசை, தாடி. அது போல் குரலில் வேறுபாடு . இந்த வித்தியாசங்களுக்கு நாளமில்ல சுரப்பிகள் சுரக்கும் இயக்குநீரே முக்கிய காரணம் ஆகும். இது போல் ஆண் என்றால் பெண்களை விட அதிக (சக்தியுள்ள) எலும்புகள், தசைகள். சிறிய இடுப்பெலும்பு (ஒரு எலும்பை வைத்து அது ஆணா, பெண்ணா என்று கூறிவிடலாம் - சில விதிவிலக்குகள் உண்டு - அதைத்தானே பார்க்க போகிறோம் !!). அது போல் ஆணுக்கும் பெண்ணுக்கும் உடலில் முடி வளரும் இடங்கள், மற்றும் வளரும் விதம் வேறு. மார்பகங்கள் கிடையாது. தோலுக்கு அடியில் கொழுப்பு குறைவு, அதனால் வளைவுகள் இல்லை என்று சில “வெளிப்புற” வித்தியாசங்கள்.
  5. ஆண்குறி - ஆண் அளவு
  6. பெண்குறிமூலம் - கிடையாது
  7. பெண் இனச்சேர்க்கை உறுப்பு.  - கிடையாது
  8. சிறுநீர் கழிப்பது - ஆண் போல்
  9. மாதவிடாய் - கிடையாது
  10. குழந்தை பாக்கியம் - உண்டு
  11. உளவியல்: ஆணாக
ஒரு நபர் பெண்  என்று எப்படி கூறுகிறோம் என்றால்
  1. மரபணு பால் (Genetic Sex) - அவரின் உயிரணுக்களில் (நிறமி) இருப்பது 22 இணை மரபணுச்சரங்கள் (அதாவது 44 மரபணுச்சரங்கள்) + இரு X மரபணுச்சரங்கள்
  2. இனஉறுப்புகள் - சினைப்பைகள். அதே போல் பிற  முட்டைப் பைக்குழாய், கர்ப்பப்பை, பெண் இனச்சேர்க்கை உறுப்பு போன்றவைகளும் இருக்கும்.
  3. நாளமில்லாச் சுரப்பி சுரக்கும் இயக்குநீர்: அதிக அளவில் ஈஸ்ட்ரஜன், ப்ரொஜஸ்ட்ரன் போன்றவை மற்றும் சிறிய அளவில் டெஸ்டோஸ்டிரோன்
  4. உடல் வாகு / பிற உடல் மாற்றங்கள் : பெண் என்றால் நீண்ட தலைமுடி. அது போல் குரலில் வேறுபாடு . தாடி, மீசை கிடையாது. இந்த வித்தியாசங்களுக்கு நாளமில்ல சுரப்பிகள் சுரக்கும் இயக்குநீரே முக்கிய காரணம் ஆகும். இது போல் பெண் என்றால் ஆண்களை விட மெல்லிய  (சக்தியுள்ள) எலும்புகள், தசைகள். பெண் என்றால் ஆணை விட பெரிய இடுப்பெலும்பு. (ஒரு எலும்பை வைத்து அது ஆணா, பெண்ணா என்று கூறிவிடலாம் - சில விதிவிலக்குகள் உண்டு - அதைத்தானே பார்க்க போகிறோம் !!). அது போல் ஆணுக்கும் பெண்ணுக்கும் உடலில் முடி வளரும் இடங்கள், மற்றும் வளரும் விதம் வேறு. இது தவிர பெண்ணிற்கு மார்பகங்கள், தோலுக்கு அடியில் அதிக கொழுப்பு, அதனால் வளைவுகள் என்று சில “வெளிப்புற” வித்தியாசங்கள்.
  5. ஆண்குறி - கிடையாது 
  6. பெண்குறிமூலம் - பெண் அளவு 
  7. பெண் இனச்சேர்க்கை உறுப்பு.  - பெண் அளவு
  8. சிறுநீர் கழிப்பது - பெண் போல்
  9. மாதவிடாய் - உண்டு
  10. குழந்தை பாக்கியம் - உண்டு
  11. உளவியல்: பெண்ணாக
இதில் உங்களுக்கு தோன்றக்கூடிய சந்தேகம் என்னவென்றால் பெண்குறிமூலம் மற்றும் பெண் இனச்சேர்க்கை உறுப்பு. இரண்டும் ஒன்றா வேறா என்பது தான். இரண்டும் வேறு.

