இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசிக்க / இந்த பக்கம் கணினியில் திறக்க தாமதமானால்: இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த சுட்டியை பயன்படுத்தலாம்

Saturday, August 29, 2009

பிருத்வி சம்புக்தாவை இஸ்துகினு பூட்டான் / நூட்டன் பூமி புட்ச்சு இயிக்கும் போர்ச கண்டுக்கினார் - சென்னை தமிழில் பள்ளி பாட நூல்கள் எழுத வேண்டிய அவசியம்

சென்னை தமிழ் கற்பது பாவச்செயலா

சிறிது சிந்தித்து பார்த்தால் தமிழர்கள் அனைவரும் சென்னைக்கு வரும் அவசியம் இருக்கிறது. 

உறவினர்கள் / நண்பர்கள் திருமணம், வேலை, வியாபாரம் என்று ஏதாவது காரணத்திற்காக சென்னைக்கு வருவது அவசியமே


அது மட்டுமல்ல, அரசு வேலையில் சேர வேண்டுமென்றால் சென்னைக்கு வரவேண்டியது அவசியம். தலைமை செயலகத்தில் மனு அளிக்க வேண்டுமென்றாலும் சென்னைக்கு வர வேண்டும்

திரைப்பட கதாநாயகன் ஆக விரும்புபவர்கள், திரைப்பட இயக்குனராக விரும்புபவர்கள், பத்திரிகை நடத்த விரும்புபவர்கள், பத்திரிகைகளில் எழுதுபவர்கள், என்று பல தரப்பட்ட மக்களும் சென்னைக்கு வருவது அவசியம் 

இது மட்டுமல்ல, பல விளையாட்டு போட்டிகளில் பங்குபெறுபவர்களும் சென்னைக்கு வர வேண்டிய கட்டாயம் இருக்கிறது
பணிநிமிர்த்தமாகவோ அல்லது சுற்றுலா போன்ற இதர காரணங்களுக்காகவோ தன் சொந்த ஊரை தாண்டி சென்னை செல்லும், தாம்பரத்தில் இருக்கும் மேம்பாலத்தை தாண்டிச்செல்லும் ஒருவர் சென்னைத்தமிழ் தெரியாத போது தான் அனுபவிக்கும் சிரமங்களை சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

சென்னைக்கு முதலில் வந்த போது நான் அனுபவித்திருக்கிறேன். தாம்பரத்தை தாண்டி வந்து விட்டால், சென்னைத்தமிழ் மட்டுமே மொழியாக இருக்கிறது. சென்னைத்தமிழ் என்ற ஒரு மொழி பேச தெரிந்தால் சென்னை முழுவதும் சிரமமின்றி தம் தேவையை நிறைவேற்றிக்கொள்ளலாம்.

சென்னையில் பெரும்பாலானோர் பேச்சு மொழியாக கொண்டிருக்கும் மொழியை சென்னைக்கு வந்து போக வேண்டிய அவசியம் இருக்கும்அனைவரும் பேச கற்றுகொள்ளுதல், அவரவர் வாழ்வில் நன்மைபயக்கும். 

நம் அண்டை மாநிலத்தவர் எப்போதோ இதை ஏற்றுக்கொண்டு விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகப் பொது மொழியான ஆங்கிலத்தையே கற்கலாமே, சென்னைத்தமிழ் எதற்கு? என்ற வாதமும் கூடவே வருகிறது. ஆங்கிலம் கற்பதற்கு யார் தடை விதித்தார்கள்? தாராளமாக கற்கலாம். சர்வதேச தொடர்பில் தொழில் செய்பவர்களுக்கு கட்டாயம் ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும் என்பது போலவே, சென்னைக்கு வருபவர்களுக்கு, தொழில் தொடர்பு செய்பவர்களுக்கு சாமானியர்களோடு பேச சென்னைத்தமிழ் அவசியமாகிறது.

ஆனால் தமிழர்களில் எத்தனை பேருக்கு சென்னை தமிழ் தெரிகிறது.. மிக மிக குறைவே என்பது வருத்தப்படவேண்டிய விஷயம் அல்லவா


நம் அரசியல் வாதிகளை பாருங்கள். அவர்கள் குழந்தைகள் எல்லாரும் சென்னைத்தமிழ் நன்றாக பேசுகிறார்கள். ஆனால் மற்றவர்களை சென்னை தமிழ் படிக்கவிடாமல் ஒரு தலைமுறையே சென்னைக்கு வந்தால் கஷ்டப்பட வேண்டியுள்ளது


தாய் மொழி தவிர பிற மொழிகள் கற்றுக்கொள்வது தவறா? பாவச் செயலா? அட, என்னங்க… உலகமயமாக்கலின் பலன்களை அனுபவித்து வரும் இந்த காலத்திலும், கற்றலுக்கு தடைவிதிப்பது கட்டுப்பெட்டித்தனம் இல்லயா? கல்விக்கு ஏது எல்லை, கற்கும் சூழலும் வாய்ப்பும் இருப்பவன் கற்கட்டும், அதை தடுக்கக்கூடாது.
இதற்கெல்லாம் என்ன தீர்வு -- > பள்ளி பாடபுத்தகங்கள் அனைத்து சென்னைத்தமிழிலேயே எழுதப்பட வேண்டும்
அப்படி எழுதினால் அனைவரும் சென்னை தமிழ் நன்றாக கற்பார்கள். சென்னைக்கு ஒரு நாளோ இரு நாட்களோ வந்து போகும் போது கவலைப்படவேண்டியதில்லை !!
நான் சென்னைக்கு வந்த போது சென்னை தமிழ் தெரியாமல் கஷ்டப்பட்டேன்
அதனால் நான் அனுபவித்த கஷ்டத்தை யாரும் அனுபவிக்க கூடாது என்பதற்காகவே அனைவரும் சென்னை தமிழ் கற்க வேண்டும் என்று கூறுகிறேன் ; பாடப்புத்தகங்கள் அனைத்தும் சென்னை தமிழில் தான் எழுதப்பட வேண்டும் என்று வலியுருத்துகிறேன்
உதாரணமாக புவிஈர்ப்பு விசை என்பதற்கு பதிலாக “பூமி புட்சு இய்க்கும் போர்ஸ்” என்று தான் அறிவியல் பாட நூல்களில் எழுதப்பட வேண்டும்


அசோகர் ரோட்டுக்கு அந்தாண்ட மரம் நட்டுக்கினா என்று சரித்திரப் பாடப்புத்தகங்களில் எழுதப்பட வேண்டும்
இப்படி எல்லாம் பாடப்புத்தகங்களில் மாற்றுவதன் மூலம்
தலைமைச்செயலகத்தில் வேலை செய்ய விரும்புபவர்களுக்கும், திரைப்படத்தில் நடிக்க, திரைப்ப்டங்களை இயக்க, வருபவர்களும் சென்னை வந்தால் கவலைப்பட தேவையில்லை
ஒரேயடிகாக சென்னைத்தமிழை ஒதுக்கி தள்ளாமல் பள்ளி பாடப்புத்தகங்களை சென்னைத்தமிழில் எழுதுவதில் உள்ள சாதக பாதகங்கள் அலசப்பட வேண்டும்
சென்னை தமிழை படிக்கவிடாமல் ஒரு தலைமுறையே பாழ் பட்டு கிடக்கிறதே.. ஐயகோ.. இந்த கொடுமையை நான் எங்கே போய் சொல்வேன்
சென்னைக்கு ஒரு முறையாவது வந்திருக்கும் யாரிடம் வேண்டுமானாலும் கேட்டுப்பாருங்கள் சென்னை தமிழ் தேவை என்று கூறுவார்கள்
அது தெரியாததால் பெற்ற சிரமங்களையும் பட்டியலிடுவார்கள்
உங்களுக்கு சென்னையில் வேலை கிடைக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். பள்ளியில் சென்னைத்தமிழை பாடமாக கற்காத உங்களுக்கு சென்னையில் எவ்வளவு சிரமங்கள்
நினைக்கவே பதறுகிறதே சார் !!
அது தான் சொல்கிறேன் : பிருத்வி சம்புக்தாவை இஸ்துகினு பூட்டான் என்றே பள்ளி வரலாற்று புத்தகங்களில் எழுதப்பட வேண்டும்
இந்த இடுகையை வாசித்து உங்களுக்கு முழுவதும் புரியவில்லை என்றால் பதிவர் பீர் அவர்களின் ஹிந்தி கற்பது பாவச்செயலா? என்ற இடுகையை வாசிக்கவும்


இந்த இடுகையை பாராட்ட விரும்பினால் கூடவே இதை விட அருமையாக எழுதப்பட்டிருக்கும் பதிவர் ரவியின் F இடுகையையும் பாராட்டுங்களேன்

Friday, August 28, 2009

உலகின் ஒரே இசையமைப்பாளர் இளையராஜா சிம்பொனி அமைத்தது உண்மையே !! ??

