இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசிக்க / இந்த பக்கம் கணினியில் திறக்க தாமதமானால்: இத்தளத்தை செல்லிடப்பேசியில் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த சுட்டியை பயன்படுத்தலாம்

Monday, October 19, 2009

இந்த மூன்று அதிகாரிகளுடன் ஒப்பிட்டால் ஹிட்லர் நல்லவரே !!

மும்பையிலிருந்து வெளிவரும் மிட்-டே இதழில் ஒரு செய்தி
ஒரு தனியார் நிறுவனத்தில் முக்கிய பொறுப்பிலிருக்கும் மூவர், அவர்களின் அதிகாரி அளித்த ஒரு விருந்தில் கலந்து கொள்ள சீருந்தில் சென்றுள்ளார்கள். சீருந்தை ஓட்டுனர் கோவர்த்தனன் வைத்யா ஓட்டி சென்றுள்ளார்

அவருக்கு சிறிது நெஞ்சு வலி இருந்துள்ளது. கூப்பரேஜ் அருகில் வரும் போது வலியானது அதிகரித்து நெஞ்சில் சம்மட்டியால் அடிப்பது போல் இருக்கவே, அவர் வண்டியை நிறுத்தியுள்ளார். நிறுத்திய சில நொடிகளில் அவர் வண்டியிலியே சாய்ந்து விழுந்துள்ளார். அவரது கதவை திறந்து அவரை வெளியே தள்ளி, அவரை நடைமேடையில் அமர வைத்து விட்டு, அந்த மூவரும் சீருந்தை கிளப்பி சென்றுள்ளனர்

அவரது நல்ல நேரம், விஜய சேகர் என்ற தொலைகாட்சி நிறுவனத்தில் பணிபுரிபவர் அந்த பக்கம் வந்துள்ளார். அதை விட நல்ல நேரம் அவரிடம் ஆஸ்ப்ரின் மருந்து இருந்துள்ளது. அதை அளிக்க வேண்டும் என்று அவரது மனைவிக்கு தெரிந்துள்ளது

விஜய சேகரும், அவரது மனைவியும், ஆஸ்பிரின் மருந்தை அளித்து விட்டு உடனடியாக வைத்யாவை மருத்துவமனைக்கு விஜயின் சீருந்தில் அழைத்து சென்றுள்ளனர்

புனித ஜார்ஜ் மருத்துவமனயில் வைத்யாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், மேலும் காலதாமதம் ஆகியிருந்தால் அவரை காப்பாற்றியிருக்க முடிந்திருக்காது என்று கூறியுள்ளனர்

சேகரின் மனைவி அந்த மூவரையும் தொலைபேசியில் அழைத்து கேட்ட போது “அவருக்கு வெளிக்காற்று கிடைத்தால் நன்றாக ஆகிவிடுவார்” என்று விட்டு விட்டு சென்றதாக கூறியுள்ளனர்.
மேலும் வாசித்து எரிச்சலடைய முழு விபரமும் உள்ள சுட்டி இங்குள்ளது

இவ்வளவையும் கூறும் மிட்-டே இதழ், அந்த மூவரின் பெயரையோ அவர்களின் நிறுவனத்தின் பெயரையோ கூறாதது ஏன் என்று உங்களுக்கு தெரியும் தானே

Saturday, October 17, 2009

மருத்துவத்தில் ரகசியங்கள் மற்றும் ரகசியங்களுக்கு விலக்குகள்

பிணியாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் போதோ, அல்லது பிற சமயங்களிலோ எனக்கு தெரியவரும் விபரங்களில், வெளியிடப்படக்க்கூடாதவைகளை நான் வெளியிடமாட்டேன்
- ஹிப்போகிரேட்டஸ் உறுதிமொழி(யின் ஒரு ப்குதி)