பிற சந்தேகங்களை கேளுங்கள்

அடுத்த இடுகையில் கீழ்க்கண்ட கூறகள் கொண்ட நபர்களைப்பற்றி பார்ப்போம்
  1. மரபணு பால் - பெண்
  2. இன உறுப்புகள் பால் - பெண்
  3. புறத்தோற்ற பால் - ஆண்
  4. உளவியல் பால் - ஆண்
இந்த இடுகைத்தொடரின் அடுத்த இடுகைகள்

Monday, August 11, 2008

தமிழக அரசு மருத்துவக்கல்லூரிகளில் இடம் கிடைத்தும் சேராதவர்களின் சாதி என்ன

தமிழகத்தில் 04.07.2008 முதல் மருத்துவ படிப்பு மற்றும் பல் மருத்துவ படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு நடந்தது

இதில் கலந்து கொண்டு இடங்களை தேர்வு செய்த பலர் அந்தந்த கல்லூரிகளில் சேர்ந்தாலுல், சிலர் (? வேறு பாடங்களை கற்ற இடம் கிடைத்ததால் - அல்லது மருத்துவம் பிடிக்காததால் :) :) ) படிப்பில் சேர வில்லை.

இடப்பங்கீடு குறித்த எனது முந்தைய பதிவான தமிழகத்தில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் 500 மாணவர்களின் ஜாதி என்னஎன்ற பதிவின் மறுமொழிகளில் (மற்றும் எனக்கு வந்த மின்னஞ்சல்களில்) பல கீழ்க்கண்ட கருத்துக்கள் / வினாக்கள் எழுப்பப்பட்டன.

கருத்து 1
இந்த 500 ஓபிசி மாணவர்களின் தனிப்பட்ட குடும்ப-பின்புலம் குறித்த தகவல் தெரியாமல் பொத்தாம் பொதுவான அறிக்கையை ஒட்டுமொத்த ஓபிசியினரது சமூக பிரதிபலிப்பாக எடுத்துக்கொள்வது பிழையாகவே அமையும்.

மேலும் வெறும் எம்பிபிஎஸ் படித்து ஏதும் பயனற்ற நிதர்சன சூழலில் எம்டி / எம்.எஸ் என்று கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் படிக்கவைக்க வசதி படைத்தோர் மட்டுமே மருத்துவப்படிப்பை தேர்ந்தெடுக்கின்றார்கள்.

இன்றைக்கு உடனடியாக படித்து வேலையில் பொருளீட்ட வாய்ப்பளிப்பது மென்பொருள்துறை மற்றும் இன்ன பிற துறைகளே.

வருவாய் குறைந்த (தமிழக) அரசு வேலையை திறமையானவர்களில் வேலைதேடுவோர் பலரும் விரும்பாத மாதிரி, இன்றைக்கு மருத்துவப் படிப்பும் பெரிதும் விருப்பப் படிப்பாக மாணவர்களிடையே இல்லாத சூழ்நிலையில், மருத்துவத்துறையில் கல்வி பயில்வது என்பது மாணவரால் விரும்பித் தேர்வு செய்யப்படும் சூழல் போய் அவரது குடும்ப வசதி வாய்ப்புகளே முடிவு செய்யும் இன்றைய சூழலில் 500 மருத்துவ மாணவர் பட்டியலை மட்டும் வைத்து முடிவுக்கு வந்துவிட முடியவில்லை.