உலகின் ஒரே இசையமைப்பாளர் இளையராஜா சிம்பொனி அமைத்தது உண்மையே என்று என்னை சொல்ல வைக்க முடியாது என்று முடிவு செய்து என் பெயரில் அவர்களே சொல்கிறார்கள் !!


என்னத்த சொல்ல !!

அன்பின் பதிவுலகமே...

இப்பொழுதுதான் என்னைப்பற்றி முரளி கண்ணன் எழுதினார்.அப்பொழுதே நினைத்தேன்..ஏதாவது ஏடாகூடம் நடக்கும் என்று..

ஏனெனில் என்னோடான கருத்துமோதல்கள் பற்றி பதிவுலகம் நன்கறியும். ஆனால் மெத்த படித்தவர்களிடமிருந்து இதை எதிர்ப்பார்க்கவில்லை.

புருனோவுக்கு ஒன்றும் தெரியாது என்று ஒருவர் சொன்னால்..
நான் ஏதாவது எதிர்வினையோ கருத்தோ சொல்லலாம்.அதுதான் முறை.

ஆனால்..

நான் புருனோ..எனக்கு ஒன்றும் தெரியாது என்று என் பெயரில் சிலர் கருத்து சொல்வது கீழ்த்தரமானது. அதர் ஆப்ஷனில் நடந்துகொண்டிருந்த தொல்லை இப்பொழுது அதராப்ஷன்பிளாக்காக பரிமாணம் பெற்றுள்ளது.

தங்கள் திறன் மேல் நம்பிக்கையில்லாதவர்கள் தான் போலிகளின் பின்னால் ஒளிவார்கள் என்பது நாடறியும்

இதைப் பற்றி கருத்துக் கூற ஒன்றுமில்லை..

ஏனெனில் இவ்வளவு தூரம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்து நன்றாக வடிவமைத்தவர் அல்லது அமைத்தவர்கள் (குழு?) உண்மையிலேயே படித்தவர்களாகத்தான் இருக்கவேண்டும்.

படித்த கல்வியே அவர்களை நெறிப்படுத்தவில்லை என்பதின் வெளிப்பாடே இந்த செயல்.

இதில் என் கருத்தைக் கேட்டா திருந்தியோ அல்லது வருந்தியோ விடப் போகிறார்கள்.. (இவர்களை தொடர்ந்து வாசிப்பவர்களை நினைத்தேன். ஒரே நேரத்தில் சிரிப்பும் வருகிறது. கவலையாகவும் இருக்கிறது)

இன்று எனது மறுமொழி ஒன்று என் பெயரில் வேறு ஒரு போலி புரோபைல் உருவாக்கப்பட்டு சில இடுகைகளில் வெட்டி ஒட்டப்பட்டுள்ளது

என் வருத்தமும் இந்த பதிவின் நோக்கமும் ஒன்றே..... அது போலி. அதில் இடம்பெறும் கருத்துகளுக்கு நான் பொறுப்பாக மாட்டேன் என்பதை தெரிவிக்கவே..

கருத்துகளை மறுத்தாலும் நாகரீகம் மறக்காத
அதே
புருனோ.

Wednesday, August 26, 2009

தமிழ்மணம் ஐந்தாண்டுகள் - காசியின் கேள்விகளும் என் பதில்களும்

தமிழ்மணம் தளத்தின் ஐந்தாம் ஆண்டு நிறைவையொட்டி பதிவர் காசி அவர்களின் கேள்விகளுக்கு நான் அனுப்பிய பதில்களை இங்கு தந்துள்ளேன்

முக்கிய விஷயங்கள்
  • இது பதிவர் காசி அவர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சல் என்பதால், அவருக்கு தெரியும் என்று எனக்கு தெரிந்த விஷயங்கள் குறித்து நான் விரிவாக எழுதியிருக்கமாட்டேன் உ
  • உதாரணம் TUNE. TUNE என்றால் Tamil Unicode New Encoding (TUNE) மோசார்ட்டும், ரஹ்மானுன் போடுவது அல்ல
  • இது போல் பல விஷயங்கள் (தெளிவில்லாமல்) இருக்கலாம்.
  • சந்தேகம் இருந்தாலோ, புரியவில்லை என்றாலோ மறுமொழியில் கேளுங்கள். விளக்குகிறேன்
கேள்விகள் நீலநிறத்திலும், பதில்கள் கருப்பு நிறத்திலும் உள்ளன

// 1. இணையத்தில் தமிழ் உள்ளடக்கங்கள் தேவையான அளவுக்கு உள்ளன என்று எண்ணுகிறீர்களா?//
கண்டிப்பாக இல்லை
இன்னும் நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகம் என்றே நினைக்கிறேன்

//கணினியும் இணையமும் கிடைக்க வசதியுள்ள தமிழர் இன்னும் இவற்றில் அதிகமாகத் தமிழில் புழங்கவேண்டுமானால் என்னவெல்லாம் செய்யவேண்டும்?//

  • முதலில் ஒருங்குறி குறித்து ஒரு முடிவிற்கு வர வேண்டும்
  • TUNE வேண்டுமா, இல்லையா என்று திட்ட வட்டமாக முடிவு செய்ய வேண்டும். அதன் பிறகு தான் கீழ்க்கண்டவைகளை செய்ய முடியும்
  • அதன் பிறகு தமிழகத்திற்கும் இருக்கும் உலாவியங்களில் கண்டிப்பாக ஒருங்குறியில் தமிழ் தட்டச்சு செய்யும் வசதி வேண்டும் என்று சட்டம் இயற்ற அரசை கேட்டுக்கொள்ள வேண்டும்
  • அனைத்து அரசு அலுவலகங்களில் இருக்கும் கணினிகளிலும் ஒருங்குறியில் தட்டச்சு செய்யும் வசதி வேண்டும்
  • 2010 அரசு சார் திட்டங்கள் குறித்த தளங்கள் ஒருங்குறியில் மட்டுமே இருக்க வேண்டும் என்று அரசை சட்டம் இயற்ற கேட்டுக்கொள்ள வேண்டும்
  • விக்கிபிடியா போன்ற தன்னார்வலர் திட்டங்களை அரசு பள்ளிகளில் / தனியார் பள்ளிகளில் அறிமுகப்படுத்த வேண்டும். முடிந்தால் பாடத்திட்டத்தில் சேர்க்கலாம்
  • கல்லூரி மாணவர்கள் project செய்யும் போது அதில் 30 அல்லது 50 சதம் தமிழில் இருக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வர அரசை கேட்கலாம்
// 2. தகவல்-நுட்பப் புரட்சியின் முழுப் பயனையும் தமிழர் சமூகம்
அனுபவிக்கிறதா? உ.ம். ஊடாடுதல் (மின்னஞ்சல், குறுஞ்செய்தி, மின்னரட்டை போன்றவை தமிழ் மூலமாக); மின்வணிகம் (வங்கி, இணையக்கடை, கட்டணம் செலுத்தல் போன்றவை தமிழில்); அரசாளுமை (வரிவிதிப்பு, அரசாணை, அரசின் அங்கங்களிடம் தமிழில் சேவை பெறுதல்) இதழ்கள் (செய்தி,இலக்கியம் வாசித்தல், வலைப்பதிவு, குறும்பதிவு, போன்ற வெப் 2.0 ஊடகங்கள் தமிழில்).//