ஒரு நோயாளி பற்றியோ அவரது நோயை பற்றியோ விபரங்களை மருத்துவர் வெளியிடக்கூடாது என்பது மிக முக்கிய விதிமுறையாகும். இது குறித்து சில விஷயங்கள்
  • நோயாளியின் அனுமதியின்றி மருத்துவர் நோயாளி குறித்த விபரங்களை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தக்கூடாது
  • நோயாளி 18 வயதிற்கு மேற்பட்டவர் என்றால் அவரது பெற்றோரிடம் தெரிவிக்கக்கூட நோயாளியின் அனுமதி வேண்டும்
  • கணவன் மனைவி என்றால் கூட ஒருவர் பற்றிய விபரங்களை அடுத்தவரிடம் அனுமதியில்லாமல் தெரிவிக்க கூடாது
  • ஒரு பணியாளருக்கு சிகிச்சை அளிக்க அவரது முதலாளி பணம் செலுத்தினால் கூட அந்த பணியாளரின் அனுமதி இன்றி அந்த முதலாளிக்கு நோயின் விபரங்களை தெரிவிக்க கூடாது
  • அரசு மருத்துவமனைகளுக்கும் இந்த விதி பொருந்தும்
  • விசாரணை கைதிகளின் நோய் குறித்த விபரங்களை அவர்களது அனுமதியில்லாமல் காவல்துறையினரிடம் தெரிவிக்க முடியாது. ஆனால் தண்டனை அளிக்கப்பட்டு விட்டால் அந்த நோயாளியின் உடல் நிலை குறித்து அதிகாரிகளிடம் தெரிவிக்க நோயாளியின் அனுமதி தேவையில்லை
  • மருத்துவ கட்டுரைகள் எழுதப்படும் போது நோயாளியின் பெயர் மாற்றப்படவேண்டும் / மறைக்கப்படவேண்டும்.
இது போல் விதிகள் இருக்கும் நேரத்தில் சிறப்புரிமை கருத்துப்பரிமாற்றம் (Privileged Communication) அதாவது நோயாளியின் அனுமதியின்றியே மருத்துவர் அந்த நோய் குறித்த விபரங்களை வெளியிடக்கூடிய சூழல்கள் சிலவும் உள்ளன
  • தொற்றுநோய்கள் : உதாரணமாக ஒரு உணவக சமையல்காரர் / உணவு பரிமாறுபவர் டைபாய்டினால் பாதிக்கப்பட்டுள்ளார். (அவர் சமையல் செய்வதின் மூலம் அல்லது பரிமாறுவதன் மூலம் பல நூறு பேர்களுக்கு நோய் பரவ வாய்ப்புள்ளதால்) மருத்துவர் அவரை ஒரு வாரம் விடுப்பு எடுக்க கூறுகிறார். ஆனால் சமையல்காரர் தனது பணியை தொடர்ந்து செய்தால் அந்த நிலையில் பொது நலன் கருதி மருத்துவர் தகவலை வெளியிடலாம்
  • அறிவிக்கப்பட்டுள்ள தொற்று நோய்கள் : மருத்துவரிடம் சிகிச்சை பெறும் ஒருவர் அறிவிக்கப்பட்டுள்ள தோற்று நோய்களில் ஏதாவது ஒன்றினால் பாதிக்கப்பட்டிருந்தால், அந்த தகவலை மருத்துவர் அதிகாரிகளிடம் தெரிவிக்க நோயாளியின் அனுமதி தேவையில்லை (உதாரணம் ஒருவருக்கு பரிசோதனையின் பன்றிக்காய்ச்சல் இருப்பது தெரியவந்தால், அந்த விபரங்களை அரசிடம் தெரிவிக்க வேண்டும்)
  • சட்டத்திற்கு புறம்பான சம்பவங்கள் என்ற சந்தேகம் இருந்தால் :  உதாரணம் ஒருவர் வயிற்றில் துப்பாக்கி குண்டுடன் / கத்திக்குத்துடன் வந்தால் காவல்துறையினரிடம் தெரிவிக்க நோயாளியின் அனுமதி தேவையில்லை
  • பணியில் குறைபாடுகளை ஏற்படுத்தக்கூடிய நோய்கள் : உதாரணமாக ஒருவருக்கு நிறக்குருடு (நிறங்களை பிரித்து பார்ப்பதில் பிரச்சனை) என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்படிப்பட்டவர் நிறங்களை அடையாளம் காண வேண்டிய ஒரு தொழிலில் (உதாரணம் ஓட்டுனர்) இருந்தால், அதனால் பலரும் பாதிக்கப்படலாம் என்ற பட்சத்தில் மருத்துவர் அந்த தகவலை அந்த நபர் பணிபுரியும் இடத்திற்கு வெளியிடலாம்.
  • பிணியாளரின் நலன் கருதி : உதாரணமாக தற்கொலை எண்ணம் கொண்டவர் என்றால் அந்த நோயை பற்றி மட்டும் பெற்றொரிடம் தெரியப்படுத்த அனுமதி தேவையில்லை. ஆனால் தற்கொலை எண்ணம் கொண்டவரின் புகை பிடிக்கும் பழக்கத்தை அவரது பெற்றொரிடம் தெரியப்படுத்துவது தவறு !
  • நீதிமன்றங்களில் விசாரணைகளின் போது அல்லது பிற வழக்கு விசாரணைகளின் போது