இன்றைய நிதர்சனம் மருத்துவப்படிப்பு =தமிழக அரசு வேலை. இவை இரண்டிற்கும் திறன் நிரம்பியோர் பெரும்பாலானோர் பங்கே

வினா 1.
மறுமொழிகளில் சிலர் குறிப்பிட்டிருந்தது போல், முற்பட்ட சாதி மக்களிடையே (பிராமணர்கள் உட்பட) மருத்துவப் படிப்பிற்கு மவுசு குறைந்திருப்பது கண்கூடு (நேரடியாய்ப் பார்க்கிறேன். 2007ல் கூட மருத்துவம் படிப்பின் தரவரிசையில் முதல் 107பேர் counseiling வரவில்லை எனப் படித்தேன்) காரணம் எளிது - மருத்துவத்தை விட பொறியியல் படித்த ஒருவர் இன்று சீக்கிரம் 'செட்டிலாகி விட' முடியும்! என் நண்பனின் வகுப்புத் தோழனே குறிப்பிடுவான் - பொறியியல் படித்த ஒருவர் (ஏன் இளங்கலை இயற்பியல் அல்லது கணிதம்) ஆண்டொன்றுக்கு ஐந்து லட்சம் சம்பளம் என்ற இலக்கை எளிதில் எட்டிப் பிடிக்க முடியும்(25 வயதிற்குள்). மருத்துவத்தில் இது சாத்தியமில்லை என்று சொல்லவில்லை; 30 வயதில் கிட்டத்தட்ட இருவரும் ஏறக்குறைய ஒரே வருவாயைத்தான் ஈட்டிக்கொண்டிருப்பர் என நினைக்கிறேன். ஆனால் முன்னர் குறிப்பிட்டது போல், இதில் முற்பட்ட வகுப்பினருக்கு ஆர்வம் குறைந்து அவர்கள் இதில் போட்டியிடுவதில்லை அல்லது வெகுவாகக் குறைந்து விட்டது என்றே நினைக்கிறேன். இதற்குத் தங்கள் பதில் என்ன?
எனது பதில்கள்
  • அவர்கள் (கலந்தாய்வு வராதவர்கள்) முற்பட்ட வகுப்பினர் மட்டும் அல்ல. அனைத்து வகுப்பினரும் தான்.
  • மருத்துவரின் வருவாய் குறைவு
  • மருத்துவ படிப்பு குறித்து அனைத்து வகுப்பினருக்கும் ஆர்வம் குறைந்துள்ளது
மருத்துவ துறையின் மீது ஆர்வம் குறைந்து வருகிறது என்பது உண்மை தான்.

ஆனால் இன்று ஒரு பள்ளி ஆசிரியரின் மகன் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்தாலும் அதை விட்டு பொறியியல் போவதற்கு வாய்ப்பு என்ன. X என்று வைத்துக்கொள்ளுங்கள்

ஆனால் இன்று ஒரு மருத்துவரின் மகன் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்தாலும் அதை விட்டு பொறியியல் போவதற்கு வாய்ப்பு என்ன. Y என்று வைத்துக்கொள்ளுங்கள்

X பெரிதா, Y பெரிதா, என்றால் விடை எளிது தானே

அதாவது

ஒரு பள்ளி ஆசிரியரின் மகன் மருத்துவக்கல்வி வேண்டாம் என்று கூறுவதை விட ஒரு மருத்துவரின் மகன் மருத்துவக்கல்வி வேண்டாம் என்று கூறுவதற்கு வாய்ப்பு குறைவு

புரியவில்லை என்றால் திருப்பி யோசியுங்கள்

ஒரு மருத்துவரின் மகன் மருத்துவக்கல்லூரியில் சேர ஆசைப்படுவது என்பது ஒரு பள்ளி ஆசிரியரின் மகன் மருத்துவக்கல்லூரில் சேர ஆசைப்படுவது - இதில் எது அதிகம்

சென்ற தலைமுறையில் (1970களில்) எந்த வகுப்பினர் மருத்துவக்கல்லூரியில் அதிகம் சேர்ந்தார்கள்

அப்படி இருக்கும் பட்சத்தில்

மருத்துவம் படிப்பின் தரவரிசையில் சிலர் கலந்தாய்வு வர வில்லை என்றால் அதில் எந்த சமுகம் அதிகம் இருக்கும், எந்த சமுகம் குறைவாக இருக்கும் என்று கணக்கிடுவது சிரமம் அல்ல

இது குறித்த ஆதாரம் கீழே உள்ளது.