ஒவ்வொன்றாக பார்ப்போம்

  • மின்னஞ்சல் - ஓரளவிற்கு முன்னேறியுள்ளோம்
  • குறுஞ்செய்தி - இல்லவே இல்லை
  • மின்னரட்டை - டிவிட்டரில் நடப்பதை அரட்டை என்று எடுத்தால் அங்கு தமிழ் நன்றாகவே பாவிக்கப்படுகிறது
  • அதே போல் வலைத்தளங்களின் மறுமொழிகளில் (கும்மி / மொக்கை) அரட்டை என்று எடுத்தால் - அரட்டையில் தமிழ் வந்து விட்டது என்றே சொல்லலாம்
  • மின்வணிகம் (வங்கி, இணையக்கடை, கட்டணம் செலுத்தல் போன்றவை தமிழில்); - வரவில்லை. இதற்கு முதலில் TUNE பிரச்சனையை தீர்க்க வேண்டும்
  • அரசாளுமை (வரிவிதிப்பு, அரசாணை, அரசின் அங்கங்களிடம் தமிழில் சேவை பெறுதல்) - சில அரசாணைகள் தமிழில் வருகின்றன. ஆனால் ஒருங்குறியில் இல்லை
  • அரசின் அங்ககளில் தமிழில் சேவை பெறுதல் குறித்து - தமிழ் ஆர்வலர்கள் அரசை நிர்பந்திக்க வேண்டும்
  • இதழ்கள் (செய்தி,இலக்கியம் வாசித்தல், வலைப்பதிவு, குறும்பதிவு, போன்ற வெப் 2.0 ஊடகங்கள் தமிழில்). -- இதழ்களில் ஓரளவு முன்னேறி இருக்கிறோம் என்றே நினைக்கிறேன்
  • அரசின் தமிழ் தளங்கள் குறித்த சில விபரங்கள் (இதில் எத்தனை குறித்து உங்களுக்கு முன்னரே தெரியும் !!)
  • நில பதிவேடுகள் குறித்த தமிழ் நிலம் மென்பொருள் தமிழில் உள்ளது 200க்கு மேற்பட்ட தாலுக்காகளில் 3 கோடி நில உட்பிரிவு தொடர்பான தகவல்களும், 2 கோடி நில உரிமையாளர்கள் குறித்த தகவல்களும் தமிழில் உள்ளன
  • அரசின் பதிவுத்துறையின் STAR திட்டம் தமிழில் உள்ளது
  • 450 சார்பதிவாளர் அலுவலகங்களிலும் தமிழ் தான்
  • வில்லங்க சான்றிதழல்கள் தமிழில் வழங்கப்படுகின்றன
  • 1.8 கோடி குடும்ப அட்ட விபரங்கள் தமிழில்
  • 4 கோடி வாக்காளர் விபரங்கள் தமிழில்
  • தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் தமிழகத்தில் நடந்த 3800+ கிராமங்களிலும் தமிழில் நடைமுறைப்படுத்தப்பட்டது
  • நகர சிவில் நீதிமன்றங்களில் தமிழிலேயே கணினி பயன்படுத்தப்படுகிறது
  • http://www.tn.gov.in/tamiltngov/ தளம் தமிழில்
  • http://www.tamilvu.org தளத்தில் தமிழ்
  • அந்த தளத்தில் தமிழின் பல இலக்கியங்கள் உள்ளன http://www.tamilvu.org/library/libindex.htm தளத்தில் பார்க்கலாம் (பின் குறிப்பு : மதுரைத்திட்டம் குறித்து தெரியாதவர்களுக்கு தமிழ் இலக்கியங்களை http://www.infitt.org/pmadurai/ தளத்திலும் பார்க்கலாம்)
// 3. தன்னார்வலர்களின் பங்களிப்பும் விக்கிப்பீடியா போன்ற குழுக்களின் பங்களிப்பும் இணையத்தில், கணினியில், தமிழின் பயன்பாடு அதிகரிக்க எந்த அளவுக்கு உதவியுள்ளன? உங்கள் பார்வையில் முக்கியமானவை, மேலும் முன்னெடுத்துச் செல்லவேண்டியவை என எவற்றைக்குறிப்பிடுவீர்கள்?//

ஆங்கில விக்கியில் நடக்கும் அரசியல் உங்களுக்கு தெரிந்திருக்கும். இதை படியுங்கள் http://www.ularal.com/wak/ அதன் பிறகு இந்த சுட்டி படியுங்கள்
http://kuzhali.blogspot.com/2009/06/tami-wikipedia.html தமிழில் அந்த அளவு நிலைமை மோசமில்லை

தமிழ் விக்சனரியில் நாம் பிற இந்திய மாநிலத்தவர்கள் அனைவரும் பொறாமைப்படும் இடத்தில் முன்னேறி இருக்கிறோம். அதற்கு காரணமான சுந்தர், ரவி ஆகியோருக்கு வாழ்த்துக்கள் !!

மற்றப்படி பார்த்தால்

2005க்கு பிறகு தமிழ் இணையத்தில் வேகமாக பரவியதற்கு - அதுவும் ஒருங்குறி பரவியதற்கு இரண்டு காரணங்களை நான் கூறுவேன்

  • விக்கிபிடியா
  • தமிழ்வலைத்தளங்கள் மற்றும் அவற்றை ஒருங்கிணைத்த தமிழ்மணம் - இதில் உங்களின் பங்கும் இருக்கிறது
அதே வலைத்தளங்கள் போலல்லாம் தனித்தளங்கள் (sites) வளரவேண்டிய அவசியம் இருக்கிறது

// 4. நாளையே அரசின் தகவல்-நுட்பத்துறைக்கு உங்களைத் தலைமையேற்கச் சொன்னால் மேற்சொன்னவகையிலான தமிழ்ப் பயன்பாட்டு விரிவாக்கத்துக்கான செயல்களாக எவற்றை உடனடியாக மேற்கொள்வீர்கள்?//
  • முதலில் ஒருங்குறி குறித்து ஒரு முடிவிற்கு வர வேண்டும்
  • TUNE வேண்டுமா, இல்லையா என்று திட்ட வட்டமாக முடிவு செய்ய வேண்டும். அதன் பிறகு தான் கீழ்க்கண்டவைகளை செய்ய முடியும்
  • அதன் பிறகு தமிழகத்திற்கும் இருக்கும் உலாவியங்களில் கண்டிப்பாக ஒருங்குறியில் தமிழ் தட்டச்சு செய்யும் வசதி வேண்டும் என்று சட்டம் கொண்டுவருவேன்
  • அனைத்து அரசு அலுவலகங்களில் இருக்கும் கணினிகளிலும் ஒருங்குறியில் தட்டச்சு செய்யும் வசதி கொண்டுவருவேன்
  • அரசு தகவல்கள் அனைத்தும் ஒருங்குறியில் மட்டுமே இருக்க வேண்டும்
  • 2010 அரசு சார் திட்டங்கள் குறித்த தளங்கள் ஒருங்குறியில் மட்டுமே இருக்க வேண்டும் என்று அரசை சட்டம் இயற்றப்படும்
  • விக்கிபிடியா போன்ற தன்னார்வலர் திட்டங்களை அரசு பள்ளிகளில் / தனியார் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படும். பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்
  • கல்லூரி மாணவர்கள் project செய்யும் போது அதில் 50 சதம் தமிழில் இருக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வர வேண்டும்.
  • geocities இருக்கும் தமிழ் தளங்களை காக்க வேண்டும் (இது தற்சமயம் மிக மிக முக்கியம்)
// 5. தமிழ் வலைப்பதிவுகளை பற்றிய உங்கள் பொதுவான கருத்து என்ன?//
  • மிக ஆரோக்கியமான சூழல் !! (ஒரு சில [தனிமடலில் இருந்த வார்த்தை தணிக்கை செய்யப்படுகிறது] தவிர்த்து :) :) )
  • பிற பாரத மொழிகளை விட தமிழ் இணையத்தில் பரவலாக இருப்பதற்கு காரணம் தமிழ் வலைப்பதிவுகளே என்பது என கருத்து
//புதிதாக வலைப்பதிக்க வருவோருக்கான யோசனைகளாக எவற்றைக் கூறுவீர்கள்?//
  • உங்களுக்கு இயல்பாக வரும் நடையில் எழுதுங்கள்
  • உங்களுக்கு இயல்பாக வரும் விஷயங்களை எழுதுங்கள்
  • தெரியாத விஷயத்தை தெரிந்தது போல் எழுதாதீர்கள்
  • தெரியாத விஷயங்களை தெரிந்து கொண்டு எழுதுங்கள்
  • கும்மி / மொக்கை தவிருங்கள்
  • மாற்று கருத்து வந்தால் - உங்கள் நிலையை தெளிவாக எடுத்து கூறுங்கள்
  • content is king - தரம் இருந்தால் அதிகம் வாசகர்கள் வருவார்கள்
  • பத்திரிகைகளின் இணையதளங்களிலிருந்து வெட்டி ஒட்டாதீர்கள்
  • அடுத்தவர்கள் பதிவுகளை வெட்டி ஒட்டாதீர்கள் !!
// 6. தமிழ்மணம் வரும் ஆகஸ்ட் 23ஆம் நாள் தன் சேவையின் ஐந்து ஆண்டுகளை நிறைவுசெய்கிறது. இந்த 5 ஆண்டுகளில் தமிழ்மணத்தின் சேவையைப் பற்றிய உங்கள் கருத்துகள் என்ன?//
  • சேவையில் குறைபாடுகள் இல்லை. நடுநிலைமை நன்றாகவே உள்ளது
//வரும் ஆண்டுகளில் தமிழ்மணம் செய்யவேண்டியவை எவை?//
  • தமிழ்வெளி போல் கருவிப்பட்டை இல்லாமல் திரட்ட வேண்டும்
  • சிறிது வெளித்தன்மை இருக்க வேண்டும் - உதாரணம் http://blog.thamizmanam.com/archives/181 இதில் நான் கூறியது 
//இம்முடிவைச் செயல்படுத்துகையில் தவறுதலாக ஏதேனும் பதிவு நீக்கப்பட்டால், மறுபரிசீலனை செய்து ஏற்றுக் கொள்ளவோ தொடர்ந்தும் விலக்கவோ உரிமையைத் தமிழ்மணம் தக்க வைத்துக் கொள்கிறது. //
நல்லது
அதற்கு இந்த பதிவு இந்த காரணத்திற்காக நீக்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது என்று ஒரு (பட்டியல்) லிஸ்ட் (இந்த பதிவிலேயே இன்னொரு இடுகையாக) போட்டால் எளிது
அந்த பட்டியலை நீங்கள் மறுபரிசீலனை செய்யலாம். அதன் பிறகு பதிவை நீக்குவது அல்லது தொடர்வது என்று முடிவு எடுத்தபின்… நீக்க வேண்டிய பதிவுகளை நீக்குவது நடைமுறையில் சிக்கல் குறைவான வழி என்று தோன்றுகிறது
  • இது போல் எப்பொழுதும் எதையாவது செய்து விட்டு விளக்கம் அளிப்பதற்கு பதில் விளக்கம் அளித்து விட்டு செய்தால் நடைமுறை பிரச்சனைகளை / விமர்சணங்களை குறைக்கலாம் என்று நினைக்கிறேன்
  • கருவிப்பட்டையில் இருக்கும் தொழிற்நுட்ப கோளாறுகளை களைந்தால் நலம் - சில இடுகைகளை இணைக்க முடிவதில்லை
வேறு விஷயங்களை தோன்றுபோது இற்றைப்படுத்துகிறேன்