Thursday, October 15, 2009

அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களின் வேலை நேரம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது

14.10.2009 வெளியான அரசு ஆணை எண் 339 (சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை)யின் படி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களின் வேலை நேரம் திருத்து அமைக்கப்பட்டுள்ளது

அப்படியென்றால் தற்போதைய வேலை நேரம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா. என்னவாக இருக்கும் என்று எண்ணுகிறீர்கள்...தொடர்ந்து படிக்கும் முன்னர் என்னாக இருக்கும், ஒரு அரசு மருத்துவம் வாரம் எவ்வளவு நேரம் வேலை செய்ய வேண்டியுள்ளது என்று ஒரு நிமிடம் நீங்களே ஊகித்து / யோசித்து பாருங்கள்... இனி தொடர்ந்து படிக்கலாம்

ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரு மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர்

இவர்கள் இருவரும் காலை 8 முதல் மாலை 5 வரை பணியில் இருக்க வேண்டும்.

அதன் பிறகு ஒருவர் மாலை 5 மணி முதல் அடுத்த நாள் காலை 8 வரை பணியில் இருந்து விட்டு தொடர்ந்து மாலை 8 மணி வரை களப்பணி செய்ய வேண்டும்

அதாவது

மருத்துவர் 1, மருத்துவர் 2 என்று எடுத்துக்கொண்டால்

மருத்துவர் 1 பணி நேரம் - வாரத்திற்கு 99 மணி நேரம்
  • திங்கள் காலை 8 முதல் செவ்வாய் மாலை 5 வரை - தொடர்ந்து 33 மணி நேரம்
  • புதன் காலை 8 முதல் வியாழன் மாலை 5 வரை - தொடர்ந்து 33 மணி நேரம்
  • வெள்ளி காலை 8 முதல் சனி மாலை 5 வரை - தொடர்ந்து 33 மணி நேரம்
மருத்துவர் 1 பணியில் இல்லாத நேரம் - வாரத்திற்கு - 69 மணி நேரம்
  • செவ்வாய் மாலை 5 முதல் புதன் காலை 8 வரை - 15 மணி நேரம்
  • வியாழன் மாலை 5 முதல் வெள்ளி காலை 8 வரை - 15 மணி நேரம்
  • சனி மாலை 5 முதல் திங்கள் காலை 8 வரை - 39 மணி நேரம்
மருத்துவர் 2 பணி நேரம் - வாரத்திற்கு 123 மணி நேரம்
  • செவ்வாய் காலை 8 முதல் புதன் மாலை 5 வரை - தொடர்ந்து 33 மணி நேரம்
  • வியாழன் காலை 8 முதல் வெள்ளி மாலை 5 வரை - தொடர்ந்து 33 மணி நேரம்
  • சனி காலை 8 முதல் திங்கள் மாலை 5 வரை - தொடர்ந்து 57 மணி நேரம்
மருத்துவர் 2 பணியில் இல்லாத நேரம் - வாரத்திற்கு - 45 மணி நேரம்
  • திங்கள் மாலை 5 முதல் செவ்வாய் காலை 8 வரை - 15 மணி நேரம்
  • புதன் மாலை 5 முதல் வியாழன் காலை 8 வரை - 15 மணி நேரம்
  • வெள்ளி மாலை 5 முதல் சனி காலை 8 வரை - 15 மணி நேரம்

பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டால்
மாநிலம்
வேலை நேரம்
கேரளா
9 am முதல் 1 pm / 2 முதல் 3 pm. அழைப்பு பணி கிடையாது
கர்நாடகம்
9 am முதல் 1 pm / 2 முதல் 4.30 pm. அழைப்பு பணி கிடையாது
மத்திய அரசு நிறுவனங்கள்
பிற மத்திய அரசு அலுவலகங்களை போலவே. அழைப்பு பணி கிடையாது
தமிழகம்
வாரத்திற்கு 123 மணி நேரம்

அதே நேரம் பிற மாநிலங்களின் ஊதியம்
மாநிலம்
பணியில் சேரும் போது
ஊதிய விகிதம் மற்றும் ஊதிய உயர்வு
1
2
3
ஆந்திர பிரதேசம்