தமிழக அரசு மருத்துவக்கல்லூரிகளில் 2008-2009 ஆண்டுக்கான இளங்கலை மருத்துவம் எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கை நிலவரம் குறித்து கிழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவனை தற்சமயம் காலியாக உள்ள இடங்களை காட்டுகிறது.

இதைப்பார்த்தீர்கள் என்றால், அனைத்து பிரிவிலும், மாணவர்கள் மருத்துவக்கல்லூரியில் சேர இடம் கிடைத்தாலும் மருத்தவம் தவிர்த்த பிற துறைகளுக்கு செல்ல ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதை எளிதாக அறிந்து கொள்ளலாம்.

வ. எ.

கல்லூரி


31%

OC

23%

BC

3.5%

BCC

3.5%

BCM

20%

MBC

18%

SC

1%

ST

மொத்தம்

01

மதராசு மருத்துவக்கல்லூரி, சென்னை

5

2

-

-

2

1

-

10

02

ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி, சென்னை

2

-

-

-

2

-

-

4

03

மதுரை மருத்துவக்கல்லூரி, மதுரை

1

4

-

1

2

-

-

8

04

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி, தஞ்சாவூர்

1

4

-

-

1

1

-

7

05

கீழ்பாக்கம் மருத்துவக்கல்லூரி, சென்னை

1

1

-

-

1

1

1

5

06

செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி, செங்கல்பட்டு

2

-

-

-

1

2

-

5

07

திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி, திருநெல்வேலி

-

4

-

-

2

-

-

6

08

கோயம்புத்தூர் மருத்துவக்கல்லூரி, கோயம்புத்தூர்

2

-

-

-

-

2

-

4

09

அரசு மோகன் குமாரமங்களம் மருத்துவக்கல்லூரி,

-

-

-

-

1

1

-

2

10

அரசு கி.ஆ.பெ விசுவனாதன் மருத்துவக்கல்லூரி, திருச்சி

-

3

-

-

1

1

-

5

11

தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி, தூத்துக்குடி.

-

2

-

-

2

-

-

4

12

கன்னியாகுமரி மருத்துவக்கல்லூரி, நாகர்கோவல்.

-

3

-

-

1

4

-

8

13

வேலூர் மருத்துவக்கல்லூரி, வேலூர்

-

1

2

2

4

3

-

12

14

தேனி மருத்துவக்கல்லூரி, தேனி

-

2

-

-

-

2

-

4

15

தர்மபுரி மருத்துவக்கல்லூரி, தர்மபுரி

27

20

3

3

16

15

1

85


மொத்தம்

41

46

5

6

36

33

2

169


இடப்பங்கீடு குறித்த விவாதங்களுக்கு நீங்கள் புதியவர் என்றால் கீழ் உள்ள தகவல்கள் உங்களுக்கு உதவும்
  • OC முற்பட்ட வகுப்பினர் - எப்.சி - 55 மாணவர்கள்
  • BC பிற்படுத்தப்பட்டவர்கள் - பி.சி - 293 மாணவர்கள்
  • BCC கிருத்தவர்கள் - பி.சி.சி - 29 மாணவர்கள்
  • BCM முஸ்லிம்கள் - பி.சி.எம் - 20 மாணவர்கள்
  • MBC மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் - எம்.பி.சி - 70 மாணவர்கள்
  • SC அட்டவனை வகுப்பினர் - எஸ்.சி - 32 மாணவர்கள்
  • STபழங்குடியினர் - எஸ்.டி
மொத்தம் 169 இடங்களில் முதல் கலந்தாய்வில் கலந்து கொண்டு இடங்களை தேர்வு செய்தவர்கள் சேர வில்லை.