இந்த வார்த்தை (இற்றைப்படுத்து) தமிழில் புழங்குவது வலைத்தளங்களின் வெற்றி தானே !! :) :)

Saturday, August 22, 2009

நண்டும் சந்திரனும் சூரியனும் கடல் நீர் மட்டமும்

நான் சென்ற சூரியனும் சந்திரனும் குருவும் சனியும் விரோதி ஆண்டுபலனும் மழையும் நோயும் !! என்ற இடுகையில் பூமியின் துனைக்கோள் சந்திரனின் சுழற்சி, பூமியின் சுழற்சி, மற்றும் குரு, சனி ஆகிய கிரகங்களின் சுழற்சி ஆகியவை பூமியின் வாழ்க்கையை பாதிக்கவல்லது என்று எழுதியிருந்தேன்

சந்திரன் குறித்த பகுதியில் கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தேன்

சந்திர சுழற்சியின் விளைவுகள்
சந்திரன் பூமி சுற்றி வருவதால் ஏதாவது விளைவுகள் ஏற்படுகிறதா என்று கேட்டால், அதற்கான பதில் - ஆமாம்

இது குறித்து பக்கம் பக்கமாக ஆதாரங்கள் அடுக்கினாலும், இதை நம்பாதவர்கள் நம்பப்போவதில்லை. என்றாலும் சில கேள்விகள் மட்டுமே
  1. கடல்களில் அதிக நீர்மட்டம், மற்றும் குறைந்த நீர்மட்டம் (spring and neap tides) எதனால் ஏற்படுகிறது என்று தெரியுமா
  2. நண்டு என்று பிடிக்கப்பட்டாலும் அதில் சதை ஒரே அளவில் தான் இருக்குமா அல்லது அமாவாசை / பௌர்ணமி என்று சதை அளவு மாறுபடுமா
இது குறித்து பதிவர்கள் கையேடு அவர்கள் நண்டுகளுக்கும் கிரக அமைப்புகளுக்கும் நேரடித்தொடர்பு இருக்கிறது என்றால் நீரூபியுங்கள் என்று ஒரு அபார கேள்வியை கேட்டிருந்தார்.

நண்டுகளுக்கும் சந்திரனுக்கும் நேரடித்தொடர்பு இருக்கிறது என்றால் நீரூபியுங்கள் என்று கேட்டிருந்தால் நிருபிக்கலாம். ஆனால் நான் சொல்லாத நண்டு-குரு அல்லது நண்டு -சனி உறவை எப்படி நிருபிக்க முடியும்... என்ன கொடுமை சார் இது :) 


நண்டுகளுக்கும் சந்திரனுக்கும் நேரடித்தொடர்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு விடை தெரிய மூன்று வழிகள் உள்ளன
  1. வழக்கமாக, அடிக்கடி நண்டு சாப்பிடுபவர்களிடம், நண்டு பிடிப்பவர்களிடம், உணவகங்களில் நண்டு சமைப்பவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வது
  2. சுமார் 200 நண்டுகளை வைத்து ethics committee யிடம் அனுமதி வாங்கி ICMRல் பதிந்து triple blind randomised control study செய்து அளவு மாறுபடுகிறதா என்று கண்டறிந்து, அப்படி மாறுபடும் அளவின் arithmetic mean எவ்வளவு, geometric mean எவ்வளவு, range எவ்வளவு, standard deviation எவ்வளவு, variance எவ்வளவு, அது null hypothesis படி வருகிறதா, நண்டின் எடைமாற்றம் standard curveல் இருக்கிறதா, அல்லது அது positive skewed distributionஆ, அதில் regression to mean வருமா போன்ற பல விஷயங்களை ஆராய்வது
  3. ஏற்கனவே இது குறித்து ஆராய்ந்து இருப்பவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்ப்பது
கிட்டத்தட்ட அனைத்து விஞ்ஞான கோட்பாடுகளுக்கும் இது பொருந்தும். உதாரணமாக மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கும் கம்பியை தொட்டால் ஷாக்கடிக்குமா என்று தெரியவேண்டுமென்றால்
  1. மின் துறையில் பணிபுரிபவர்களிடம், அல்லது மின்சாதனங்களை பழுது பார்ப்பவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்
  2. நீங்களே தொட்டு பார்க்கலாம்
  3. தினத்தந்தி, தினகரனின் “மின்சாரம் பாய்ந்து ஒருவர் பரிதாப சாவு” என்று செய்தி இருக்கிறதா என்று பார்க்கலாம்
நண்டுகளுக்கும் சந்திரனுக்கும் நேரடித்தொடர்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு விடை தெரிய முதல் வழியை கடைபிடிக்க இயலவில்லை / முடியவில்லை / விருப்பமில்லை என்றால் சோதனை செய்து பார்க்கலாம். 
அதற்கு நேரமும் வசதியும் இல்லை என்றால் விஞ்ஞானிகள் ஏற்கனவே செய்த சோதனை முடிவுகளை பார்க்கலாம்


1985 முதல் 1987 வரை, ஒரிசா கடற்கரையில் கோவாவில் உள்ள National Institute of Oceanography நிறுவனத்தால் செய்யப்பட்ட ஆராய்ச்சி
  • ஆராய்ச்சியாளர்கள் : அனில் சட்டர்ஜி, விஜயகுமார், பருலேக்கர்
  • சஞ்சிகை : Asian Fisheries Science 5 (1992) : 123-128
ஜனவரி 1997 முதல் டிசம்பர் 2001 வரை வடகிழக்கு பிரேசிலில், பரைபா என்ற இடத்தில் செய்யப்பட்ட பரிசோதனை
  • ஆராய்ச்சியாளர்கள் : அல்பெர்டோ நிஷைதா, நிவால்டொ நார்டி, ரொமொலொ அல்வேஸ்
  • சஞ்சிகை : Journal of Ethnobiology and Ethnomedicine 2006, 2:1doi:10.1186/1746-4269-2-1 http://www.ethnobiomed.com/content/2/1/1
சோதனை முடிவுகளில் சில :