உதவி மருத்துவர் 11250
உதவி குடியுரிமை மருத்துவர்


14300


8 வருடம் கழித்து
குடியுரிமை மருத்துவர்


17035


16 வருடத்தில்
இணை இயக்குனர்


18355


காலியிடம் பொருத்து
கர்நாடகம்
மருத்துவ அலுவலர்
14050
மூத்த மருத்துவர் அலுவலர் 
15200


6 வருடத்தில்
உதவி முதன்மை மருத்துவ அலுவலர் 


18150
13 வருடத்தில்
இணை இயக்குனர்


23200


கேரளா
உதவி மருத்துவர்
11910-19350
குடியுரிமை மருத்துவர் 16650- 23200


8 வருடத்தில்
துனை இயக்குனர்


23200 – 31150


16 வருடத்தில்
கூடுதல் இயக்குனர்


25400 – 33100


காலியிடம் பொருத்து

தமிழகம்

உதவி மருத்துவர்
8000
மூத்த உதவி மருத்துவர்
9100 
காலியிடம் பொருத்து - சுமார் 17  வருடம் கழித்து
குடியுரிமை மருத்துவர்
10000 


காலியிடம் பொருத்து - சுமார் 20 வருடம் கழித்து
மூத்த குடியுரிமை மருத்துவர்


12000 


காலியிடம் பொருத்து - சுமார் 22 வருடம் கழித்து

இந்த வேலை நேரம் தற்சமயம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது







இந்த அரசாணையின் படி வேலை நேரம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது

மூன்று மட்டும் அதற்கும் குறைவான மருத்துவர்கள் பணிபுரியும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலரின் வேலை நேரம்
  • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை
  • மாலை 4 மணி முதல் காலை 9 மணி வரை - தொற்றுநோய், உணவுநஞ்சேறல், தடுப்பூசி பாதிப்புகள், பேரிடர் போன்ற நிகழ்வுகளுக்கு மட்டும் அழைப்பு சுழற்சி பணி
இது தவிர சில சுகாதார நிலையங்கல் மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அங்கு பணி நேரம் முறைப்பணியின் அடிப்படையில் இருக்கும்

  • காலை 8 மணி முதல் மாலை 2 மணி வரை - நிலைய பொறுப்பு மருத்துவ அலுவலர் + 1 / 2 மருத்துவர்கள்
  • மாலை 2 மணி முதல் இரவு 8 மணி வரை - ஒரு மருத்துவர்
  • இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை - ஒரு மருத்துவர்

மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையங்களில் மட்டும் 24 மணிநேரமும் ஒரு மருத்துவர் கட்டாயம் பணியில் இருப்பார்

Friday, October 09, 2009

விமர்சனங்களை விமர்சிப்பவர்களை விமர்சித்தொரு விமர்சனம் !!

உரையாடல் போட்டிக்கு அனுப்பப்படாத கற்பனை உரையாடல்

அண்ணே, நம்ம ஊருல முருகன் ஸ்வீட் ஸ்டாலுன்னு திறந்திருக்காங்களாமே, போய் பாத்தீங்களா

ஆமாம் தம்பி, புதுசா வந்திருக்கு, கலர் கலரா இருக்கு, இனிப்பு நல்லாயிருக்கு,

அப்படியா

ஆமாம், சுத்தமான நெய்யிலதான் செய்றாங்களாம்

அட

டேஸ்ட் எல்லாம் சூப்பர்

அப்படியா

விலை கூட அதிகமில்லையாம், ஆனா....