இதில் 31 சதவிட இடப்பங்கீடு உள்ள பொது வகுப்பினரின் இடங்களில் காலியாக உள்ளது 41 இடங்கள் தான்
ஆனால்
  • அதை விட குறைவாக 30 சதவித இடப்பங்கீடு உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இடங்களில் காலியாக உள்ளது 46 இடங்கள்
  • 20 சதவித இடப்பங்கீடு உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இடங்களில் காலியாக உள்ளது 36 இடங்கள்
  • 18 சதவித இடப்பங்கீடு உள்ள அட்டவனை வகுப்பினரின் இடங்களில் காலியாக உள்ளது 33 இடங்கள்

எனவே
இடம் கிடைத்தும் மருத்துவக்கல்லூரிகளில் சேராமல் இருக்கும் மாணவர்களில் முற்பட்ட வகுப்பு மாணவர்கள் வெகு குறைவுதான்
  • பொது பிரிவு இடங்களில் 41 இடங்கள் காலியாக உள்ளன காலியாக உள்ள மொத்த இடங்களில் 24.26036 % இடங்கள் பொது பிரிவிற்கு ஒதுக்கப்பட்டவை
  • பிற்படுத்தப்பட்டவர்கள் - பி.சி - இடங்களில் 46 இடங்கள் காலியாக உள்ளன காலியாக உள்ள மொத்த இடங்களில் 27.21893 சதவித இடங்கள் இந்த பிரிவிற்கு ஒதுக்கப்பட்டவை. இதில் அனைத்து சாதி மாணவர்களும் தேர்வாகி இருப்பார்கள் என்பதை நினைவில் வைக்க வேண்டும்
  • கிருத்தவர்கள் - பி.சி.சி - இடங்களில் 5 இடங்கள் காலியாக உள்ளன காலியாக உள்ள மொத்த இடங்களில் 2.95858 சதவித இடங்கள் இந்த பிரிவிற்கு ஒதுக்கப்பட்டவை
  • முஸ்லிம்கள் - பி.சி.எம் - இடங்களில் 6 இடங்கள் காலியாக உள்ளன காலியாக உள்ள மொத்த இடங்களில் 3.550296 சதவித இடங்கள் இந்த பிரிவிற்கு ஒதுக்கப்பட்டவை
  • மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் - எம்.பி.சி - இடங்களில் 36 இடங்கள் காலியாக உள்ளன காலியாக உள்ள மொத்த இடங்களில் 21.30178 சதவித இடங்கள் இந்த பிரிவிற்கு ஒதுக்கப்பட்டவை
  • அட்டவனை வகுப்பினர் - எஸ்.சி இடங்களில் 33 இடங்கள் காலியாக உள்ளன காலியாக உள்ள மொத்த இடங்களில் 19.52663 சதவித இடங்கள் இந்த பிரிவிற்கு ஒதுக்கப்பட்டவை
  • பழங்குடியினர் - எஸ்.டி இடங்களில் 2 இடங்கள் காலியாக உள்ளன காலியாக உள்ள மொத்த இடங்களில் 1.183432 சதவித இடங்கள் இந்த பிரிவிற்கு ஒதுக்கப்பட்டவை
  • மொத்தமாக 169 இடங்கள் காலியாக உள்ளன
ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேட்கலாம்

Sunday, August 10, 2008

சென்னை வலைப்பதிவர் சந்திப்பு : 10.08.2008

இன்று மாலை 05:30 மணிக்கு காந்தி சிலை பின்புறம் வலைப்பதிவர் சந்திப்பு நடப்பதாக காலையிலேயே பதிவர் அதிஷாவிடமிருந்து குறுஞ்செய்தி வந்தது.

மருத்துவமனை பணிகள் முடித்தபின் ஒரு மருத்துவ முகாமிற்கு சென்று அங்கிருந்து கிளம்பி வந்து கொண்டிருந்தபோது முதலில் பதிவர் அதிஷாவும் பின்னர் பதிவர் வால்பையனும் அலைபேசியில் அழைத்தார்கள்.