  • The knowledge on the phases of the moon is a critical factor for the survival of the traditional communities living on coastal zones exploiting the mangrove ecosystem resources, because the lunar cycle affects the biology of the animals and the gatherers collection activities (Alves RRN, Nishida AK: A ecdise do caranguejo-uçá, Ucides cordatus (Crustacea, Decapoda, Brachyura) na visão dos caranguejeiros. Interciencia 2002, 27(3):110-117. 
  • The influence of the phases of the moon and the tide variations on activities of crab gatherers were reported by Alves and Nishida [19] and by Nordi [10]. Nordi N: A captura do caranguejo-uçá (Ucides cordatus) durante o evento reprodutivo da espécie: o ponto de vista dos caranguejeiros. Volume 9. Revista Nordestina de Biologia; 1994:41-47. 
  • Alves and Nishida  pointed out that gatherers of the land crab 'caranguejo uçá' (Ucides cordatus) in Paraíba associate the phases of the moon and the tide variations with the distinct phases of the life cycle of that crustacean, including ecdysis, mating, and spawning. These authors confirmed the gatherers' observation that the ecdysis of U. cordatus is influenced by the tidal cycle
1959ல் அமெரிக்காவில் செய்யப்பட்ட சோதனை
  • ஆராய்ச்சியாளர் : மிரியம் பென்னெட்
  • சஞ்சிகை : Journal of Comparative Physiology A: Neuroethology, Sensory, Neural, and Behavioral Physiology http://www.springerlink.com/content/m1r56780tk56383w/
ஆராய்ச்சி முடிவுகளில் சில
  • These results show that although the phases of such cycles can be set in adaptive relationships with actual tidal events in the organism's natural environment, the cycles are correlated primarily with lunar events.
சந்திரனால் ஏற்படும் நீர்மட்டங்கள் கடல் வாழு உயிரினங்களை பாதிக்கிறது என்று தெளிவாக கூறும் மற்றொரு ஆராய்ச்சி முடிவுகள் http://cat.inist.fr/?aModele=afficheN&cpsidt=16767986

கையேடு சார்
ஜோ சார்

ஆதாரங்கள் போதுமா ??

அல்லது சுமார் 200 நண்டுகளை வைத்து ethics committee யிடம் அனுமதி வாங்கி ICMRல் பதிந்து triple blind randomised control study செய்து அளவு மாறுபடுகிறதா என்று கண்டறிந்து, அப்படி மாறுபடும் அளவின் arithmetic mean எவ்வளவு, geometric mean எவ்வளவு, range எவ்வளவு, standard deviation எவ்வளவு, variance எவ்வளவு, அது null hypothesis படி வருகிறதா, நண்டின் எடைமாற்றம் standard curveல் இருக்கிறதா, அல்லது அது positive skewed distributionஆ, அதில் regression to mean வருமா போன்ற பல விஷயங்களை ஆராய்ந்து சொன்னால் தான் ஏற்றுக்கொள்வீர்களா

மேலும் ஆதாரங்கள் வேண்டுமென்றால் சொல்லுங்கள். சுட்டி தருகிறேன். இதற்கு மேல் இங்கு எழுதினால், பிற வாசகர்கள் என்னை ரவுண்டு கட்டி விடும் அபாயம் இருக்கிறது

இதை படிப்பதற்கு பதில், நண்டு கடையில் விசாரிக்கும் எளிய முறையை தேர்ந்தெடுத்தவர்கள், இன்னேரம் ஏப்பம் விட்டுக்கொண்டிருப்பார்கள் !!

Thursday, August 20, 2009

சூரியனும் சந்திரனும் குருவும் சனியும் விரோதி ஆண்டுபலனும் மழையும் நோயும் !!

வானமண்டலத்தில் இருக்கும் விண்மீண்களை (நட்சத்திரங்களை) 12 தொகுப்புகளாக பிரித்திருக்கிறார்கள். வானமண்டலம் மொத்தம் 360 டிகிரி என்றால் ஒவ்வொரு தொகுப்பும் 30 டிகிரி. இப்படி பட்ட ஒவ்வொரு 30 டிகிரியையும் ஒரு வீடு என்று ஜோதிடத்தில் அழைக்கிறார்கள்

பூமியில் இருந்து பார்க்கும் போது ஒரு கிரகத்தின் பிண்ணனியில் எந்த நட்சத்திர கூட்டம் தெரிகிறதோ அதுவே அந்த கிரகம் இருக்கும் வீடு என்று அழைக்கப்படுகிறது

சந்திரன் : 
சந்திரன் பூமியை ஒரு முறை சுற்றி வர எடுத்துக்கொள்ளும் காலம் சுமார் ஒரு மாதம்.

இன்று பூமியில் இருந்த பார்த்தால் சந்திரனின் பின்னால் ஒரு நட்சத்திர கூட்டம் தெரியும். மூன்று நாட்கள் கழித்து பார்த்தால் அடுத்த நட்சத்திர கூட்டம், அதன் பிறகு மூன்று நாட்கள் கழித்தால் அதற்கு அடுத்த நட்சத்திர கூட்டம். சந்திரனுக்கு பின்னால் எந்த நட்சத்திர கூட்டம் தெரிகிறதோ சந்திரன் அந்த வீட்டில் இருப்பதாக கூறுவார்கள்

சூரியன் : 
பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுத்துக்கொள்ளும் காலம் 1 ஆண்டு. ஆக இன்று சூரியனுக்கு பின்னால் எந்த நட்சத்திர கூட்டம் தெரிகிறதோ அந்த வீட்டில் சூரியன் இருப்பதாக ஜோதிடர்கள் கூறுகிறார்கள். ஒரு மாதம் கழித்து சூரியன் அடுத்த வீட்டிற்கு போய் விட்டதாக கூறுவார்கள்

சூரியன் இடம் மாறுவதில்லை. ஆனால் பூமி இடம் மாறுகிறது. நாம் பூமியில் இருப்பதால் பூமி இடம் மாறும் போது சூரியனுக்கு பின்னால் தெரியும் நட்சத்திரங்கள் மாறுகிறது. அவ்வளவு தான்

உதாரணமாக டெண்டுல்கர் சேப்பாக்கத்தில் ஆடிக்கொண்டிருக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவர் பந்தை எதிர்கொள்ளும் நிலையில் இருக்கிறார். இப்பொழுது நடுவர் இடத்திலிருந்து பார்த்தால் அவர் வாலாஜா முனையில் இருக்கிறார். அதே நேரம் காப்பாளரின் இடத்திலிருந்து பார்த்தால் அவர் சேப்பாக்கம் முனையில் இருக்கிறார். சச்சின் என்னவோ அவரிடத்தில் இருந்தாலும், பார்ப்பவர்கள் எங்கிருந்து பார்க்கிறார்களோ அதை பொருத்து அவர் எங்கிருக்கிறார் என்பது மாறுகிறதல்லவா

அதே போல் சூரியன் ஒரே இடத்தில் இருந்தாலும், பூமி சூரியனை சுற்றி வருவதால், பூமி கடக நட்சத்திர கூட்டம் பக்கம் இருக்கும் போது சூரியன் மகர ராசியில் இருப்பதாக நமக்கு தெரியும். பூமி மகர நட்சத்திர கூட்டங்களின் பக்கம் திசையில் வரும் போது சூரியன் கடகராசியில் இருப்பதாக தோன்றும்

வியாழன் / குரு :
குரு என்றழைக்கப்படும் வியாழன் கிரகம் சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுத்துக்கொள்ளும் நேரம் 12 ஆண்டுகள். ஆக ஒவ்வொரு வீட்டில் குரு பகவான் இருப்பது ஏறத்தாழ ஒரு ஆண்டு

சனி :
அதே போல் சனி எனப்படும் சனிகிரகம் ஒரு முறை சூரியனை சுற்றி வர எடுத்துக்கொள்ளும் நேரம் 30 ஆண்டுகள். ஆக ஒவ்வொரு வீட்டிலும் சனி பகவான் இருப்பது ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகள்.