ஆனா என்னன்னே

ஆனா, இனிப்புக்குள்ள விஷம் இருக்குன்னு சொல்றாங்கப்பா. அதான் யோசனையா இருக்கு

அடப்போங்கன்ன, இனிப்புக்குள்ள விஷம் இருந்தா என்ன கேடு

என்ன தம்பி இப்படி சொல்ற

நான் மட்டுமான்ன சொல்றேன், நம்ம டேபிள் சங்கர் இருக்காருல்ல

யாரு, புதுசா ஸ்வீட் கடை ஆரம்பிக்க போறாரே அவரா

ஆமாம் அவருதான், அவரு கூட என்ன சொல்றார் பாருங்க
ஒரு ஸ்வீட்டை பற்றி அந்த கடை முதலாளியோ, சமையல்காரரோ, விற்பவரோ உட்கார்ந்து யோசிக்காத பிரச்சனைக்ளை, பாயிண்டுகளை அந்த ஸ்வீட்டில் அவர் சயனைட்டை நுழைக்கிறார், ஆசிட்டை நுழைக்கிறார் என்று எதையாவது அதற்குள் நுழைத்து ஆக வேண்டிய கட்டாயத்தில், உட்கார்ந்து யோசித்து பதிவெழுதுவது, அது அந்த இசம், இந்த இசம் என்று எழுதுவது.. ஏன் என்று எனக்கு புரியவில்லை. நான் ஒரு பாமரன்.. என்னை போன்று கடையில் ஸ்வீட் வாங்கும் பாமரன்களுக்கு, ஸ்வீட் கலரா இருக்கா இலலையா? என்பதே முக்கியமாய் இருக்கும். அப்படியிருக்க, தேவையில்லாமல், உள்ளிருக்கும் சயனைட், ஆர்சனிக் பற்றியெல்லாம் எழுதி ஏன் தனிமனித தாக்குதல் நடத்தி, ஒரு புதிய கலவரத்தை உண்டாக்குகிறார்கள். என்றே புரியவில்லை. 
அடப்பாவி, அப்படியா சொல்றார்,

அது மட்டுமில்லன்ன, நம்ம படகுக்காரர் கூட
உங்களுக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது. ஒரு ஸ்வீட் விற்கிறார்கள். இரண்டு வாங்கி சாப்பிடுகிறீர்கள்.  அதை ரசிக்கிறீர்கள். பிடிக்கிறது, பிடிக்கவில்லை என்ற இரண்டு கோணங்களுக்கு மேல், மூன்றாவது கோணமாய் அதில் என்ன இருக்கிறது என்று அலசி ஆராய்கிறீர்கள்.
ஆராய்ந்ததன் பயனாக உங்களுக்குக் கிடைத்ததெல்லாம் அதிர்ச்சிகள்தான். அதிலிருக்கும் சாயம், வெறும் சாயமல்ல, .. அது ஆர்சனிக் என்கிறீர்கள். இசம் என்கிறீர்கள். ஆசிட் என்கிறீர்கள். விஷம் தெரிகிறது, வன்மம் தெரிகிறது என்கிறீர்கள். நீங்கள் மெத்தப்படித்தவர்கள். 
எங்களுக்கு ஸ்வீட்டுடன் காம்பிமெண்டாக கோக் கிடைக்குமா , இல்லை வெறூம் தண்ணிதானா என்ற விவாதம்தான் ஓடுகிறது மனதில். நாங்கள் அறிவிலிகள். 
ஸ்வீட் வாங்கி முடிந்ததும் என் வாகனத்தை பிற வாகனங்கள் மோதாமல் எடுக்க முடியுமா, வீட்டுக்கு வரும்போது ஏதோ வாங்கிவரச் சொன்னாளே என்றெல்லாம் கேள்விகளோடு வெளிவருகிறோம் நாங்கள். இடையே ஸ்வீட் தந்த சில தித்திப்புகளின் நினைவுகள் இதம் தருகிறது எங்களுக்கு. நீங்கள் அதையெல்லாம் விடுத்து, வேறேதோ சிந்தனைகளில் உங்கள் நிகழைத் தொலைத்துக் கொண்டிருக்கிறீர்கள். முன்னர் நடந்த நிஜ நிகழ்வுகளும், ஸ்வீட்டில் இருப்பது என்ன என்று யோசித்து யோசித்து கடை முதலாளி, சமையல்காரர், விற்பவர், சாப்பிட்டவர், விமர்சனம் எழுதினவன் என்று போட்டுத் தாக்குகிறீர்கள். தாக்குவது என்று தீர்மானித்தபின் நாசூக்காவது மண்ணாவது. இருக்கவே இருக்கிறது வார்த்தைகள். வந்து விழுகின்றன உங்களுக்கென்றே....
எங்களுக்கு ஒன்றுமே தெரிவதில்லை. 
நாங்கள் சொல்வது பொதுப்புத்தி. அதாவது அதிகமான பேரால் ஏற்றுக் கொள்ளப்படுவது பொதுப்புத்தி. அதை எதிர்ப்பதே அறிவுஜீவித் தனம். அது எங்களுக்கு வாய்க்கவில்லை. இதையே வேறுவிதமாய் சொல்வதானால் எல்லாவற்றிலும் நேர்சிந்தனையை மட்டுமே நினைத்துக் கொண்டிருப்பது பொதுப்புத்தி. இல்லை அதில் எதாவது விஷம் இருக்கிறதா என்றும் நான் பார்ப்பேன் என்பது உங்கள் இசங்களும், தத்துவார்த்த சிந்தனைகளும் உங்களுக்குச் சொல்லிக் கொடுத்த அல்லது தானாய் உங்களுக்கு அமைந்த வரம். எங்களுக்கு அது கைகூடி வரவில்லை. நாங்கள் சாபம் பெற்றவர்கள்.