போக்குவரத்து நெரிசலில் மாட்டி அதன்பின் தப்பித்து நான் காந்தி சிலை வந்து சேரும்போது மாலை 7 மணி ஆகிவிட்டது. அதற்குள் சந்திப்பு காந்தி சிலையிலிருந்து தேநீர் கடைக்கு இடம் பெயர்ந்து விட்டது. முதலில் பேசப்பட்ட கருத்துக்கள் மற்றும் வந்த பதிவர்கள் (எ.கா முரளிகண்ணன்) குறித்த தகவல்கள் தெரியவில்லை. நான் சென்றபோது பாலபாரதி, லக்கிலுக், டோண்டு, அதிஷா, ஜிங்காரோ ஜமீன், கடலையூர் செல்வம், வெண்பூ என்னும் வெங்கட், ரமேஷ் வைத்யா ஆகியோர் தேநீர் அருந்திக்கொண்டிருந்தனர்

நான் அரட்டையில் ஐக்கியமாகும்போது டாக்டர் பிரகாஷ் எழுதிய கதைகள் குறித்து விவாதம் நடந்து கொண்டிருந்தது.

கூகிள் தேடு பொறியில் டோண்டு என்று தேடினால் 33,600 பக்கங்கள் வருவதாக பதிவர் டோண்டு கூறினார்.

தசாவதாரம் திரைப்பட வெளியீட்டின் போது வேறு விளம்பரங்கள் எதுவும் பெரிதாக செய்யாமல் ஒலி்நாடா வெளியீட்டிற்கு மட்டுமே அதிக பணம் செலவழித்தாக லக்கி கூறினார். (லக்கி விளம்பரத்துறையில் பணிபுரிகிறார்)

வெண்பூ வெங்கட்டை இன்றுதான் நான் முதன்முதலாக சந்திப்பதால் அவருடன் அதிக நேரம் பேசிக்கொண்டிருந்தேன். முக்கியமாக வலைப்பதிவுலகில் நுழைந்தபோது நடந்த அனுபவங்கள் மற்றும் நான் அறிமுகப்படுத்திய சிலர் பின்னங்கால் பிடரியில்பட ஓடியது ஆகிய கதைகளை பேசிக்கொண்டிருந்தோம்.

இந்த சந்திப்பு பிற பதிவர்களின் பார்வையில்
  1. பதிவர் டோண்டு : பதிவர் சந்திப்பு 10-08-2008
  2. பதிவர் வெண்பூ : சென்னைப் பதிவர் சந்திப்பு 10.ஆகஸ்ட்.2008 (படங்களுடன்)

Thursday, August 07, 2008

சென்னை பதிவர் சந்திப்பு : 06.08.2008

நிகழ்ச்சி: சென்னை பதிவர் சந்திப்பு
நாள்: 06.08.2008
இடமும் நேரமும்:
  1. சென்னை கடற்கரை காந்தி சிலை பின்புறம் (மாலை 6:30 முதல் 8 வரை)
  2. கடற்கரை அருகில் உள்ள தேநீர் கடை (8 முதல் 9 வரை)
  3. எழும்பூர் சரவண பவன் (9:30 முதல் 10:30 வரை)
பங்கு பெற்றோர்: சென்னை தமிழ் வலைப்பதிவர்கள் - பாலபாரதி, லக்கிலுக், முரளிகண்ணன், அதிஷா, ஜிங்காரோ ஜமீன், கடலையூர் செல்வம், நரசிம் மற்றும் அவரது தோழர் சம்பத், சிவஞானம்ஜி, வளர்மதி, பதிப்பாளர் நீலகண்டன் - மற்றும் சிறப்பு விருந்தினர் புதசெவி என்னும் TBCD