சந்திர சுழற்சியின் விளைவுகள்
சந்திரன் பூமி சுற்றி வருவதால் ஏதாவது விளைவுகள் ஏற்படுகிறதா என்று கேட்டால், அதற்கான பதில் - ஆமாம்

இது குறித்து பக்கம் பக்கமாக ஆதாரங்கள் அடுக்கினாலும், இதை நம்பாதவர்கள் நம்பப்போவதில்லை. என்றாலும் சில கேள்விகள் மட்டுமே
  1. கடல்களில் அதிக நீர்மட்டம், மற்றும் குறைந்த நீர்மட்டம் (spring and neap tides) எதனால் ஏற்படுகிறது என்று தெரியுமா
  2. நண்டு என்று பிடிக்கப்பட்டாலும் அதில் சதை ஒரே அளவில் தான் இருக்குமா அல்லது அமாவாசை / பௌர்ணமி என்று சதை அளவு மாறுபடுமா
சூரியன் : 
பூமி சூரியனை சுற்றி வருவதால் ஏற்படுவது பருவநிலைகள் என்று அனைவருக்குமே தெரிந்திருக்கும். மேமாதம் வெயிலடிப்பதும் டிசம்பர் மாதம் குளிரடிப்பதற்கும் இதுவே காரணம்.

குருவின் சுழற்சி
சூரிய மண்டலத்தின் மிக பெரிய கிரகங்களான குருவும், சனியும், சூரியனை சுற்றி வருவது பூமியில் பாதிப்புகளை ஏற்படுத்தகிறதா என்று சிறிது ஆராய்ந்து பார்த்தில் பல விஷயங்களை கண்டு பிடித்துள்ளார்கள்

மரங்களை வெட்டிய பின்னர் பார்த்திருக்கிறீர்களா. அதில் வளையம் வளையமாக இருக்கும் .இதை வருடாந்திர வளையங்கள் (annular rings) என்று அழைப்பார்கள். அடர்த்திகுறைவாக உள்ள பெரிய பகுதியானது நீர் அதிகம் உள்ள நேரங்களில் அந்த மரம் வளர்ந்திருப்பதையும், அடர்த்தி அதிகமாக உள்ள பகுதியானது நீர் குறைவாக உள்ள நேரத்தில் மரம் வளர்ந்திருப்பதையும் காட்டும். ஆக ஒரு வருடத்திற்கு ஒரு அடர்த்தி குறைவான ஒரு வளையமும், அடர்த்தி மிகுதியான ஒரு வளையமும் ஏற்படுகிறது. இந்த இரு வளையங்களையும் சேர்த்தே வருடாந்திர வளையங்கள் என்று அழைக்கிறார்கள்

இப்படி பட்ட வருடாந்திர வளையங்கள் எல்லா வருடமும் ஒரே போல் இருப்பதில்லை. ஒவ்வொரு வருடமும் மாறுபடுகின்றன. ஆனால் சில வருடங்களுக்கு ஒரு முறை மட்டும் அதில் ஒரு ஒழுங்கு தெரிகிறதாம்

எத்தனை வருடங்கள் தெரியுமா ??

எத்தனை வருடங்களுக்கு ஒரு முறை குறிஞ்சி மலர் ஒழுங்காக மலர்கிறதோ அத்தனை வருடங்கள்

சனியின் சுழற்சி
இது போல் சனி யின் சுழற்சி 30 வருடங்களுக்கு ஒருமுறை. இதுவும் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது

இப்பொழுது வேறு ஒரு சிறு கணக்கிற்கு வருவோம்

நீங்கள் உங்கள் வீட்டிலிருந்து அலுவலகம் செல்ல 12 வழிகள் இருக்கின்றன என்று வைத்துக்கொள்ளுங்கள். தினமும் ஒரு வழியில் செல்கிறீர்கள். ஆக ஒவ்வொரு 12 நாட்களுக்கு ஒரு முறை நீங்கள் அதே வழியில் செல்வீர்கள்.

அதே போல் நீங்கள் 12 வித வாகனங்களில் செல்லலாம் என்று வைத்துக்கொள்ளுங்கள்.ஒரு வாகனத்தில் 12 நாட்கள் செல்ல வேண்டும். அதற்கு அடுத்த 12 நாட்கள் அடுத்த வாகனம் என்று வைத்துக்கொள்ளுங்கள்

நீங்கள் ஒரு வாகனத்தில் ஒருவழியில் சென்றால் மீண்டும் அதே வாகனத்தில் அதே வழியில் செல்ல 144 நாட்கள் ஆகிவிடும் அல்லவா

ஒரு வேளை நீங்கள் ஒரு வாகனத்தில் 6 நாட்கள் தொடர்ந்து செல்ல வேண்டும் என்றால், நீங்கள் முதல் 6 நாட்கள் வாகனம் 1 - பாதை 1 முதல் 6 வரை, அடுத்த 6 நாட்கள் வாகனம் 2 - பாதை 6 முதல் 12 வரை - அடுத்த 6 நாட்கள் வாகனம் 3 பாதை 1 முதல் 6 வரை, என்று மாறி மாறி சென்று கொண்டிருந்தால், 72 நாட்கள் கழித்து நீங்கள் அதே வாகனம், அதே வழியில் செல்லலாம்

ஒரு வேளை நீங்கள் ஒரு வாகனத்தில் மூன்று நாட்கள் தான் செல்ல முடியும் என்றால் 36 நாட்கள் கழித்து அதே வழியில் அதே வாகனத்தில் செல்லலாம்

ஒரு வேளை நீங்கள் ஒரு வாகனத்தில் இரண்டரை நாட்கள் தான் செல்ல முடியும் என்றால் 60 ஆண்டுகள் நாட்கள் கழித்து தான் அதே வாகனம் அதே வழியில் செல்ல முடியும்

-oOo-

குரு ஒரு வீட்டில் இருக்கும் காலம் ஒரு ஆண்டு. குரு ஒரு வீட்டில் இருப்பதால் சில விளைவுகள் ஏற்படலாம்.
சனி ஒரு வீட்டில் இருக்கும் காலம் இரண்டரை ஆண்டுகள். சனி ஒரு வீட்டில் இருப்பதால் சில விளைவுகள் ஏற்படலாம்

ஒரு வருடம் சனியின் விளைவுகளும் குருவின் விளைவுகளும் சேர்ந்து ஏற்படுத்தும் விளைவுகள், மீண்டும் அதே போல் ஏற்படுவது 60 ஆண்டுகளுக்கு ஒரு முறை.

இன்று சனி ஒரு வீட்டிலும் குரு ஒரு வீட்டிலும் இருக்கிறார்களோ, அவர்களிருவது அந்தந்த வீடுகளில் இருப்பது அறுபது ஆண்டுகள் கழித்துதான் என்பதால் இவ்வாறு நிகழ்கிறது

-oOo-

இப்படியான அறுபது ஆண்டுகளுக்கு ஒரு முறை கால மாற்றங்கள் மற்றும் பருவ மாற்றங்கள் ஏற்படுவதை கணித்த முன்னோர்கள் 60 ஆண்டுகளை ஒரு தொகுப்பாக வைத்து அவற்றிற்கு பெயர் சூட்டி உள்ளார்கள்.அது மட்டுமல்லாது அந்த ஆண்டுகளில் என்ன நடந்தது என்பதை பாடல்களாகவும் குறித்து வைத்து சென்றுள்ளார்கள்

-oOo-

உதாரணமாக பார்த்திப ஆண்டிற்கான (2005 ஏப்ரல் 15 முதல் 2006 ஏப்ரல் 14) சித்தர் இடைக்காடர் இயற்றிய வெண்பாவில் “ராஜர் அநியாந் செய்வார் ரதமேறு மாரி இனிதாம் விளைவுமுளவாம்” என்று உள்ளது. !! 2005ல் மழை எப்படி இருந்தது என்று தெரியவில்லை என்றால் 2005 ஜூலையில் மும்பையில் இருந்தவரிடமோ 2005 நவம்பரின் சென்னையில் இருந்தவரிடமோ கேட்டு உறுதிப்படுத்திக்கொள்ளலாம். பார்த்திபன் என்பது அர்ஜுனனின் பெயர் என்று உங்களுக்கு தெரிந்திருக்கும். அர்ஜூனன் மழைக்கடவுள் இந்திரனின் மகன் என்றும் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் !!! சமீப காலங்களிலேயே 2005ல் தான் ஒரே நாளில் அதிகம் மழை பெய்தது என்று நினைக்கிறேன்

அதே போல் 2009 ஏப்ரல் 15 முதல் 2010 ஏப்ரல் 14 வரை நடைபெற்றுக்கொண்டிருப்பது விரோதி வருடம். . இந்த வருடத்திற்கும் பாடல் இருக்கிறது
நீடு விரோதி நிலத்தில் மழைமிகுதி!
மேடு காடெல்லாம் விளைவுண்டாம்! - நீடும்
அரசர் போராலே யழிவு முலகம்!
திரமிகு நோய் சேருமெனச் செப்பு!
சனி சிம்மத்திலிருந்து கன்னிராசிக்கு செல்லும், குரு மகரத்திலிருந்து கும்ப ராசிக்கு செல்லும் ஆண்டுகள் விரோதி ஆண்டுகள். அப்படிப்பட்ட “விரோதி ஆண்டில் மழை நன்றாக பெய்யும். இதனால், காடு கழனியெல்லாம் நல்ல அமோக விளைச்சல் கிடைக்கும். பல தேசங்களுக்கிடையில் மற்றும் அத்தேசங்களில் தலைவர்களுக்குள் கருத்து வேறுபாடு உண்டாகி, அதனால் நாடுகளிடையே போர் ஏற்படலாம்.போரினால் அழிவு எற்படும். ஒரு வகை நோய் வந்து சேரும்” என்று இடைகாடர் கூறியுள்ளார் !!