ன்னுதான் சொல்றார்

இப்ப என்ன பண்னனுங்கிற

அடப்போங்கன்ன, ஸ்வீட்டுக்குள்ள விஷம் இருந்தா கண்டுக்கக்கூடாதுன்னு இவங்களாம் சொல்றாங்கள்ள.. நம்ம டேபிள் சங்கர் இதே தொழில் இருக்கிறவருண்ணா... அவர் என்ன சொல்றார். விஷம் இருக்கான்னு ஏன் பாக்குறீங்க. இருந்தா என்ன, கலர் நல்லாயிருந்தா, சுத்தியிருக்கிற அலுமினிய பேப்பர் நல்லாயிருந்த ஸ்வீட்டை சாப்பிட சொல்றார்..... படகுகாரர் எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா... கிட்டத்தட்ட ஐநூறு பேர் அவர் படகுல போறாங்க (இன்றைய கணக்கு படி 469) ... அவர் கூட என்ன சொல்றார் பாருங்க.... ஸ்வீட்டில விஷம் இருந்தா பரவாயில்லை. நாம ஸ்வீட் வாங்க கடை முன்னால வண்டிய பார்க் பண்ணும் போது அதை யாரும் இடிக்காதது தான் முக்கியமுன்னு சொல்றார்..... பிறகு நீங்க ஏன் வருத்தப்படுறீங்க.... ஸ்வீட் இனிப்பாக இருக்கான்னு பாக்குறது நேர் சிந்தனை / பொது புத்திங்கீறார். அதில் விஷம் இருக்கான்னு பாக்குறது தப்புங்கிறார்.....பிறகு என்ன...பொது புத்திபடியே செய்ய வேண்டியது தான்.  சாப்பிட்டுட்டு கொஞ்சம் கொஞ்சமா எல்லாரும் அவஸ்தைப்பட வேண்டியது தான்

-oOo-

மிட்டாய் கடையில் மிட்டாய்களின் மேல் ஈ வரக்கூடாது என்று
  • பூச்சி மருந்து அடிப்பது நகைச்சுவை நடிகர் என்றால் அது காமெடி.
  • ஆனால் அதையே ஒரு கதாநாயகன் செய்வது........ என்னத்த சொல்ல ..... 
-oOo-
  • பழம் தருபவன் நண்பன்
  • விஷம் தருபவன் எதிரி
  • பழத்தினுள் விஷத்தை மறைத்து தருபவன்...... துரோகி 
  • பழம் என்று காய்ந்து போன கொட்டையை ஏமாற்றி விற்பது ... மோசடி / பிராடு (ஹி ஹி ஹி இந்த கடைசி பாய்ண்ட் மட்டும் வேற விஷயம்.... புரியவில்லை என்றால் அதிகம் குழம்பிக்கொள்ளாதீர்கள்) 
-oOo-
2004ல் ரஜினி ஒரு படத்திற்கு பூஜை போட்டு விளம்பரம் தந்தார். வார்த்தைகள் ஞாபகம் இல்லை. ஆனால் கிட்டத்தட்ட - என் எதிரிகளை நான் பார்த்துக்கொள்கிறேன். என் நண்பர்களிடமிருந்து என்னை காப்பாற்று. அதே பாணியில் சொல்வதானால்
  • விஷம் தருபவர்களை நாங்கள் பார்த்துக்கொள்கிறேன்.
  • பழம் தருபவர்களிடமிருந்தும், (உள்ளே விஷம் இருக்கிறாதா என்று) பழத்தை ஆராயக்கூடாது என்று சொல்பவர்களிடமிருந்தும், இறைவா, எங்களை காப்பாற்று
இத்தளத்தில் தேட :நீங்கள் வாசிக்க விரும்பும் தகவல்களை தேடி பெறலாம். கீழ்க்கண்ட பெட்டியில் உள்ளிடவும்

தொடர்புடைய தளங்களின் தேட

Loading...