விவாதிக்கப்பட்ட கருத்துக்கள்:
  1. பதிவர்கள் எப்படி பதிவு எழுத தூண்டப்பட்டார்கள் - இதற்கு செல்வம் அளித்த பதில்- ******* பதிவை பார்த்து என்று. முரளி கண்ணன் அளித்த பதில் ***** பதிவை பார்த்து என்று. இரண்டு வேவ்வேறு பதிவுகள். இரணடு பதிவுகளின் பெயரிலும் உள்ள வார்த்தைகள் எதுவுமே தமிழ் மணத்தில் தடைசெய்யப்படவில்லை.
  2. மென்பொருள் துறையில் மற்றும் இதர துறைகளில் வேலை செய்வதால் பெண்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கிறது
  3. குசேலன் - என்ன பேசப்பட்டிருக்கும் என்பது உங்களுக்கு தெரிந்தது தானே
  4. ரஜினிகாந்த - இதிலும் என்ன பேசப்பட்டிருக்கும் என்பது தெரிந்திருக்கும். அல்லது ஊகிக்கலாம் !!.
  5. ரீத்திஷ்
  6. சிம்பு :)
  7. நயன் தாரா :)
  8. வேறு பெயரில் எழுதும் பதிவர்கள் எளிதில் வெளிப்படுவது
  9. லக்கியை பாதித்த எழுத்தாளர் யார் ??
  10. சென்னை ஐ.ஐ.டியில் கலாசார நிகழ்ச்சியில் கரகாட்டம் சேர்க்கப்பட்டது
  11. பதிவர் பனிமலர் யார் என்ற விவாதம்
  12. பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள வேண்டாம் என்று அன்பான வேண்டுகோள் சில மூத்த பதிவர்களுக்கு விடுக்கப்பட்டதாக தெரிகிறது :)
  13. பதிவுலகில் பெண்கள் குறைவாக எழுதுவதாக கூறப்பட்டது. இது குறித்து என் கருத்து. பதிவுகளில் பெண்பெயரில் எழுதும் பதிவர்களின் 50 சதவிதம் ஆண்கள். பெண்களில் 80 சதம் ஆண் பெயரில் எழுதுகிறார்கள் -இது மருத்துவம் குறித்த விவாதகளங்களில் 2002 முதல் ஈடுபட்டு வரும் நான் கண்டது- இது குறித்த உங்கள் பார்வை என்ன
  14. அடுத்த பதிவர் சந்திப்பு 10-08-2008 ஞாயிறு மாலை 6 : 30 மணிக்கு. மெரினா கடற்கரை காந்தி சிலை அருகில்
விடுபட்டவை:
  1. பதிவர் அதிஷா எனக்கு அவர் கூறியபடி சுட்டபழம் எண்ணிலக்க ஒளி தகடு தர வில்லை.
  2. பதிவர் நரசிம் மற்றூம் புதசெவி இருவரின் Sense of Timing அசத்தல். தொடர்ந்து சிரித்து கொண்டே இருந்தோம்
  3. எழும்பூரில் உள்ள சரவணபவன் உணவகம் குழந்தைகளுக்கான சிறப்பு உணவகமா என்று தெரியவில்லை. எல்லா உணவு பண்டங்களுமே சிறிய அளவிலேயே உள்ளன. (விலை மட்டும் தான் பெரிதாக இருக்கிறது)
இதே சந்திப்பு பிற பதிவர்களின் பார்வையில்:
  1. சென்னை பெருங்குழப்பம் குழப்பமில்லாமல் நடந்தேறியது : பதிவர் சந்திப்பு 6 ஆக் 08
  2. ஜிங்காரோ ஜமீன் - TBCD யின் நிறைவேறாத குல்ஃபி ஐஸ் ஆசை - 06-08-2008 சென்னை பதிவர் சந்திப்பு
இத்தளத்தில் தேட :நீங்கள் வாசிக்க விரும்பும் தகவல்களை தேடி பெறலாம். கீழ்க்கண்ட பெட்டியில் உள்ளிடவும்

தொடர்புடைய தளங்களின் தேட

Loading...