Tuesday, August 18, 2009

எழுத்தாளர் / பதிவர் சொக்கனின் சந்தேகத்திற்கு விடை !!

2008 மே 14 எழுதிய இடுகை, எழுத்தாளர் சொக்கன் அவரது பதிவில் கேட்ட ஒரு கேள்விக்கு பதிலாக பொருந்துவதால் சில மாற்றங்களுடன் மீள்பதிவு.


12ஆவது வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு அதில் முதல் மதிப்பெண் பெற்றவர்களின் பேட்டி பல நாளிதழ்களில் வெளிவந்துள்ளது. இளங்கலை மருத்துவம் சேர்வதற்கான விண்ணப்பங்கள் சுட சுட விற்றுக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் இது குறித்து கடந்த ஞாயிறு சில மருத்துவர்களோடு பேசிக்கொண்டிருந்தேன்

அதில் சிலர் தற்பொழுது MCh இறுதி ஆண்டு (2009 ஆகஸ்ட்) தேர்வு எழுதுகிறார்கள். வேறு சிலர் இவ்வருடம் (2009 ஆகஸ்ட்) DM இறுதி ஆண்டு தேர்வு எழுதுகிறார்கள். இனி தான் அவர்கள் தங்கள் தொழிலில் இறங்க வேண்டும்

சரி இதிலென்ன செய்தி என்கிறீர்களா.

அவர்கள் 1991 மற்றும் 1992ஆம் ஆண்டு மருத்துவக்கல்லூரியில் (எம்.பி.பி.எஸ் படிக்க) சேர்ந்தவர்கள். அதாவது அவர்கள் மருத்துவக்கல்லூரியில் சேரும் பொழுது, இன்று (2009ஆம் வருடம்) முதல் மதிப்பெண் எடுத்தவர்கள் பிறந்திருக்கவே மாட்டார்கள் !!!!

அதே போல் இன்று முதல் மதிப்பெண் எடுத்து “மருத்துவராவது என் லட்சியம்” என்று கூறும் மாணவன்/மாணவி தங்களின் படிப்பை முடித்து தனியாக தொழில் துவங்கும் பொழுது இவ்வருடம் பிறக்கும் குழந்தைகளில் சிலர் தினத்தந்தியிலோ, தினகரனிலோ “எங்கள் லட்சியம்...... “ என்று பேட்டி கொடுத்துக்கொண்டிருப்பார்கள்.

இளங்கலை படிப்பு
  • 2009 பிப்ரவரி - 12ஆம் வகுப்பு தேர்வு
  • 2009 ஜூலை - மருத்துவக்கல்லுரியில் சேர்வது
  • 2010 ஜூலை - முதல் வருட தேர்வு
  • 2012 பிப்ரவரி - இரண்டாவது கட்ட தேர்வு
  • 2014 பிப்ரவரி - இறுதி கட்ட தேர்வு
  • 2014 மார்ச் - உள்ளிருப்பு மருத்துவ பயிற்சி ஆரம்பம்
  • 2015 மார்ச் - எம்.பி.பி.எஸ் படிப்பு முடிவு (தற்பொழுது எம்.பி.பி.எஸ் படிப்பின் கால அளவு 5 ½ வருடங்கள் அல்ல. முன்னர் அது 5 ½ வருடங்களாக இருந்தது. – 1997ல் இருந்தே ஆறு வருடம் ஆகி விட்டது. 2003 பிப்ரவரியில் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதியவர்கள் இப்பொழுதுதான் 2009 மார்ச்சில் தங்களின் படிப்பை முடித்து இருக்கிறார்கள்)
முதுகலை படிப்பு
  • 2015 அல்லது 2016 - தமிழக தேர்வாணையம்
  • 2017 பிப்ரவரி அல்லது மார்ச் - ஆரம்ப சுகாதார நிலையங்களில் நியமனம்
  • 2017 முதல் 2020 வரை - மூன்று வருட கிராமப்புற சேவை
  • 2020 ஜனவரி / பிப்ரவரி - பட்ட மேற்படிப்பு நுழைவு தேர்வு
  • 2020 முதல் 2023 வரை - பட்ட மேற்படிப்பு (எம்.டி அல்லது எம்.எஸ்)
  • 2024 ஆகஸ்ட் - சிறப்பு படிப்பு நுழைவு தேர்வு
  • 2024 ஆகஸ்ட் முதல் 2027 ஆகஸ்ட் வரை - சிறப்பு படிப்பு (டி.எம் அல்லது எம்.சி.எச்)
2027 மே மாதத்தில் (2009 / 2010ல் பிறந்தவர்கள் எழுதிய) 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு !!!!

மேலே கூறியுள்ளது மத்திய தர குடும்பத்திலிருந்து மருத்துவம் படிக்கும் ஒருவரின் கால விபரம். அரசு பணியில் சேராமல் மேற்படிப்பு உடன் படித்தால் இதில் 3 முதல் 4 வருடங்கள் வரை குறையலாம். அவ்வளவு தான்

மருத்துவப்படிப்பு மேலும் ஒரு வருடம் நீடிக்கப்பட்டால் இவர்கள் படித்து முடிக்கும்முன்னே இவ்வருடம் பிறந்த குழந்தைகள் பேட்டி கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள்.

-oOo-

எழுத்தாளர் சொக்கனின் சந்தேகம் (http://nchokkan.wordpress.com/2009/08/17/ydr/)

வருங்கால எஞ்சினியர்களும் டாக்டர்களும் ஒன்றாகதான் ப்ளஸ் டூ படிக்க ஆரம்பிக்கிறார்கள், அதன்பிறகு, எஞ்சினியர் என்றால் இளமை, டாக்டர் என்றால் முதிர்ச்சி என்கிற அசட்டுத்தனமான Prejudice பிம்பம் எப்படி வருகிறது?
அது Prejudice அல்ல !! டாக்டர் என்றாலே முதிர்ச்சி என்ற பிம்பம் ஏற்பட்ட காரணத்தை கண்டு பிடிப்பது மிக எளிது தான். மருத்துவர்கள் தங்களது தொழிலை ஆரம்பிப்பது 35 வயதிற்கு பிறகு தான்
1994ல் 12ஆம் வகுப்பு படித்து மருத்துவ கல்லூரியில் சேர்ந்த ஒருவர் அவரது படிப்பை முடித்து தொழிலை ஆரம்பிக்க இன்னனும் மூன்று ஆண்டுகள் உள்ளன

அன்று நடந்த விவாதத்தில் பேசப்பட்ட சில கருத்துக்கள்
  • 1991ல் ஒருவர் மருத்துவக்கல்லூரியில் சேராமல் இளங்கலை படித்து தேர்வெழுதி இ.ஆ.பவில் சேர்ந்திருந்தால் அவர் பல வருடங்களுக்கு முன்னரே மாவட்ட ஆட்சித்தலைவராகி இருப்பார். இன்று எதாவது ஒரு துறையின் செயலராகி இருப்பார் - அரசு செயலரின் ஊதியம் / பிற வசதிகள் எவ்வளவு என்று தெரியும் என்று நினைக்கிறேன்
  • 1991ல் ஒருவர் மருத்துவக்கல்லூரியில் சேராமல் பொறியியல் கல்லூரியில் சேர்ந்திருந்தால் இன்று அவர் எத்தனை முறை பதவி உயர்வு பெற்றிருப்பார் ?? இந்த கேள்விக்கு இங்கிருக்கும் பதிவர்கள் பலர் விடை கூறலாம் 
  • 1991ல் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த ஒருவர் இன்று அரசு பணியில் பெரும் ஊதியம் (ஆறாவது ஊதிய குழுவின் பரிந்துரையின் படி)  அனைத்து படிகளையும் சேர்த்து பிடித்தம் இல்லாமல் மாதம் ரூபாய் 33000 முதல் 35000 வரை. கையில் கிடைப்பது மாதம் 28000-30000 வரை. இது 12 வருட படிப்பு மற்றும் மூன்று வருட அனுபவத்திற்கு கிடைக்கும் ஊதியம் :( :( 
-oOo-

Thursday, August 13, 2009

பன்றிக்காய்ச்சல் : இன்ப்ளுயென்சாவும் சனியும் குருவும் !!

இன்ப்ளூயென்சா இது வரை உலகம் முழுவது பரவிய ஆண்டுகளான 1890, 1919, 1948, 1977, 2008 ஆகிய ஆண்டுகளை ஜோதிட ரீதியாக எடுத்துக்கொண்டால் அப்படி பரவிய நேரங்களில் சனிபகவான் சிம்மராசியிலும், குருபகவான் கடகத்தில் உச்சமாகவோ அல்லது மகரத்தில் நீச்சமாகவோ இருப்பதை அறியலாம்.

-- பன்றிக்காய்ச்சல் குறித்த இடுகைகள் தொடரும்

Wednesday, August 05, 2009

தொடராக தொடர தொடர் பதிவு - ஜாக்கி சேகருக்கு நன்றி

அழைத்த ஜாக்கிசேகருக்கு நன்றி

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
  • அப்பா அம்மா வைத்த பெயர் தான்.
  • நன்றாக பிடிப்பதால் தான் முழுப்பெயரையும் அடிக்கடி பயன்படுத்துகிறேன் !!
2.கடைசியாக அழுதது எப்பொழுது?
  • சிறைச்சாலை படம் பார்த்த போது
3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
  • பிடிக்கும். நன்றாகவே பிடிக்கும் !!
4).பிடித்த மதிய உணவு என்ன?
இது தான் பிடித்தது என்று ஒரு உணவு மட்டும் கிடையாது.
  1. சாம்பாரும் பொரித்த மீனும்
  2. ரசமும் மாசி கட்லட்டும்
  3. சிக்கன் பிரியாணி
  4. மோர் குழம்பும் முட்டை பொரியலும்
  5. தயிர்சாதமும் எலுமிச்சை ஊறுகாயும்
மற்றும் கீரை, கருவாடு, முட்டை (பாதிஅவித்தது அல்லது ஆப் பாயில்) என்று பல உணவுகள் இருப்பதால் ஒன்றை மட்டும் குறிப்பிட இயலவில்லை

அது சரி, காலை உணவு, இரவு உணவு பற்றி ஏன் கேள்வி இல்லை

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
  • இல்லை. அனைவருடனும் உடனடியாக நண்பராக முடியாது
6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
  • அருவி. குற்றாலம், பாபநாசம், மணிமுத்தாறு
  • சமீபத்தில் குளித்த அருவி சென்னை-பெரியபாளையம்-ஊத்துக்கோட்டை அருகில் உள்ள கோனே நீர்வீழ்ச்சி
7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
  • பொதுவாக பார்வை - என்னை நேரடியாக நோக்குகிறாரா அல்லது கண்களை சந்திக்க தயங்குகிறாரா
  • நோயாளி என்றால் - நடை. எலும்பு கோளாறு, நரம்பு கோளாறு என்றால் நடையை வைத்தே பல நோய்களை எளிதாக கண்டுபிடிக்க முடியும்
  • மயக்க நிலையில் இருக்கும் நோயாளி என்றால் - நாடித்துடிப்பு (இந்த கேள்வியை இந்த தொடர்பதிவில் எழுதியவர் இந்த பதிலை பார்த்தால் ஙே என்று முழிப்பார் என்று நினைக்கிறேன்)
8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
  • பிடிச்ச விஷயம்: விடாமுயற்சி. - உதாரணம் - எவ்வளவு நாள் ஆனாலும் விடாமல் தொடர் பதிவு எழுதுவது
  • பிடிக்காத விஷயம் : சோம்பேறித்தனம். - உதாரணம் - இவ்வளவு நாள் கழித்து எழுதுவது
9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
  • பிடிச்ச விஷயம் : அன்பு
  • பிடிக்காத விஷயம் : சோம்பல்
10. யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?..
  • தற்சமயம் குடும்பத்தை விட்டு வெளியூரில் இருப்பதால் பதில் obvious
11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
  • வெள்ளை
12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
  • இருவர் படத்தில் இருந்து பூங்கொடியின் புன்னகை (அந்த பௌர்ணமி என்பது வானத்தில் புன்னகை. உன் வருகையில் பூத்தது என் வாழ்க்கையின் புன்னகை - வாவ் வைரமுத்து !!)
13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
  • பச்சை
14.பிடித்த மணம்?
  • அதிகாலை தோட்டத்தில் வீசும் மணம் (இதற்கு தமிழ்மணம் என்று யாராவது பதில் கூறியிருக்கிறார்களா - அல்லது இக்கேள்வி அப்படி கூறவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் எழுதப்பட்டதா)
15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
  1. வேங்கட சுபரமணியன் - http://thogamalaiphc.blogspot.com/
  2. ரவிசங்கர் - http://blog.ravidreams.net/
  3. வக்கீல் ராஜதுரை - http://marchoflaw.blogspot.com/ 
  4. மணிகண்டன் - http://thodar.blogspot.com/
காரணம் : இவங்களைப் பத்தி இன்னும் தெரிஞ்சுக்கத்தான்.

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
17. பிடித்த விளையாட்டு?
  • கிரிக்கெட் - பார்க்க
  • டெபிள் டென்னிஸ், செஸ் - விளையாட
18.கண்ணாடி அணிபவரா?
  • ஆம்
19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
  • நகைச்சுவை 
  • வரலாற்று படங்கள்
  • மண்ணின் கதையை பதியும் படங்கள் - உதாரணம் - வென்னிலா கபடிக்குழு
20.கடைசியாகப் பார்த்த படம்?
  • திரையரங்கில் - ஏஞ்சல்ஸ் அண்ட் டெமண்ஸ்
  • திரையில் - Rabbit Proof Fence உபயம் சிவராமன் சார்
  • மடிக்கணினியில் - சிறைச்சாலை
21.பிடித்த பருவ காலம் எது?
  • இளவெனில்
22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:
  • பெய்லி அண்ட் லவ்
  • தாஸ்
  • ஷெட்டி ரங்காச்சாரி
  • ப்ளம் அண்ட் பாஸ்னர்
  • பார்க்
  • மதி கார்டுண்ஸ்
  • ஹட்சின்சன்
23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
  • 2001ல் இருந்து இன்று வரை அதே படம் தான்
  • 2008ல் வாங்கிய கணினியில் வாங்கியதில் இருந்து அதே படம் - என் பையனின் படம்
24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
  • பிடித்த சப்தம் : நீரோடையின் சலசலப்பு
  • பிடிக்காத சப்தம் : கதவு தரையில் உரசும் போது எழும் அல்ட்ராசானிக் (செவியுணரா) க்க்ரீரீரீச்ச்ச்ச்ச்ச்
25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
  • டெல்லி
26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
  • இருக்கிறது என்று நினைக்கிறேன் !!
  • ஏற்றுக்கொள்ளமுடியாத விஷயத்திற்கு எதிராக விடாமல் போராடுவது
27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
  • பொய்யும் பித்தலாட்டமும்
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
  • கோபம்.
29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
  • குற்றாலம்
  • மகாபலிபுரம்
  • தஞ்சாவூர்
30.எப்படி இருக்கணும்னு ஆசை?
  • இப்படியே
31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?
  • பதிவு எழுதுவது
32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?

  • கனமான சுகம் ; சுகமான கனம்
இத்தளத்தில் தேட :நீங்கள் வாசிக்க விரும்பும் தகவல்களை தேடி பெறலாம். கீழ்க்கண்ட பெட்டியில் உள்ளிடவும்

தொடர்புடைய தளங்களின் தேட

Loading...